இந்த இடுகையின் ஒன்லைன் - இது என் நண்பனின் ஒருதலைக் காதல் கதை. அதுவும் தோற்றுப்போன காதல். தறுதலையின் ஒரு தலைக் காதல் என அவனைக் கிண்டல் செய்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. காலப் போக்கில் அவனை கிண்டல் செய்வது நின்று அவனைத் தேற்ற முடியாமல் வருந்திய நாட்களும் தான்...
பரத்..என் பள்ளித் தோழன்....அவன் கதை தான் இது.
ஒரு நாள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது அரக்க பறக்க சைக்கிள்ல வேக வேகமா வந்தான். வந்து இறங்கும்போதே "ஃப்ரெண்டு..அவளை மறுபடியும் பாத்துட்டேன்டா.. க்ரெக்டா ஒரு வருஷம் கழிச்சு" என்றான்.
எங்களுக்கு யாரை சொல்கிறான் என ஒன்றும் விளங்கவில்லை..ஒரு வருடம் ஞாபகம் இருக்கும் அளவு யாருடா அது என்று எங்களுக்கு பயங்கர குழப்பம்.
"இப்போ குமரகோட்டத்துல இருந்து வர்றேன்டா...அங்க தான் அவளைப் பாத்தேன்"
காஞ்சிபுரத்த்தில் குமரக்கோட்டம் என்ற பெரிய முருகன் கோவில் இருக்கிறது. அங்கு வருடா வருடம் 7 நாட்கள் சஷ்டி பூஜைகள் நடக்கும். அப்போது மக்கள் கோவிலை 108 முறை சுற்றுவார்கள். நம் பசங்களும் பக்திமானாக மாறி சுற்றிவருவார்கள். அதிலும் வெள்ளி,சனி, ஞாயிறுகளில் பக்திவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.
இவன் அங்கு தான் அவளைப் பார்த்திருக்கிறான்.
"ஃப்ரெண்டு..கரெக்டா போன வருஷம் இதே சஷ்டி அப்போ குமரகோட்டத்துல தான் அவளைப் பாத்தேன். அதுக்கு அப்புறம் ஒரு வருஷம் அவளை பாக்கவே இல்ல...இப்போ மறுபடியும் இன்னைக்கு பாத்தேன். இதுல இருந்தே தெரியல ஏதோ இருக்குன்னு"
"டேய்...நாம சினிமா பாத்து ரொம்ப கெட்டு போய் இருக்கலாம்..அதுக்காக இப்படி கேடு கெட்டத்தனமா யோசிக்காத"
"இல்லடா..எதுக்கு கரெக்டா ஒரு வருஷம் கழிச்சு அதே கோயில்ல பாக்கனும்? நான் சீரியஸா ட்ரை பண்ணப் போறேன்"
இதுக்கு மேல் இவனிடம் பேசி புரிய வைக்க முடியாதென நாங்கள் விட்டுவிட்டோம். எப்படியும் ஒரு வாரத்தில் தெளிந்துவிடுவான் என்று தான் நினைத்தோம். ஆனால் அவன் தீவிரமாகவே இறங்கிவிட்டான்.
அதற்குள் நண்பர்கள் விவரங்கள் சேர்த்துவிட்டார்கள். அவள் பெயர் கிருத்திகாவா கீர்த்தனாவா என்று நினைவில்லை. கிருத்திகா என்றே வைத்துக் கொள்வோம்.
அவள் ஒரு பெண்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். ஏற்கனவே அவள் ஏரியா பையனுடன் சேர்ந்து அவளைச் சில இடங்களில் பார்த்தத்தாகவும் கூறினர். இருந்தாலும் பரத் மனம் தளராமல் இருந்தான்.
தினமும் பள்ளி முடிந்ததும் அவள் வரும் வழியில் ஒரு முச்சந்தியில் காத்திருப்பான். பின் அவள் பின்னாலேயே அவள் வீடு வரை சைக்கிளில் செல்வான். அவள் வீடு காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் இருந்தது. பாலாற்றைத் தாண்டி தினமும் ஐந்து கிலோமீட்ட்ர் அவள் பின்னால் செல்வான்.
அவளுடன் சுற்றிக்கொண்டிருந்ததாக சொல்லப்பட்டவன் பரத் முன்பு படித்த பள்ளியில் ஒன்றாகப் படித்த்வன். பெயர் பிரபு. பரத் அவனுடன் தன் நட்பைப் புதுப்பித்துக் கொண்டான்.
தினமும் அவள் பின்னால் சுற்றுவது அல்லது பிரபுவுடன் இருப்பது என பரத் எங்களுடன் இருக்கும் நேரம் குறைந்துபோனது. நாங்கள் அவளைப் பற்றி ஏதாவது கேட்டாலும் பேச்சை மாற்றிவிடுவான் இல்லாவிடில் கிளம்பிச் சென்றுவிடுவான்.
அவளின் வீட்டிற்கு எங்கள் வீட்டைத் தாண்டி தான் செல்ல வேண்டும். சில நாட்கள் மாலையில் அவள் வீடு வரை சென்றுவிட்டு எங்கள் வீட்டிற்கு வந்து சிறிது நேரம் பேசிவிட்டுச் செல்வான். அவன் வருகை அதிகமாகவே என் அம்மாவிற்கு சந்தேகம் வந்து விட்டது. அவள் பின்னால் இவன் செல்வதையும் அம்மா பார்த்திருக்க் வேண்டும்.
"என்னடா..அவன் தினம் எங்கே போய் வர்றான்?? என்ன பண்றான்?" என்று என்னிடமே கேட்டார்கள். நான் என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் ஏதோ உளறி சமாளித்தேன்.
ஒரு மூன்று மாதங்களுக்கு இதே கதை தொடர்ந்தது. திடீரென ஒரு நாள் அவன் வீட்டிற்கு அடுத்த தெருவில் வந்து கொண்டிருந்த போது நான்கு பேர் சேர்ந்து பரத்தை அடித்துப் போட்டு போய்விட்டனர். அவர்கள் யாரென அவனுக்கு அடையாளமும் தெரியவில்லை. வீட்டில் நண்பனின் பைக்கில் விழுந்துவிட்டதாகப் பொய் சொன்னான். அவளுடைய சித்தப்பாவின் வேலையாக இருக்குமென எங்களுக்கு சந்தேகம்.
அதன்பின் ஒரு நாள் பிரபு பரத்திடம் வந்து அவள் பின்னால் சுற்றுவதை நிறுத்துவிடுமாறும் அவள் வீட்டில் எல்லாம் தெரிந்துவிட்டதாகவும் சொன்னான். இருந்தாலும் இவன் அவள் பின் செல்வதை நிறுத்தவில்லை.
ஒரு நாள் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த போது தினகர் வேகவேகமாக வந்து பரத் தன் கையைக் கிழித்துக் கொண்டதாகவும் ரத்தம் அதிகமாக வீணாகி மருத்துவமனையில் இருப்பதாகவும் சொன்னான்.
நாங்கள் உடனே மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு சென்றால் அவன் சிரித்துக் கொண்டே "ஒன்னும் இல்ல ஃப்ரெண்டு..நீங்க கிளம்புங்க..ஒன்னும் பிரச்சனை இல்லை" என்று காரணத்தைச் சொல்லாமல் எங்களை அனுப்பிவிட்டான். அவன் அம்மா உடனிருந்ததால் எங்களால் விவரமாக ஏதும் கேட்க முடியவில்லை.
காரணத்தை தினகர் சொன்னான். அதற்கு முன் தினம் அவள் பரத்திடம் பேசி இருக்கிறாள். தன் பின்னால் வருவதை நிறுத்திவிடுமாறும் தனக்கு இதில் சற்றும் விருப்பம் இல்லையென்றும் சொல்லிவிட்டு சென்றிருக்கிறாள். பரத் அப்போதே அழுததாகவும் அவனைத் தேற்றி வீட்டில் விட்டதாகவும் தினகர் சொன்னான். வீட்டிற்குச் சென்றதும் இதுபோல் செய்து கொண்டிருக்கிறான். அவனை அறைய வேண்டும் போல் ஆத்திரம் வந்தது.
சாதாரண நாட்களிலேயே வீட்டிற்குச் சென்று அவனனப் பார்க்க முடியாது. அவன் உள்ளே இருக்கும்போதே இல்லையென சொல்லி அனுப்பிவிடுவார்கள். இப்போது வாய்ப்பே இல்லை. அவனாக வந்தால் தான் உண்டு.அவன் தேறி வரக் காத்திருந்தோம்.
ஒரு வாரம் கழித்து பள்ளிக்கு வந்தான். மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது அவனிடம் பேசினோம்.
"இதை ஒழுங்கா இதோட விடுடா..ஆரம்பத்துல இருந்து இத தான் சொல்லிட்டு இருக்கோம். இப்ப்வாவது காது கொடுத்துக் கேளு பரத்..எல்லாம் சினிமால நடக்கிற மாதிரி ஈஸியா நடக்காதுடா...இங்க பாரு"
பரத் தலையை நிமிர்த்தி எங்கள் பேச்சை நிறுத்தினான்.
"விடு ஃப்ரெண்டு, நீங்க சொல்றது சரியாவே இருந்தாலும் எனக்கு மூளைல எதுவும் ஏறாது. அதே மாதிரி நீங்க என் கூடவே இருந்தாலும் நான் படற அவஸ்தை உங்களுக்கு புரியாது"
சொல்லிக்கொண்டே கிளம்பிச் சென்றுவிட்டான்.
இதற்குப் பின் அவன் பேசுவது குறைந்து போனது. முன் போல் விளையாட வருவதோ ஊர் சுற்றுவதோ குறைந்துபோனது. பள்ளி முடிந்ததும் காஞ்சியிலேயே ஒரு கல்லூரியில் சேர்ந்தான். தண்ணியும் தம்மும் அதிகமானது. காலப் போக்கில் ஓரளவு தேறி வந்தாலும் பேச்சில் ஒரு சோகம் எப்போதும் இருந்தது. அவன் காதலிக்க ஆரம்பித்தபோது அவனைக் கிண்டல் செய்துகொண்டிருந்த எங்களால் அதற்குப் பின் அதைப் பற்றிப் பேசக் கூட முடியவில்லை.
இன்றும் அவனைப் பார்க்கும் போதெல்லாம் இதைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவன் சில நேரங்களில் அவளைப் பற்றி புலம்புவதாக நண்பர்கள் சொல்கின்றனர். இப்போது அவள் என்ன செய்கிறாள், எங்கு இருக்கிறாள் என எங்களுக்கு யாருக்கும் தெரியவில்லை. அவனுக்குத் தெரிந்து தான் இருக்கும். ஆனால் அவனிடம் கேட்கும் தைரியம் எங்கள் யாருக்கும் இல்லை.
பரத்
கப்பி | Kappi 15 பின்னூட்டங்கள்
வகை அனுபவம்
அந்த இரவு
நீங்கள் என்றாவது ஒரு இரவு காவல் நிலையத்தில் கழித்திருக்கிறீர்களா?? காவல் நிலையத்தில் நான் கழித்த அந்த இரவு இத்தனை வருடங்களுக்குப் பிறகும் சில தூக்கமில்லா நாட்களில் என்னை அலைகழித்துக் கொண்டிருக்கிறது.
கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி அலைந்து கொண்டிருந்த நாட்கள். டீயும் சிகரெட்டுமே வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தன. பகல் பொழுதுகளில் நண்பர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றதும் ஏற்படும் அமைதி சுயவிரக்கத்தைத் தூண்டுவதாய் இருக்கும். தனிமை மனதைக் கவ்வும். மதிய நேரங்களில் பசி மயக்கமும் அரைத் தூக்கமும் என் பொழுதைக் கழிக்க உதவிய காலம் அது.
ஒரு நாள் இரவு 11 மணிக்கு பி.எஸ்.என்.எல்-இல் வேலை செய்து கொண்டிருந்த நண்பன் சைட்டுக்கு கிளம்பினான். தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த என்னைப் பார்த்து "இங்க அசோக் நகர் சைட் தான்....கூட வர்றியா மக்கா....அரை மணி நேரத்துல வந்துறலாம்" என்றான். எவ்வளவு நேரம் தான் இருட்டை வெறித்துப் பார்த்து படுத்திருப்பது என நானும் கிளம்பினேன்.
உதயம் அருகில் இருந்த டீக்கடையில் ஒரு டீ குடித்துவிட்டு சைட்டுக்குச் சென்றோம். அங்கு யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. அவனுடைய சைட் மேனேஜரும் வரவில்லை. அவர்களை நொந்துகொண்டே ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்த போது போலிஸ் பேட்ரோல் ஜீப் வந்து எங்கள் அருகில் நின்றது.
"இங்க எதுக்கு நின்னுட்டு இருக்கீங்க"
- முன்னால் அமர்ந்திருந்த எஸ்.ஐ கேட்டார்.
"பி.எஸ்.என். எல் ஸ்விட்ச் சைட் சார்..ஆளுங்க இன்னும் வரல..வெயிட் பண்ணிட்டு இருக்கோம்"
"ஐடி கார்டை காட்டு"
என் நண்பன் தன் கார்டை எடுத்துக் காட்டினான்,. நான் கல்லூரி ஐடி கார்டாவது காட்டலாம் என பேண்டைத் துழாவினால் அதுவும் இல்லை. கார்ட் பர்ஸில் இருக்கிறது. பர்ஸ் வேறு பேண்டில் இருக்கிறது.
"காலேஜ் ஐடி கார்ட் வீட்டுல இருக்கு சார். நான் இப்பதான் வேலை தேடிட்டு இருக்கேன்"
"லைசென்ஸ் வச்சுருக்கியா"
"என் ஃப்ரண்டு தான் சார்..ஒன்னா தான் தங்கி இருக்கோம்..துணைக்கு கூட்டிட்டு வந்தேன் சார்" - இது என் நண்பன்.
"இருப்பா..எதுனா ஐடெண்டிபிகேஷனுக்கு வேணும்ல"
"இல்ல சார்..எல்லாமே வேற ஒரு பேண்டல இருக்கு"
"சரி ஜீப்ல ஏறு"
"சார் இல்ல சார்...இப்ப நான் போய் வேணா எடுத்துட்டு வந்துடறேன் சார்"
"அதெல்லாம் ஒன்னும் வேணாம்..ஜீப்ல ஏறு. முத்து இவரை ஜீப்ல ஏத்து. நீ ஐடிகார்டை எடுத்துட்டு வந்து ஸ்டேஷன்ல காட்டிட்டு வந்து கூட்டிட்டு போ"
'பணம் வேணும்னா கேட்டு வாங்கிட்டுப் போகாம எதுக்கு இப்படி உயிர வாங்கறாங்க' என நினைத்துக் கொண்டிருக்கும்போதே ஜீப்பில் இருந்து இறங்கிய கான்ஸ்டபிள் என்னை தள்ளிக்கொண்டே ஜீப்பில் ஏற்றிவிட்டார்.
ஜீப்பில் இந்தப் பக்கம் கஞ்சா குடிக்கி, இந்த பக்கம் பிக் பாக்கெட். என் நண்பன் எஸ்.ஐ யிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் போதே ஜீப்பைக் கிளப்பிவிட்டார்கள்.
அந்த ஏரியா மொத்தமும் சுற்றிவிட்டு எஸ்.ஐ ஒரு இடத்தில் இறங்கிக் கொண்டார். அவர் வீடாக இருக்கவேண்டும்.
ஸ்டேஷனுக்குச் சென்றதும் மற்ற இருவரிடமும் ஒரு கையெழுத்தையும் கைநாட்டையும் வாங்கிக்கொண்டு செல்லில் அடைத்துவிட்டார்கள். நான் வாசல் அருகிலேயே சுவரோடு ஒட்டி நின்றுகொண்டிருந்தேன்.
ஏட்டிடம் "சார், இப்போதான் சார் வேலை தேடிட்டு இருக்கேன். என் ஃப்ரெண்ட் ஐடி கார்டை இப்போ கொண்டுவந்துடுவான் சார்" என்று கெஞ்ச ஆரம்பித்தேன்.
ஏட்டும் பாவப்பட்டு மூலையில் இருந்த பெஞ்சில் உட்காரச் சொன்னார். பத்து நிமிடத்தில் என் நண்பன் வீட்டிற்குச் சென்று என் கல்லூரி ஐடி கார்டை எடுத்து வந்துவிட்டான். அதை வாங்கிப் பார்த்த ஏட்டு திரும்பி என்னைப் பார்த்துவிட்டு விட்டத்தைப் பார்த்து ஏதோ யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.
"எதுக்கும் எஸ். ஐ ஐயா வந்துடட்டும். ஏன்னா அவரைக் கேக்காம உன்னை அனுப்பிட்டா என் பேரு ரிப்பேராயிடும்..புதுசா வந்த் ஆளு வேற"
"காலைல இண்டர்வ்யூ வேற இருக்கு சார்"
"அதெல்லாம் கரெக்டுப்பா..ஆனா அவரு மூனு பேர் ஏத்தியாந்ததுல ஒருத்தன் எங்கன்னு கேட்டா நான் என்ன சொல்றது? இப்ப வந்துடுவாரு வெயிட் பண்ணு" என்றபடியே அவர் சீட்டிற்கு சென்று அமர்ந்து கொண்டார்.நண்பனை வெளியே காக்க வைத்துவிட்டார்கள்.
மணி இரண்டு. எஸ்.ஐ இன்னும் வந்த பாடில்லை. இப்படி வந்து உட்கார்ந்திருப்பதற்கு தெரிந்தால் வீட்டில் என்ன நடக்கும் என நினைக்கும்போதே தலை சுற்றியது. நண்பர்கள் ஓட்டுவதற்கு இன்னொரு விஷயம் கிடைத்துவிட்டது. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறதோ. ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்திருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது. ஒரு வேளை என் மேல் தான் தப்போ என முதல்முறையாக எனக்கு என் மேலிருந்த நம்பிக்கை தளர்ச்சியடைந்தது.
சிறிது நேரம் கழித்து என்னுடன் ஏற்றிவரப்பட்ட தாடி ஒருவன் ஏட்டைக் கூப்பிட்டான். அவர்கள் ஏதோ பேசிக் கொண்டார்கள். "இந்த அறிவு அங்கேயே வந்துருக்கனும்..சரி கிளம்பு" என செல்லைத் திறந்து அவனை அனுப்பிவிட்டார். சீட்டிற்கு வந்ததும் சட்டைப் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக்கொண்டார்.
அவன் வெளியே சென்றதைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பன் உள்ளே வரும்போதே பர்ஸைக் கையில் கொண்டுவந்தான். ஆனால் அதைக் கண்டுகொள்ளாதவர் போல ஏட்டு அவனை வெளியே காத்திருக்குமாறு அனுப்பிவிட்டார். அன்றைய தேவை பூர்த்தியாகிவிட்டது போலும். ஏதோ அழுக்கேறிய கோப்பை எடுத்து புரட்ட ஆரம்பித்துவிட்டார்.
ஆளாளுக்கு சேர் டேபிள்களை இழுத்துப் போட்டு உறங்க ஆரம்பித்து விட்டார்கள். மூன்று மணி நேரம் ஸ்டேஷன் சுவற்றையே வெறித்துப் பார்த்து உட்கார்ந்திருந்தேன்.
சரியாக ஐந்தரை மணிக்கு எஸ்.ஐ வந்து சேர்ந்தார். அலாரம் வைத்து பாதி உறக்கத்தில் எழுந்து வந்தது அவர் கண்களில் தெரிந்தது,
உள்ளே வரும்போதே பெஞ்சில் நான் அமர்ந்திருப்பதைக் கண்டவர் "இன்னும் ஏன்யா இவனை உட்கார வச்சிருங்கீங்க" என என்னை அப்போதே அவர் போகச் சொல்லி நானாக இங்கு இருக்கும் தோரணையில் கேட்டார்.
"இல்ல சார்..நீங்க வர்றதுக்கு தான் வெயிட் பண்ணோம்...சரி நீ கிளம்புப்பா..சார் ஐடி கார்ட் பாக்கறீங்களா சார்" - ஏட்டு அவர் டேபிளில் இருந்த என் கார்டை எடுத்து வந்து காட்டினார்.
அதை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றுவிட்டார். ஏட்டும் என்னிடம் கார்டை கொடுத்துவிட்டு எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அவர் பின்னாலேயே சென்றுவிட்டார்.
ஒருவ்ழியாக வெளியே விட்டார்களே என நானும் என் நண்பனுமாக வீடு திரும்பினோம். ஒரு பெட்டி கேஸோ எய்ட்டியோ போடாமல் விட்டது என் நல்ல நேரம்.
அன்று என்னை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றதால் சினிமாவில் வருவது போல் வாழ்க்கையில் பெரிய மாற்றமோ பாதிப்போ ஏற்படவில்லை. ஆனாலும் ஒரு மன வேதனை இருந்து கொண்டு தானிருக்கிறது.
ஜீப்பில் ஏற்றும்போதோ இல்லை ஸ்டேஷனுக்கு சென்ற பிறகோ திருவல்லிகேணியில் எஸ்.ஐயாக இருந்த என் மாமாவின் நண்பர் பெயரைச் சொல்லி இருக்கலாம். அதுவும் கூட தோன்றவில்லை. ஒருவேளை ஒரு வேலையில் இருந்திருந்தால் தைரியமாக் சொல்லி இருந்திருப்பேன். அப்போதும் இதை முதலிலே சொல்லியிருக்கலாமே என ஒப்புக்குச் சொல்லிவிட்டு அனுப்பியிருப்பார்கள்.
இந்த விஷயமும் என் நண்பர்கள் நான்கைந்து பேரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. மற்றவர்களுக்கு தெரிந்தால் என்ன இருந்தாலும் ஸ்டேஷனில் ஒரு இரவைக் கழித்தவன் எனத் கொஞ்சம் கேவலமாகத் தான் பார்ப்பார்கள். இல்லாவிட்டாலும் எனக்கு அப்படித் தோன்றும். தோன்றி இருக்கிறது.
இத்தனை நாட்கள் கழித்து உங்களிடம் கொட்டிவிட்டேன். நீங்களும் இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள்.
கப்பி | Kappi 32 பின்னூட்டங்கள்
வகை சிறுகதை
நாகை சிவாவின் கட்டளைக்கிணங்க!!
சீறும் புலி நாகை சிவாவின் ஆணையை(ஏலேய்! கப்பி,
உன் காலை கொஞ்சம் காட்டு.....) ஏற்று அன்புத் தம்பி என் காலைக் காட்டுகிறேன்...
அப்பாடா..அண்ணன் ஆசையை நிறைவேத்தின அப்புறம் தான் நிம்மதியா இருக்கு..
கப்பி | Kappi 28 பின்னூட்டங்கள்
"ஒரு புளியமரத்தின் கதை"யிலிருந்து
"...என்னுடைய பங்கு செலுத்தப்படுவதற்குச் சந்தர்ப்பம் இல்லாதவாறு இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டதானது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்திருந்த சமயம் அது. இதன் விளைவுதானோ என்னவோ, நண்பர்களுடன் நானும் தாமு சம்பவத்தின் விளைவுகளிலும், அது சம்பவமான செய்திகளிலும் மிகுந்த அக்கறை செலுத்தலானேன். மாலை வேளைகளில் பஜார் ஓரங்களில் நின்று கூடிக்கூடிப் பேசும் குழுக்களில் நானும் வேண்டாத விருந்தாளியாக ஒண்டிக்கொண்டேன். என் மீது அங்கு கவிந்த பெரியவர்களின் அலட்சியப் பார்வையை அப்பொழுது அவ்வளவாக எனக்கு பொருட்படுத்தத் தெரிந்திருக்கவில்லை. நண்பர்களுக்கு எட்டாத செய்திகளைச் சேகரித்து அவர்களுக்கு அவற்றை முதலில் அறிவிப்பவனாய் இருக்கவேண்டுமென்றே அப்பொழுது ஆசைப்பட்டேன். இது போன்ற விவகாரங்களைப் பேசும்போது பெரியவர்களுக்கு ஏற்படும் முகபாவங்களைக் கூர்ந்து கவனித்து நானும் முடிந்த வரையிலும் அம்முகபாவங்களை என் முகத்திலும் மிளிர விட்டுக் கொண்டேன். அவர்களுடைய வார்த்தைச் சேர்க்கைகளையும் அபிப்ராயங்களையும் என்னுடைய சரக்குப் போலவே எங்கும் பிரஸ்தாபித்துக் கொண்டு சென்றேன். ஒரு பொறுப்புள்ள மனிதனாகவும், சீரழியும் நிலைமைகளுக்குக் கவலைப்படுபவனாகவும் காட்டிக்கொள்ள வேண்டியது எனக்கு அந்த வயசில் ஏதோ ஒருவிதத்தில் தேவையாக இருந்தது.
இதனால் தாமுவுக்கும் காதருக்கும் ஏற்பட்ட விரோதத்தின் பூர்விக வரலாற்றையும், அதையொட்டி அவர்களுக்குள் அவ்வப்போது ஏற்பட்டிருந்த உரசல்களையும் பலர் வாய்மூலமாகவும் சிறுகச்சிறுகச் சேகரித்துக் கொண்டு வந்தேன். அன்றாட சேகரங்களை, பின்கட்டில் பெரிய மனிதனாய் அமர்ந்து என் சகோதரிகள் முன்னால் அவிழ்க்கையில் என்னை அறியாமலே கொஞ்சம் மிகைப்படுத்தியே அவிழ்த்துக் கொண்டு சென்றேன். வீர சாகசங்களை சோடைதட்டிப் போகாமல் சேர்த்தும் சரிக்கட்டியும் சொல்லலானேன். ஒவ்வொன்றும் என் ஆசைப்படி எப்படி இருந்திருக்க வேண்டும் அல்லது எப்படி நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கற்பனை செய்துகொண்டேனோ அவ்வாறே நிகழ்ந்ததாயும், இருந்த்தாகவும் சொல்வதில் அப்பொழுது என் மனசு மிகுந்த திருப்தி அடைந்தது.
இப்பொழுது பல வருடங்களுக்குப் பின்னால் அந்தக் கதையெல்லாம் உங்களுக்குச் சொல்கிறபோதும் அந்தக் கதையயையெல்லாம் உங்களுக்குச் சொல்கிறபோதும் அந்த மனோபாவத்திலிருந்து அல்லது பலஹீனத்திலிருந்து, பூரண விடுதலை தேடிக் கொண்டுவிட்டேன் என்று சொல்ல முடியாது. உலக வழக்கைக் கற்பனைக்குள் வகைப்படுத்துவது சாத்தியமற்ற காரியமாக இருக்க, கற்பனைக்குள் உலகத்தைத் திணித்துத் திருப்தி தேடிக்கொள்வதே நாம் செய்யக்கூடியதாய் இருக்கிறது. கடைசி வரையிலும் நம் முயற்சிகள் அனைத்தும் செருப்புக்குக் காலை வெட்டுகிற காரியமாகத்தான் இருக்கும் போலும்...."
- சுந்தர ராமசாமி, ஒரு புளியமரத்தின் கதை.
கப்பி | Kappi 2 பின்னூட்டங்கள்
மரணம்! - சிறுகதை
'என்ன எழவுடா இது...மனுஷனுக்கு ஒரு மரியாதை இல்லாம போயிடுச்சு... நாளைக்கு காலைல கல்கத்தா போறதுக்கு இப்போ 8 மணிக்கு சொல்றானுங்க..விவஸ்தை கெட்டவனுங்க' எனப் புலம்பிக் கொண்டே தெரு முனையில் இருக்கும் ஆட்டோ
ஸ்டாண்டிற்கு வந்து சேர்ந்திருந்தேன்.
"காலைல அஞ்சு மணிக்கு ஏர்போர்ட் போகனும்"
இருந்த 2 ஆட்டோ காரர்களும் தங்கள் பார்வையிலேயே யார் போவது என முடிவு செய்து
கொண்டதும் ஒருவர் "போலாம் சார்..காலைல வீட்டாண்ட வந்துடறேன்" என்றார்.
"எவ்ளோ கேக்கறீங்க"
"கொடுங்க சார்..காலைல எழுந்து வரணும். 180 கொடுங்க"
"வடபழனில இருந்து ஏர்போர்ட் போக 180 ரூபாயா?? டாக்ஸியே இத விட கம்மியா வருமே"
"காலங்காத்தால சார்..ரிடர்ன் வரும்போது காலியா தான் வரனும்..150 கொடுங்க...பகல்லயே 120க்கு போறோம்"
"சரி காலைல கரெக்டா அஞ்சு மணிக்கு வந்துடுங்க'" என உறுதி செய்துவிட்டு என் பேரம் பேசும் திறமையை நொந்தபடியே வீடு திரும்பினேன்.
காலையில் ஆட்டோகாரரும் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தார். அவரை பத்து நிமிடம் காக்க வைத்து அரக்க பறக்கக் கிளம்பினேன்.
மார்கழி மாத குளிர் லேசாக நடுங்க வைத்தது. டிரைவர் டிராபிக் அற்ற அதிகாலை சாலையில் ஆட்டோவை விரட்டிக் கொண்டிருந்தார். வெறிச்சோடிய சாலைகளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே எவ்வளவு சீக்கிரம் ஊர் திரும்ப முடியும் என யோசித்துக் கொண்டிருந்தேன்.
ஏர்போர்ட் உள்ளே நுழைந்தவுடன் "சார், மயக்கம் வர மாதிரி இருக்கு...ஒரு நிமிஷம் இருங்க" என்றப்டியே டிரைவர் வண்டியை ஓரம் கட்டினார்..
"என்னங்க..ப்ரஷர் இருக்கா?? என்ன பண்ணுது"
"தெரில சார்..ப்ரஷர்லாம் இல்ல...மயக்கமா வருது..ஒன்னும் இல்ல சார் ஒரு ரெண்டு நிமிஷம்" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே சீட்டில் சரிந்து விழுந்தார்.
'என்னடா வம்பாப் போச்சே'னு நினைச்சுக்கிட்டே கண்கள் சொருகிக்கிடந்தவரை .தட்டி எழுப்பினால் ஒரு அசைவும் இல்லை.தோளைப் பிடித்து உலுக்கினால் தலை சரிந்தது.
அதுக்குள்ள ஏர்போர்ட் டாக்ஸி ஸ்டாண்டில் இருந்து டிரைவர் இருவர் வந்தனர்.
"என்ன சார் ஆச்சு"
"தெரியலீங்க..நல்லா ஓட்டிட்டு வந்தாரு. உள்ள வந்ததும் மயக்கமா வருதுன்னு ஓரங்கட்டினாரு...அப்படியே சரிஞ்சுட்டாரு"
"உயிரோடதாம்பா இருக்காரு" இன்னொருத்தர் டிரைவரை செக் பண்ணி சர்டிபிகேட் கொடுத்தார்.
"இங்க ஏர்போர்ட் உள்ள டாக்டர் இருப்பாங்களா?"
"தெரியல சார். மெடிக்கல் ஷாப் ஒன்னு இருக்கு"
"கண்டிப்பா டாக்டர் இருக்கனும்ங்க"
அதற்குள் இன்னொரு ஆட்டோகாரர் எங்களைப் பார்த்து நிறுத்தினார்.
"என்னாச்சு?"
"திடீர்னு மயங்கி விழுந்துட்டாரு"
"எந்த ஏரியா ஆட்டோ?"
"வடபழனிங்க..குமரன் காலனி..இஙக உள்ள யாருனா டாக்டர் இருப்பாங்களா? இல்ல பக்கத்துல எதுனா ஆஸ்பிடல் இருக்கா? நீங்க இந்த ஆட்டோவ ஓட்டிட்டு வர்றீங்களா?"
"தெரியல சார்..உள்ள சவாரி வெயிட்டிங்..போகனும் சார்" சொல்லிக்கொண்டே ஆட்டோவை எடுத்து கிளம்பிட்டான்.
"உங்களுக்கு எப்ப சார் ப்ளைட்டு?"
"ஆறரைக்குங்க...இன்னும் 40 நிமிஷம் இருக்கு"
"நீங்க உள்ள போய் டாக்டர் யாருனா இருக்காங்களா விசாரிங்க சார்..நாங்க இவரைப் பாத்துக்கறோம்".
மூன்று பேருமாக சேர்ந்து டிரைவரைத் தூக்கி பின் சீட்டில் படுக்க வைத்தோம். பையைத் தூக்கிட்டுப் போறதா இல்ல அங்கயே போட்டுட்டுப் போறதானு ஒரு செகண்ட் யோசிச்சு அவங்களையே பாத்துக்க சொல்லிட்டு குறுக்கால ஏர்போர்ட் உள்ளே ஓடினேன்.
'ப்ளைட்ட விட்டுட்டா ஆபிஸ்ல என்னடா பதில் சொல்லுவே?'னு உள்ள இருந்து பட்சி கேள்வி கேக்க ஆரம்பிச்சுடுச்சு.
மெடிக்கல் ஷாப்பில் வெளியே விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. கண்ணாடிக் கதவின் வழியே பார்த்தால் உள்ளே ஒருவர் இழுத்து போர்த்து தூங்கிக் கொண்டிருந்தார். கதவைத் தட்டி அவரை எழுப்பி இங்கு டாக்டர் இருப்பாரா எனக் கேட்டதற்கு அந்த கட்டிடத்தின் மறுமுனையைக் காட்டிவிட்டு மீண்டும் அவர் கனவை கன்ட்டினியூ பண்ண போயிட்டார்.
அவர் கைக்காட்டின இடத்துக்கு ஓடினா அங்க யாரும் இல்ல. டாக்டர் பேரைப் போட்டு ஒரு போர்ட் மட்டும் இருக்கு. உள்ளே யாரும் இருக்க மாதிரி தெரியலை. இன்னைக்கு நமக்கு ஆப்படிக்கற முடிவோட் தான் எல்லாரும் கிளம்பியிருக்காங்க-னு நொந்துகிட்டே திரும்பினா பின்னாடி ஒரு செக்யூரிட்டி முறைச்சு பாத்துட்டு நிக்கறாரு.
"ஆட்டோ டிரைவர் மயங்கி விழுந்துட்டாரு. இங்க டாக்டர் இல்லையா??"
"இருந்தா இங்க தான் இருப்பாரு..நீங்க ஏர்போர்ட் மேனேஜரைப் போய் பாருங்க' னு மறுபடி எதிர் மூலைக்கு கையைக் காட்டினார். நல்ல வேளையாக மேனேஜர் அவர் அலுவலகத்தில் இருந்தார்.
"சார் ஆட்டோ டிரைவர் மயங்கி விழுந்துட்டார். டாக்டர் அங்க ரூம்ல இல்ல"
"என்ன ஆச்சு?? டிரைவர் இப்ப எங்க இருக்காரு.."
"அங்க எண்ட்ரன்ஸ்ல இருக்காரு சார்..ப்ரஷ்ரா இருக்கும்னு நினைக்கறேன்"
"அங்க யாருனா இருக்காங்களா?"
"டாக்ஸி டிரைவர் ரெண்டு பேர் இருக்காங்க"
"அப்ப ஒன்னு பண்ணுங்க...அவங்களை ஓட்ட சொல்லி எப்படியாவது ஆட்டோவை இங்க கொண்டுவந்துடுங்க..ஏன்னா டாக்டர் அஙக வந்து மறுபடி அவரை இங்க கொண்டு வரதுக்கு லேட் ஆகும். நேரா அங்க டாக்டர் ரூமுக்கு கூட்டிட்டு போயிட்டா சீக்கிரம் ட்ரீட் பண்ணலாம்'"
அடப்பாவிகளா இன்னைக்கு ஆட்டோவும் ஓட்ட வச்சுடுவாங்க போல-னு நினைச்சுக்கிட்டே மறுபடி இங்க ஓடி வந்தேன்.
அங்கே இன்னொரு ஆட்டோ காரர் வண்டிய நிறுத்தி டாக்ஸிகாரங்க கிட்ட பேசிட்டு இருந்தார்.
"உள்ள டாக்டர் இருக்காருங்க...இவரை அங்கேயே கூட்டிட்டு வரச் சொன்னாங்க..நீங்க இந்த வண்டியை ஒட்டிட்டு வர்றீங்களா" என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே "என் வண்டியை இங்க நிறுத்திட்டு போனா ஃபைன் போட்ருவாங்க சார்" என்றபடியே அவன் ஆட்டோவை எடுத்துக்கிட்டு கிளம்பிட்டான்.
அதுக்குள்ள அந்த டாக்ஸி டிரைவர்ல ஒருத்தர் அவரே ஒட்டறேன்னு வண்டியக் கிளப்பினார். இருக்கிற பிரச்சனை போதும் ஆட்டோவையும் கொண்டு போய் எங்கயாவது முட்டிடக் கூடாதுனு நினைச்சுக்கிட்டே பையைத் தூக்கிட்டு மறுபடி குறுக்கு வழில ஓடினேன்.
சொன்ன மாதிரியே ஏர்போர்ட் மேனேஜர் டாக்டரோட காத்துக்கிட்டிருந்தார். ஆட்டோவில் இருந்து டிரைவரைப் பிடித்து இறக்கு அங்க கீழேயே சுவரோரம் படுக்க வைத்ததும் டாக்டர் தன் வேலையை ஆரம்பித்தார்.
"இவர் எந்த ஏரியாங்க?"
"வடபழனி சார்"
"எப்படியாவது அவங்களுக்கு இன்ஃபார்ம் பண்ண முடியுமா?'
"என் ஃப்ரண்டுக்கு கால் பண்ணி சொல்றேன் சார். எங்க வீட்டு பக்கத்து ஸ்டாண்ட் தான்" என்றபடி என் நண்பனை அழைத்து நிலைமையை விளக்கி அங்கு தகவல் சொல்லும்படி கூறினேன்.
"உங்களுக்கு எந்த ஃப்ளைட்?? லேட் ஆகிடப்போது"
"6.30 சார்..இன்னும் 20 நிமிஷம் இருக்கு"
"நீங்க கிளம்புங்க..இனி நாங்க பாத்துக்கறோம்"
நான் அந்த டாக்ஸி டிரைவர்களிடம் திரும்பி "ரொம்ப தாங்க்ஸ் பாஸ்..இவருக்கு ஆட்டோ பணம் தரனும்" என்றபடியே பர்ஸை எடுத்தேன்.
"இருக்கட்டும் சார். நல்லவேளை ஏர்போர்ட் உள்ளே வந்து மயங்கினார். வர்ற வழில GST ரோட்டிலேயே மயங்கியிருந்தா ஒன்னுமே பண்ணி இருக்க முடியாது...மேனேஜர்ட்ட கொடுத்துடுங்க..அவர் கொடுத்துடுவார்" என்றார் டாக்ஸி.
நான் இருநூறு ரூபாயை எடுத்து மேனேஜரிடம் கொடுத்தபடியே மீண்டும் நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன்.
மேனேஜர் என்னுடனேயே வந்து வரிசையில் நிற்காமல் நேரத்துக்கு செக்-இன் செய்ய உதவினார்.
நல்ல்படியா அவரை டாக்டர்ட்ட சேர்த்துட்டு நேரத்துக்கு ஃப்ளைட் பிடிச்சாச்சுன்னு திருப்தியுடன் கிளம்பினேன்.
கல்கத்தா சென்றதும் அங்கு வேலை பளுவில் இந்த சம்பவத்தை மறந்தாகிவிட்டது. இடையில் ஒரு முறை ந்ண்பனிடம் செல்லில் பேசும் போது அவனிடம் கேட்டதற்கு அவனுக்கும் அவர் என்ன ஆனார் எனத் தெரியவில்லை.
இருபது நாள் கழித்து திரும்பி வந்தேன். வீட்டிற்கு வந்து இறங்கும் போதே ஆட்டோ ஸ்டாண்டைப் பார்த்தேன். யாரும் இல்லை.
அனறு மாலை ஸ்டாண்டில் பேரம் பேசிய போது இருந்த இன்னொருவர் இருந்தார். போய் விசாரிக்கலாம் என சென்றேன்.
"அன்னைக்கு ஏர்போர்ட்ல மயங்கி விழுந்தாரே..அவர் இப்போ எப்படி இருக்கார்?"
"நீங்க தானே சார் அன்னைக்கு ஏர்போர்ட் சவாரி போனது?"
"ஆமாங்க..அன்னைக்கு நைட் கேக்க வந்தப்போ நீங்க கூட இருந்தீங்களே"
"ஆமா சார்..அவன் இறந்துட்டான் சார்"
"என்னங்க சொல்றீங்க"
"ஆமா சார்..உங்கள செவ்வாய் கிழமை உட்டுட்டு வந்தான்ல..அதுக்கு அடுத்த சனிக்கிழமை செத்துட்டான் சார்"
"எப்படிங்க..என்னாச்சு?"
"ஹார்ட் அட்டாக்ங்க..ரெண்டாவது அட்டாக்..அன்னைக்கு உங்க ப்ரண்ட் வந்து சொன்னதும் போய் கூட்டியாந்தோம். அதுக்கப்புறம் ரெண்டு நாள் பெட்ல இருந்துட்டு வீட்டுக்கு வந்தான். வந்தும் வண்டி எடுக்கல..அதுக்குள்ள இன்னொரு அட்டாக்...மொத அட்டாக் வந்தப்புறமும் அலைச்சல் குறைக்கல...ரெண்டு பொட்டைப் ப்ள்ளளங்க வேற சார்...உடம்பு ஒத்துக்கலன்னா வேலைய குறைச்சுக்கனும்..அதுக்கப்புறம் தானே சார் பணம்..அன்னைக்கு கூட மொதல்ல நான் தான் வரேன்னேன். அவனா தான் போறேன்னான்.."
"என்னங்க...சரியாயிட்டிருப்பாரு..வந்து பாக்கலாம்னு வந்தேங்க..இன்னைக்கு தான் ஊருல இருந்து வந்தேன்'
"நீங்க இல்லைனா அன்னைக்கே போய் சேர்ந்திருப்பான் சார்...ரொம்ப தாஙக்ஸ் சார் அன்னைக்கு அவனை பத்திரமா டாக்டர்ட்ட சேர்த்து விட்டதுக்கு"
நான் என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் வீடு நோக்கி நடந்தேன்.
கப்பி | Kappi 40 பின்னூட்டங்கள்
நரிகளுக்கு நடுவில்!
என் நண்பன் SnoozenBooze-ன் ஆங்கிலப் புலம்பலின் தமிழாக்கம். என் முதல் மொழிப்பெயர்ப்பு முயற்சி. நண்பனுக்கு அலுவலகத்தில் ஆப்பு மேல் ஆப்பு...நமக்கும் same blood..அதன் தாக்கம் தான் இது!!
நரிகளுக்கு நடுவில்!
இது என் இடமல்ல!
நரிகளுக்கு நடுவில்
மானாக உணர்கிறேன்!
மான்,நரி,சிங்கம், சிறுத்தை,
கீரி, பாம்பு
அனைத்திற்கும் ஒரே கூண்டு!
தனித்தன்மை இழந்து
தன்பலம் மறந்து
மயக்கத்திலே திரிகின்றன!
கூண்டிலுள்ள மற்றொரு மான்
என்னையும் நரியென
எண்ணுகிறது!
போலிப் புன்னகையும்
முகத்துதியும் இவ்விடத்தை
வெறுக்கச் செய்கின்றன.
இது என் இடமல்ல!
இங்கிருக்க எனக்கு
விருப்பமல்ல!
என் இடத்தில்
மனம் மகிழும் போது
வாய்விட்டு சிரிக்கலாம்!
சோகம் கவிழ்கையில்
புன்னகை புரியலாம்!
போலி வேடங்கள்
ஏதும் பூணாமல்
'நானாக' இருக்கலாம்!
கோபத்தை முகத்திலும்
அன்பைக் கண்களிலும்
வெளிக்காட்டலாம்!
கேளிக்கையும் கேலியும்
கூத்தாடும் அரங்கம்!
ஒவ்வொரு பகலும்
பல கதைகளையும்
ஒவ்வொரு இரவும்
பல கனவுகளையும்
புனையும் களம்!
ஒவ்வொரு நாளும்
அதே நிகழ்வுகள்!
ஆனால்
புதுப்புது அனுபவங்கள்!
அந்த இடம்
இந்நாட்டு மன்னர்கள்
கடைசி வரிசையில் அமர்ந்து
ஆட்சி செய்த
புண்ணியபூமி!!!
கப்பி | Kappi 12 பின்னூட்டங்கள்
வகை கவித..
'சுகா'னுபவங்கள் ஆறு
"கோட்டோவியக் கோ" சுகாவின் ஆணையை ஏற்று என்னுடைய 'அலுக்காத ஆறு'..... எத்தனை நாட்கள் ஆனாலும் எத்தனை முறையானாலும் எனக்கு சலிப்பு ஏற்படுத்தாத இந்த ஆறு விஷயங்கள் குறித்து சிறிது விரிவாக:
1.எனக்கு நினைவு தெரிந்து என் மூன்றாம் வகுப்பிலிருந்து நான் சூப்பர் ஸ்டார் ரசிகன். தலைவரின் எந்த படமாகயிருந்தாலும் எத்தனை முறை பார்த்திருந்தாலும் அதை மீண்டும் பார்ப்பது என்றைக்கும் அலுக்காது. சிறு வயதில் 'மாப்பிள்ளை'யில் ஆரம்பித்து த்லைவரின் படங்களை வரிசையாக சொல்வதில் எங்களுக்குள் போட்டியே நடக்கும். ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் தலைவரின் இண்ட்ரோ பாடலைப் பக்கத்து வீட்டு அண்ணனை எழுதித் தரச் சொல்லி மனப்பாடம் செய்வோம்.
கல்லூரியில் புத்தாண்டு, பொங்கல்,தீபாவளி, ஹாஸ்டல் டே போன்ற நாட்களில் வருடா வருடம் தவறாமல் திரையிடப்படும் படம் பாட்ஷா தான். அந்த நான்கு வருடங்களில் பாட்ஷா வை மட்டும் குறைந்தப்ட்சம் 20 முறையாவது திரையிட்டிருப்போம்.
தலைவர் சில சமயங்களில் சொதப்பும் போது அவருக்காக வக்காலத்து வாங்கி நண்பர்களுடன் சண்டையிடுவதும் தனி சுகம் தான்.
2. ஒவ்வொரு முறையும் பயணம் நமக்கு புது அனுபவத்தைத் தருகிறது. ஜன்னல் ஓர சீட்டில் பேருந்து பயணம் நம் பயணத்திற்கான காரணத்தையே மறக்க வைத்துவிடுகிறது. 'மாமா மடியில் உக்காந்துக்கோடா' என நம்மை அடுத்தவர் மடியில் உட்கார வைத்த நாட்களில் இருந்து பேருந்து பயணம் எப்போதும் குதூகலம் தருவதாகவே இருக்கிறது. அதிலும் கூட்ட நெரிசல் மிக்க பண்டிகை நாட்களில் சக பயணிகளை பார்த்துக் கொண்டு வந்தாலே நேரம் கடந்துவிடுகிறது.
நண்பர்களுடன் இரண்டு மாதத்துக்கு ஒரு முறையாவது டூர் அடிக்காவிட்டால் மனதில் ஒரு சோகம் குடி கொண்டுவிடுகிறது.
3.எல்லாவற்றையும் மறக்க வைக்கும் சக்தி கொண்ட கிரிக்கெட். பள்ளி விடுமுறை நாட்களில் காலை 6 மணிக்கே க்ரவுண்டுக்கு போய் ஒரு ஸ்டம்பை நட்டு பிட்ச் பிடிப்பதில் ஆரம்பித்து மாலை இருட்டுகிற வரை விளையாடி நாள் முழுக்க கிரிக்கெட்டே வாழ்க்கையாக இருக்கும்,
கல்லூரியிலும் ஹாஸ்டலில் நுழையும்போதே கைகள் பேட்டையும் பந்தையும் தேட ஆரம்பித்துவிடும். பரிட்சை நாட்களிலும் மதியம் பரிட்சை என்றால காலையில் கிரிக்கெட் விளையாடி பல பேரின் வயிற்றெரிச்சலைக் கிளப்புவோம். வருடாவருடம் விடுதியில் நடத்தும் வெள்ளொளி கிரிக்கெட் போட்டியும் அப்போது கொடுக்கும் நேர்முக வர்ண்னைகளும் அம்பயரிங்கில் நடக்கும் தகராறுகளும் என்றைக்கும் மறக்க முடியாதவை.
4.குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது. இதை விட எந்த விளையாட்டும் மகிழ்ச்சியைத் தர முடியாது. அதிலும் கல்யாண சமயங்களிலும் விடுமுறைகளிலும் அவர்களுடன் விளையாடுவதும், திடீரென காரணமே இல்லாமல் அழும் குழந்தையை சமாதானம் செய்வதும், அவர்களுக்குள் நடக்கும் சண்டைகளுக்கு சமரசம் செய்வதும் தரும் புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் வேறெதிலும் கிடைக்காது.
5.வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஒரு மிகச் சிறந்த பொழுதுபோக்கு. பார்த்துக் கொண்டிருக்கும்போதே இருள் கவிந்து நிறம் மாறும் மாலை வேளைகளில் மொட்டை மாடியில் அமர்ந்து காற்றாடுவது, மேக ஒட்டடைகள் இல்லாத கோடை இரவுகளில் நட்சத்திரக் கூட்டங்களை பலவாறாக உருவகிப்பது, படுத்துக் கொண்டே இரவு முழுவதும் நிலவுடன் பயணிப்பது, மன நிறைவைத் தரும் சூரிய அஸ்தமனம், தொலைதூரத்தில் இருந்து திரண்டு வரும் மழை மேகங்களும் இடி மின்னலும் தரும் பயமும் கிளர்ச்சியும் என வானம் பல வகையில் நம்முடன் உறவு கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் நம் மனநிலைக்கேற்ப வானம் உருமாறிக் கொண்டிருக்கிறது.
6.காபி....ஆடும் ஆட்டம் அனைத்தும் அரை சாண் வயிற்றுக்குத்தான் என்றாலும் இந்த காபி குடிக்கும் சுகம் இருக்கே..அதை அனுபவிக்கனும்...ஆராயக் கூடாது..யார் யாருக்கோ சிலை வைக்கறாங்க..கோயில் கட்டறாங்க...காபியை முதன் முதலில் கண்டுபிடித்தது யாருன்னு தெரிந்தால் அவருக்கு நான் சிலை வைப்பேன்...தூக்கத்துல எழுப்பி காபி குடிக்க சொன்னால் கூட குடிக்க ரெடி...
ஒவ்வொரு வீட்டு காபிக்கும் ஒரு சுவை உண்டு...ஒவ்வொரு ஓட்டல் காபிக்கும் தனி மணம் உண்டு.... ஒவ்வொரு கப் காபியிலும் புது சுவையை சுவைத்துக் கொண்டிருக்கிறேன்,
7.
ஓ...ஆறு தான் எழுதனுமோ...
இந்த விளையாட்டுக்கு நானே லேட்டா தான் வந்திருக்கேன்...ஏற்கனவே பல பேருக்கு விளையாடிட்டு இருக்கறதால யார் யார் இன்னும் வரலைனு தெரியல..அதனால ஒரு ஈஸியான வழி...தமிழ்மணத்துல இப்போ மறுமொழியப்பட்ட இடுகைகளில் முதல் ஆறு பேரை விளையாட்டுல சேத்துக்கலாம்..அவங்க ஏற்கனவே விளையாடிட்டு இருந்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல..
1.Boston Bala
2.மகேந்திரன். பெ
3.icarus prakash
4.பெனாத்தல் சுரேஷ்
5.நிலா
6.சந்தோஷ்
கப்பி | Kappi 22 பின்னூட்டங்கள்
வகை அனுபவம், சொந்தக் கதை
சாக்ரடீஸும் நானும்
சாக்ரடீஸ் ஒரு முறை தன் சீடர்களுடன் சந்தையில் ஒவ்வொரு கடையாக 'விண்டோ ஷாப்பிங்' செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு சீடன் " நீங்கள் தான் எதுவும் வாங்கப் போவதில்லையே, பின் எதற்காக எல்லாக் கடைகளுக்கும் செல்கிறீர்கள்" எனக் கேட்டான். அதற்கு சாக்ரடீஸ் " இந்த உலகத்தில எவை எல்லாம் இல்லாமல் என்னால் உயிர் வாழ முடிகிறது என்பதைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்றார்.
இந்த மாதிரி நானும் யோசிக்க ஆரம்பிச்சதுல மண்டை காய்ந்துவிட்டது....இங்கு வந்ததில் பல விஷயங்களை இழந்திருந்தாலும் இது மாதிரி கடையில் வாங்கும் அல்லது பணம் செலவு செய்து கிடைக்கும் விஷயங்களில் இழந்திருக்கிறேன் என யோசித்தேன்...
உதாரணத்துக்கு சாப்பாட்டு அயிட்டங்களில் பார்த்தால் பாலாஜி இட்லி கடையில் கல்தோசை,பரோட்டா இரவு உணவு..... ஹாட் சிப்ஸ்,சரவண,வசந்த பவன்களில் காபி....
உதயம்,கமலா,காசி,AVM,தேவி கருமாரியில் வாரம் ஒரு முறையாவது நைட் ஷோ... எந்த குப்பை படமாக இருந்தாலும் வாரத்துக்கு ஒரு படமாவது பார்க்கா விட்டால் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கம் வராது.....
மற்ற எந்த தியேட்டரிலும் ரிலீஸாகாத படங்கள் கூட கருமாரி காம்ப்ளெக்ஸில் ரிலிஸ் ஆகும்...
எந்த தியேட்டரிலும் பார்க்காத படம் இல்லையென்றால் ப்ளாட்பாரத்தில் 50 ரூபாய்க்கோ அல்லது வாடகைக்கோ ஏதாவது ஒரு பட டிவிடி....
வெள்ளி காலையில் சுடச்சுட வீடு தேடி வரும் விகடன்...குமுதம்,குங்குமம்,சினிக்கூத்து எனக் களஞ்சியங்கள்....
ஹிக்கின்பாதம்ஸ்,லாண்ட் மார்க் கடைகள்.... ப்ளாட்பாரத்தில் 50 ரூபாய்க்கு கிடைக்கும் ஆங்கில நாவல்கள்...
அப்புறம் எப்பவாவது போகும் ஸ்பென்சர்ஸ்,பெசண்ட் நகர்.... அங்க போய் நமக்கு ஒன்னும் செலவு இல்ல...ஆனா கூட வர்றவனை அவிச்சுடலாம்...அவன் தலையில பெரிய துண்டைப் போட்டுட்டு வரலாம்...
இது மாதிரி யோசிக்க யோசிக்க லிஸ்ட் பெருசாயிட்டே போகுது.... மனக்கவலையும் அதிகமாகுது.....இது மாதிரி பல விஷயங்கள் இல்லாம ரொம்ப நாள் நம்மால தாக்கு புடிக்க முடியாது!!!!
இந்த விஷயத்துல நாம சாக்ரடீஸ் என்ன..அவர் கஸின் ப்ரதர் 'பல்ப'ரடீஸ் அளவுக்கு கூட வர முடியாது!!!!
கப்பி | Kappi 6 பின்னூட்டங்கள்
வகை சொந்தக் கதை
உருகுவேயில் காரசட்னி
வந்து இரண்டு வாரம் ஆகிறது. இன்னும் உருகுவே பத்தி எழுதவில்லையே என ஒரே ஃபீலிங்க்ஸ்...அதற்கு தான் இது.... பிரச்சனை என்னவென்றால் வீட்டிற்கு இன்னும் இணைய இணைப்பு வாங்க முடியவில்லை. வங்கி கணக்கு எண் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் 2500 பீஸோ அழ வேண்டும். வஙகிக் கணக்கு தொடங்குவது பெரும்பாடாக இருக்கிறது. மூன்று வாரம் ஆகுமாம். நம் ஊரில் வீடு தேடி வந்து கண்டதுக்கு கடன் தருகிறார்கள்...இங்கு இதற்கே இப்படி இழுத்தடிக்கிறார்கள்.
அலுவலகத்திலும் கொஞ்சம் வேலை பார்க்கத்(?!) தொடங்கி விட்டதால் கிடைக்கும் நேரத்தில் சிறிது சிறிதாக எழுத வேண்டியிருக்கிறது. நிற்க.
மாண்டிவிடியோ...அமைதியான நகரம்...மக்கள் ஆச்சரியப்பட வைக்கிறார்கள்...நட்புடன் பழகுகிறார்கள்...கடைகளில் ஸ்பானிஷ் தெரியாமல் திணறுகையில் தானே வந்து உதவுகிறார்கள்...உலகின் 30 பாதுகாப்பான இடங்களில் ஒன்றாம்...கம்பெனி வண்டியிலேயே தினமும் பயணிப்பதால் நக்ரை இன்னும் முழுமையாக சுற்ற ஆரம்பிக்கவில்லை...
எல்லாவற்றுக்கும் இறக்குமதியை ந்ம்பி இருக்கும் நாடு....காய்கறிகள் கூட சிலி, ஈக்வேடார் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகின்றன...இங்கு சொந்தமாக உற்பத்தி செய்யப்படுவது மாடு மற்றும் பன்றி கறி தான்!!!
இனி சொந்தக் கதைக்கு வருவோம்.....ராம்ப்லா எனப்படும் கடற்கரையை ஒட்டிய பகுதியில் வீடு பார்த்து குடியாயிற்று. ..நம்ம ஊர்ல இந்த மாதிரி பீச் ஏரியாவில் இருக்கனும்னா வாடகைக்கு நம்ம சொத்தையே எழுதி தர வேண்டி இருக்கும்...இங்க இந்த ஊரே பீச்சா இருப்பதால் சீப்பா இருக்கு!!!
'நளன்' ஒருத்தன் ரூம் மேட்டா கிடைச்சிருக்கான்...சூப்பரா சமைக்கறான்...நம்ம வேலை மைக்ரோவேவ்ல அரிசி வச்சு சாதம் பொங்கறது....அதுக்கப்புறம் அவனுக்கு பக்கத்துல இருந்து மாரல் சப்போர்ட் கொடுக்கற கஷ்டமான வேலை மட்டும் தான்...அவன் ஏதாவது இரண்டு மூன்று காய்களை சேர்த்து குழம்புக்கும் கூட்டுக்கும் நடுவில் ஒரு அயிட்டம் சமைப்பான். ஒரே கவலை..எது செய்தாலும் அதில் உருளைக் கிழங்கு போடலைனா அவனுக்கு ஜீரணமாகாது.....என்ன செஞ்சா என்ன..நம்ம சாப்பாட்டு ப்ரச்சனை தீர்ந்தது...
இங்கு குறைஞ்சது 50 இந்தியர்களாவது இருப்பார்கள் என்று வந்தால் மொத்தம் 20 பேர் தான்..அதுலயும் 4 பேர் தான் தமிழ்...ஆனா வாரவாரம் கெட்-டூகெதர் ன்ற பேருல யார் வீட்டுலாவது ஓசில நல்ல சாப்பாடு போடறாங்க..
வந்த முதல் வாரமே இங்க இருக்க ஒரு ஆசிய ரெஸ்டாரென்டுக்கு போனோம்...மெனு கார்ட்ல இருந்தது எல்லாம் தாய், மலாய் அயிட்டங்கள்...இந்திய உணவு நான்கோ ஐந்தோ தான்...சமோசா, கொஃப்தா, ராகுல் ஜோஷ்னு பேரு வச்சு ஒரு டிஷ். அப்புறம் பேரு வாயில நுழையாத இரண்டு டிஷ்...'நாண்' வேண்டுமென்றால் நான்கு மணி நேரம் முன்னால் ஆர்டர் பண்ணனுமாம்...
பக்கத்துல 'V' இருக்க அயிட்டம் மெனுகார்ட்ல மொத்தமே 3 தான்...அதுல ஒரு மீன் அயிட்டத்தை அவன் எப்படி சைவமா மாத்தி தருவான்னு தெரியாம வாய்ல பேரு நுழையாத ஒரு டிஷ் ஆர்டர் பண்ணியாச்சு....
அதுக்குள்ள சமோசாவை என்ன கொடுமை பண்ணி வச்சிருக்காங்களோனு அதை ஒரு ப்ளேட் கொண்டு வர சொன்னோம்...அவன் கொண்டு வந்த ச்மோசாவிலேயே பசி அடங்கிடுச்சு..அவ்வளவு சூப்பரா எப்படி தான் செய்தானோ...நம்ம ஊருக்கு வந்து சமோசா செய்யறதை மட்டும் நல்லா கத்துக்கிட்டு வந்தவன் போல...
சமோசாவால வாயை அடைச்சவன் பின்னாடியே அதுக்கு ஒரு சட்னி கொண்டு வந்தான்...காரத்துல எங்களை திக்கு முக்காட வச்சிட்டானுங்க...நம்ம ஊர் ஆந்திரா மெஸ் சட்னியெல்லாம் தோற்றுவிடும்...அவ்வளவு காரம்... வெங்காயம், மிளகாய் மசாலா எல்லாம் போட்டு சூப்பரா பண்ணியிருந்தான்.....அதுலயும் கூட வந்த இரண்டு ஆந்திரா பசங்களுக்கு இத்தனை நாள் கழிச்சு இவ்வளவு காரமா சாப்பிட்டதும் ஆனந்த கண்ணீரே வந்துடுச்சு...
சமோசா காலியானாலும் அந்த சட்னியை சும்மாவே தொட்டு நக்க ஆரம்பிச்சிட்டோம்..அந்தளவு எங்களை மயக்கிடுச்சு...
அடுத்தது அந்த பெயர் தெரியாத அயிட்டம் பெரிய ஆப்பு.....கத்தரிக்காயும் பன்னீரும் போட்டு உப்பில்லாம கொண்டு வந்தான்....வாயில வைக்க முடியல....மறுபடியும் அந்த சட்னி தான் காப்பாற்றியது...அவன் கொடுத்த அரை ப்ளேட் சாதத்துல அந்த சட்னியை கலந்தடித்து பாதி வயிறு நிரம்பியது....
வயிறு நிரம்பவில்லையென்றாலும் நம்ம ஊர் சாப்பாடு என்ற மனத் திருப்தி தான்...
இங்கு இன்னொரு நலல விஷயம்...வாரவாரம் கெட்-டூகெதர் என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டிற்கு அழைத்து நல்ல சாப்பாடு போடுகிறார்கள்...நேற்று தக்காளி ரசம்...ஒரிஜினல் ஆந்திரா ஊறுகாய்...
இன்னும் இரு வாரங்களில் அர்ஜெண்டினா போக ஒரு ப்ளான் போட்டு இருக்கோம்...இப்படி கம்பெனி காசுல ஊர் சுத்தினா தானே உண்டு...நாம என்னைக்கு நம்ம காசுல இங்கெல்லாம் வரப் போறோம்!!!
கப்பி | Kappi 13 பின்னூட்டங்கள்
வகை உருகுவே, சொந்தக் கதை
கடைசிப் பக்கங்களுக்காக...மதுமிதா!!
வலைப்பதிவர் பெயர்: கப்பி பய
வலைப்பூ பெயர் : கப்பி பய
சுட்டி(url) :http://kappiguys.blogspot.com
ஊர்: காஞ்சிபுரம்...இப்பொழுது இருப்பது மாண்டிவிடியோ
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: கூகிளில் எதையோ தேடும் போது முதலில் ஒரு தமிழ் திவைப் பார்த்தேன். அது வரை ஆங்கில பதிவுகள் மட்டுமே அறிமுகமாகியிருந்தன..
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : இருங்க பார்த்து சொல்றேன்...விய வருடம்,.சித்திரை 8...அன்றைக்கு அலுவலகத்தில் எப்பொழுதும் போல் வேலையே இல்லாமல் பயங்கர வெட்டி....வழக்கம் போல் தமிழ்மணத்தை திறந்து ஒவ்வொரு பதிவா படிச்சு மதியம் வரை பொழுதைக் கழித்தேன்...சிறிது நேரத்தில் அடி மனசு ஆசை திடீரென வெளியில் வந்து தலையில் தட்ட இந்த பதிவை ஆரம்பித்தேன்...
இது எத்தனையாவது பதிவு:16...கத்துக்குட்டிங்கோவ்
இப்பதிவின் சுட்டி(url) : http://kappiguys.blogspot.com/2006/06/blog-post_09.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: ஏற்கனவே சொன்னது போல் எழுத வேண்டும் என்ற அடி மனசு ஆசை தான்
சந்தித்த அனுபவங்கள்:பல துறைகளில் பல வகையான பதிவுகள்....ஆச்சரியமூட்டும் தகவல்கள்..குழாயடிச் சண்டைகளுக்கு நிகரான பதிவர்களின் சண்டைகள்..தனி நபர் தாக்குதல்கள்...பல விவாதங்கள், வாக்குவாதங்கள்...
பெற்ற நண்பர்கள்:யாவரும் கேளிர்...
கற்றவை: கையளவு...
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: முழு சுதந்திரம்...நினைத்ததை எழுத முடிகிற சுதந்திரம்...யாரும் நம்மை அடிக்க வர மாட்டார்கள் என்ற தைரியம்..
இனி செய்ய நினைப்பவை: தொடர்ந்து பதிவது...
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன்"
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
நன்றி!!
கப்பி | Kappi 3 பின்னூட்டங்கள்
வகை பொது
பேர் சொல்லும் பிள்ளைகள்
படிக்கற காலத்துல பல பேருக்கு பல பட்டப்பெயர்கள் வச்சாலும் சில பேருக்கு மட்டும் ஒரு குறிப்பிட்ட பெயர் பச்சக்குன்னு ஒட்டிக்கும். .சொந்த பேரு அவனுங்களுக்கே மறந்து போற அளவுக்கு எல்லாருமே பட்டப்பெயரை வச்சு கூப்பிடுவாங்க...இந்த பெயர்களுக்கு அவனுங்க காப்பிரைட்டே வச்சிருக்கானுங்க... அந்த பட்ட பெயர்கள்ல பலது வெளியே சொல்ல முடியாது...சென்ஸார்ட்...அதுல சொல்ல முடிந்த பெயர்களில் எனக்கு ஞாபகம் வந்ததை இங்க போட்டிருக்கேன்...
சிறுவன்-பால் வடியும் முகத்தோட பத்தாம் கிளாஸ் பையன் மாதிரி இருப்பான்..
புலாஸ்-புலாசுலாக்கியோட ஷார்ட் ஃபார்ம்....ஆக்சுவலா அவனே உயரத்துல ஒரு ஷார்ட் ஃபார்ம் தான்..
மூனடியார்-நாலடியார் தம்பி..புலாஸை விட சின்ன பையன்
சுள்ளான்-ஆள் நாலடி இருந்தாலும் அவன் செய்கிற சில்மிஷங்களுக்காக..
காய்-காரணம் சொல்ல முடியாதுங்கோவ்
லோ ஹிப் - பேண்ட் இடுப்புலயே நிக்காது!!
அலெக்ஸ் - வாத்தியார் பெயரை பையனுக்கு வச்சு அவனை அசிங்கப் படுத்தியாச்சு!!
டோப்பு- கஞசா குடிக்கி மாதிரி அரைத் தூக்கத்துலயே திரிவான்
கும்தாஜ்-மும்தாஜ்க்கு போட்டியா களமிறக்கப்பட்டவன்.
கப்பை- ஃபீல்டிங் மிஸ் பண்றதை கப்பை-னு சொல்லுவோம்...ஆனா இவனுக்கு அந்த பேரு ஏன்னு பெயர்க்காரணம் மறந்து போச்சு
அங்குச்சாமி-அவன் 1st இயர் ரூம்ல இந்த பேரை யாரோ கிறுக்கி வச்சிருந்ததால அவனுக்கும் இந்த பேரு
தாத்தா-நோயாளி...வாரத்துக்கு ஒரு தடவை வயிறு பிரச்னை பண்ணி சாகற நிலைமையில இருந்தவன்..எதுன்னாலும் ரொம்ப பொறுப்பான பதில் சொல்பவன்.
கனல்-விளையாடும் போது பந்தை காட்டான் மாதிரி எறிவான்..
வேல் கொப்பரை-மனசுல விவேக் ஓபராய்னு நினைச்சுக்கிட்டு சுத்துனா இந்த பேரு தான் மிஞ்சும்
மொன்னை-மத்தவங்கள அவன் மொன்னைனு கூப்பிட்டு ஆரம்பிச்சு அவன் பேரே மொன்னை ஆயிடுச்சு....இது தான் பாப்புலர் பெய்ர்..காலேஜ்ல பாதி பேருக்கு அவன் உண்மையான பெய்ர் தெரியாது.
ஆபிசர்-பொறுப்பானவன், பண்பானவன்
ஷில்பன்-as in சில்வர் ஸ்பூன் ஷில்பா குமார்...இந்த பேரு பசங்களுக்கு வச்சதில்லை...யாருக்கு வச்சதுன்னு சொல்ல மாட்டேன்!!
டிங்கு - அவன் நடை அப்படி
நாய் - ராய்-னு பேரை வச்சிகிட்டு மதுரைல சுத்தினா நல்லா இருக்குமா..அதான் நாய்னு மாத்தியாச்சு
ஓடுகாலி - ஹாஸ்டல்ல எல்லா ரூம்லயும் படுத்து தூங்கற ஜீவராசி
தக்காளி - கொழுக் மொழுக்
பயில்வான் - அவ்ளோ பலசாலி..பேட் கூட தூக்கமுடியாது.
கொசு-பயில்வானுக்கு போட்டியா உடம்பு வச்சிருக்கவன்
டான் - இருப்பதிலேயே கேவலமான பெயர். மனசுல தன்னைப் பத்தி ரொம்ப ஓவரா நினைச்சுக்கிட்டு திரிஞ்சவனுக்கு வச்ச பேரு...பிற்காலத்தில் இது ஒரு கெட்ட வார்த்தையா மாறிடுச்சு...இந்த பேரை வச்சு மத்த பசங்கள கூப்பிட்டா அவனுங்களுக்கு ம்கா கேவலம்
மாஸ்டர் - சின்ன டான்.
இன்னும் பல பேரு இருக்கு...ஆனா இதெல்லாம் தான் டக்குனு ஞாபகத்துக்கு வந்தது. படிக்கற காலத்துல தான் இப்படின்னா வேலைக்கு சேர்ந்த அப்புறமும் பேர் வைக்கிற பழக்கம் போகல..
தல - வயசுல பெரியவர்..யார் வேணும்னாலும் ஓட்டலாம்..அவிக்கலாம்...
கேப்டன்-மதுரைக்கார தல
சல்லி-சல்லித்தனமாக நடக்கும் PL
பெரிய சல்லி-அதைவிட சல்லித்தனமான GL
கில்லி - இவங்க இரண்டு பேர் நடுவில சிக்கினாலும் எல்லாத்துலயும் எஸ்கேப் ஆகும் PM
குட்டி சல்லி-சல்லியோட சிஷ்யன்
இது மாதிரி அடுத்தவனுக்கு பேர் வைக்கிற சுகமே தனி தான்..
கப்பி | Kappi 4 பின்னூட்டங்கள்
உருகுவே - வேட்டிய உருவுமா??
என் இனியத் தமிழ் மக்களே
உங்கள் பாசத்துக்குரிய கப்பி பய இன்று முதல் உருகுவேயிலிருந்து...
வரும்போது சொல்லாம வந்துட்டேன்...கோவிச்சுக்காதீங்க..
கிட்டத்தட்ட 45 மணி நேரமா உட்கார்ந்தே இருப்பதால் பயங்கர களைப்பு...என் பயணக் கட்டுரையை பார்ட் பார்ட்டா பொறுமையா அப்புறமா எழுதறேன்...கவலைப்படாதீங்க...
இங்க வேற ஸ்பானிஷ் கீ போர்ட் கொடுத்துட்டாங்க...தடவி தடவி அடிக்க வேண்டியிருக்கு...இங்க செட்டில் ஆனதுக்கப்புறம் என் சோகக் கதைய ஆரம்பிக்கறேன்..
கப்பி | Kappi 6 பின்னூட்டங்கள்
வகை உருகுவே, சொந்தக் கதை
புரளி!!! ('சினிக்கூத்து' பதிவு)
புரோட்டா வாங்கிக் கொடுத்து புரளி கேக்கற இந்த காலத்துல தானா வந்து காதுல விழுந்த மேட்டரு...
உங்க கிட்ட சொல்லாம இரண்டு நாளா ஒழுங்கான தூக்கம் இல்ல...
கர்நாடகாவுல பெங்களூரிலிருந்து 150 கி.மீ-ல காற்றாலை ஒன்னு இருக்கு. அதுல நடிகர் சூர்யாவுக்கு சொந்தமான ராட்சத காற்றாலை விசிறி ஒன்னு இருக்கு (ஒரு விசிறிக்கே ஒரு கோடி ஆகுமாம்...விசிறிகள் கவனிக்க.)
அந்த விசிறில 'R.S.Surya' என்று எழுதி இருந்ததை 'Surya Jothika' என்று மாத்திட்டாங்களாம். இது அந்த ஏரியால வேலை பார்க்கிற நம்பத்தகுந்த வ்ட்டாரம் சொன்ன த்கவல்.
இந்த பதிவினால் ஏற்படப் போகும் நன்மைகள் பற்றி தெரியாமல் "யாரு யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன..இதையெல்லாம் ஒரு பதிவா போடனுமா" என்று கேட்பவர்களுக்கு இந்த பதிவினால் ஆன பயன்...
1.சூர்யா, ஜோதிகா ரசிகர்கள் இந்த செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடையலாம். வெடி வெச்சு கொண்டாடலாம்.
2.சூர்யாவையோ ஜோதிகாவையோ ஒரு தலையா காதலிச்ச யாராவது தூக்க மருந்தாலோ தூக்கு கயிராலோ தங்கள் காதலை அமரக் காதல் ஆக்கலாம்.. கடைக் காரர்களுக்கு விற்பனை அதிகரிப்பதுடன் மக்கள் தொகையும் குறையும்.
3. மேற்சொன்னவர்கள் மற்றும் ரசிகர்கள் என திரிபவர்கள் மனம் மாறி தங்கள் பொழப்பைப் பார்க்கப் போகலாம்.
4. ஏதாவது பத்திரிகை நிருபர் இதைப் படித்துவிட்டு தானே கண்டுபிடித்த செய்தியாக தன் பத்திரிகையில் வெளியிடலாம். இதனால் பல லட்சம் வாசகர்கள் பயனடையலாம்.
5. இந்த பதிவிற்கு அடிக் கணக்கு (ஹிட் கவுண்ட்!!!) அதிகமாகலாம்.
6. இதைப் படித்து இம்ப்ரெஸ் ஆகிய ஆண்கள் சூர்யா அளவிற்கு காற்றாலை விசிறி இல்லாவிட்டாலும் தங்கள் வீட்டு டேபிள் ஃபேனுக்கு தங்கள் காதலி (அ) மணைவியின் பெயரை வைக்கலாம்.
இப்படியெல்லாம் காரணம் சொன்னாலும் மனசாட்சி உள்ள இருந்து கத்துவது நிற்க மாட்டேங்குது..."போய் புள்ளக்குட்டிங்கள படிக்க வைச்சு உருப்படற வழியப் பாருங்கப்பு...பொழப்பப் பாக்காம புரளி பேசிட்டு திரியறானுவ"
கப்பி | Kappi 6 பின்னூட்டங்கள்
வகை சினிமா
ப்ளஸ்-2 கவிதைகள்
இந்த பதிவில் இடப்போகும் கவிதைகள் நான் பள்ளிக்காலத்தில் எழுதியவை. அவை பற்றி நானே மறந்திருந்த நிலையில் இந்த வாரம் வீட்டை சுத்தம் செய்கையில் அந்த பழைய கவிதைப் புத்தகம் கிடைத்தது. இப்போது படித்துப் பார்க்கையில் 'சின்னப் புள்ள தனமாக"த் தான் இருக்கிறது. ஆனால் மெட்ரிக் பள்ளியாக இருந்தாலும் வெறும் பாடப் புத்தகத்தை மட்டும் மனனம் செய்விக்காமல் லெமூரியா-வில் ஆரம்பித்துப் பல தகவல்களைச் சொன்னதோடு தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று புத்தகங்களை வாசிக்கத் தந்த என் தமிழ் ஐயா அருள்ராஜ் தான் நினைவுக்கு வருகிறார்.
நான் கவிதைகள் எழுதுவதை நிறுத்தி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. கல்லூரியில் எங்கள் துறையின் மாத இதழில் எனக்குத் தோன்றுவதை கவிதை என்ற பெயரில் எழுதி வந்தேன். அந்த இதழின் பொறுப்பும் எங்களிடமே இருந்ததால் (உயிர் நண்பன் தான் எடிட்டர்) எந்த கவிதையும் நிராகரிக்கப்பட்டதும் இல்லை. இதில் எனக்கே ஆச்சரியமான விஷயம் சில கவிதைகளுக்குப் பாராட்டுக்கள் வந்தது தான்.
கல்லூரி முடிந்தபின் வாசிப்பு அதிகமானதும் தான் கவிதை எழுதுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டி வந்தது. சுயமதீப்பிட்டிலேயே என்னுடைய கவிதைகள் பாவப்பட்ட நிலையில் இருந்ததால் கவிதை எழுதுவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டேன்.
கீழே உள்ள் கவிதைகள் அனைத்தும் நான் 11, 12-ஆம் வகுப்புகளில் படித்த போது எழுதியவை. இப்போது அவற்றைப் படிக்கும்போது பல கவிதைகள் ஏற்கனவே எங்கேயோ படித்து வார்த்தைகளை மட்டும் மாற்றி எழுதியிருப்பது போல் தோன்றுகிறது(அப்போது அப்படி தோன்றியதில்லை!!).
நாற்பது பக்கங்களுக்கு மேல் எழுதி வைத்திருந்தாலும் அவற்றில் தேறியதாக நான் கருதுவதை மட்டும் இங்கு இடுகிறேன்.
கற்றவன் ஒதுங்குகிறான்
கல்லாதவன் பதுங்குகிறான்
அரசியல்வாதியைக் கண்டு!
பதிவில் இடலாம் என்று தைரியம் தந்த இந்த கவிதை(?) பத்தாவது பக்கத்திலதான் கிடைத்தது.
ஒரு நாள் தமிழ் வகுப்பில் ஐயா பத்து நிமிடங்கள் கொடுத்து அதற்குள் நான்கு வரியில் ஒரு கவிதை எழுத சொன்னார். அப்போது நான் எழுதியது கீழே.இதை அப்போது எழுதியபோது எனக்கு ஏற்பட்ட திருப்தியும் பெருமையும் இன்னும் என் நினைவில் இருக்கிறது.
எந்தப் பாம்பு கடித்ததோ..
வானில் எங்கும் நீலம்!
வாயில் நுரை தள்ளியதோ..
அங்கே வெண்மேகம்!
அதே போல் பெரும்பாலான சமயங்களில் சமூக,அரசியல் சார்ந்த கருத்துக்களையே கவிதை என்ற பெயரில் எழுதி வைத்திருக்கிறேன்.
அரசியல்வாதியின் தேர்தல் வாக்குறுதியும்
மாணவனின் பாடப் புத்தகமும்
ஒன்றுதான்!
இரண்டுமே பல சமயங்களில்
மறக்கப்படுகின்றன!
எல்லா கவிதைகளுமே வார்த்தைகளை வரிகளாக உடைத்துப்போட்டு எழுதியவையாகவே இருக்கின்றன.
குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி ஒரு கவிதையின் பகுதி....
குழலினிது யாழினிது வேண்டாம்!
இனியாவது குழந்தைகளை
இனிமையாய் வளர்ப்போம்!
இதையெல்லாம் விட வாக்குமூல கவிதை ஒன்று இருக்கிறது... எனக்கே இப்போது படிக்கையில் சிரிப்பு வருகிறது...பன்னிரண்டாம் வகுப்பு ஆரம்பத்தில் இதை எழுதி வைத்திருக்கிறேன்...எந்த சூழ்நிலையில் எழுதினேன் என நினைவில்லை..
கற்பனை வறண்டு போகவில்லை
கவிமிகு சொல்லுக்குப் பஞ்சமில்லை
எண்ணும் மனதிலும் குழப்பமில்லை
ஆயினும் என்ன செய்வது
எனக்கு எழுத வரவில்லை!!
இதற்குப் பிறகும் இருபது பக்கங்களுக்கு மேல் எழுதியிருக்கிறேன். பல கவிதைகள் கப்பித் தனமாக இருக்கின்றன. ஒரு காதல் கவிதை கூட இல்லை.
இந்த பதிவில் நான் கவிதையென குறிப்பிட்டுள்ள அனைத்தையுமே அப்போது எழுதியதில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே வார்த்தைகளுடன் அதே வடிவத்துடன் இங்கு இட்டிருக்கிறேன்.இவை எந்த இலக்கணத்தைக் கொண்டும் எழுதியவை அல்ல. தோன்றிய கருத்துக்களை, வார்த்தைகளை உடைத்துப் போட்டு கவிதை என்று ஆர்வக் கோளாறினால் எழுதி வைத்ததாகவே கருதுகிறேன்.
இந்த கவிதைகளை எழுதியதற்கும் அதற்கென ஒரு பதிவு இட்டதற்க்கும் என்னை நானே மன்னித்துக் கொள்கிறேன்.
கப்பி | Kappi 5 பின்னூட்டங்கள்
வகை கவித..
உருகுவே - வேட்டிய உருவுவேன்
ஊரு பேரே பயமுறுத்துது...
அடுத்த வாரம் உருகுவே போறேன்..ஒரு ஆறு மாசத்துக்கு மாண்டிவிடியோல இருந்து தான் தமிழ்ச் சேவை...
உருகுவேயில் தமிழ்ப் பதிவர்கள் யாராவது உள்ளனரா?? தெரிந்தால் சொல்லுங்கள்..
இந்தப் பதிவை அர்ஜெண்டினாவிலிருந்து பார்த்திருக்கிறார்கள்...உருகுவேயில் இருந்து ஹிட் இல்லை...
அப்புறம் எந்த கட்சிக்காவது தென் அமெரிக்கப் பிரதிநிதி தேவைனா சொல்லுங்க.... ஆஃபரைப் பொறுத்து ஏதாவது ஒரு கட்சியை தேர்ந்தெடுத்து வாங்கிய பணம் தீரும்வரை கட்சியின் கொள்கைக்காகப் போராடுவேன்....
அங்க போனதும் எவனாவது ஒரு டாக்ஸிகாரன் "ஸ்பானிஷ் தெரியாத நீயெல்லாம் எதுக்கு இங்க வந்த?"-னு கேக்காம இருக்கனும். அது தான் இப்போதைக்கு ஒரே கவலை!!
கப்பி | Kappi 9 பின்னூட்டங்கள்
வகை உருகுவே, சொந்தக் கதை
கையூட்ட்ட்ட்டுடுடுடு!!!!!!!
சொந்தக் கதையும் சில புரிதல்களும் சந்தேகங்களும் ...
கையூட்டு (எ) லஞ்சம் இருக்கக் கூடாதுன்றது நம்ம லட்சியங்கள்ல ஒன்னு...
'காசு கொடுக்காம ஒன்னுமே நடக்காது' என்று எல்லாரும்(?!) ஒருமித்த கருத்து கொண்ட வ.போ.அ ல நடந்த சம்பவம் முதல்ல...
எல்.எல்.ஆர் எடுக்க போனபோது போக்குவரத்து விதிகளைப் பத்தி ஒருத்தர் வந்து பேசிட்டு, பரிட்சை வச்சாங்க...எல்லாம் முடிச்சு வெளியே வரும்போது ஒருத்தர் 'கொடி நாள்' கலெக்ஷன் பண்ணிட்டு இருந்தாரு...
எனக்கு பெரிய குழப்பம்..."இது உண்மையாவே கொடி நாள் நிதிக்கு தானா...இல்ல இவனுங்க ஆட்டைய போட்றுவாங்களா"-னு யோசிச்சுட்டு இருக்கும்போதே அவரு என்கிட்ட ஒரு ரசீதை நீட்டினாரு..
நான் மெதுவா என்கிட்ட காசு இல்ல-னு சொன்னவுடனே அவரு "கொடுங்க தம்பி...கொடி நாளுக்கு தானே கேக்கறோம்"-ங்கிறாரு...அதுவும் குறைஞ்சது 30 ரூபாய் தரணுமாம்...இது உண்மையாவே கொடி நாளுக்கா இல்ல லஞ்சமா-னு தெரியாமலே 30 ரூபாய் கொடுத்துட்டு வந்தேன்...
வீட்டுக்கு வந்து என் நண்பனிடம் இதை சொன்னா "அவங்களுக்கு இந்த நாள் மட்டுமல்ல..எந்த நாளும் கொடி நாள் தான்"-ன்னு சுகி சிவம் ரேஞ்சுக்கு பேசறான்...
லைசென்ஸ் வாங்றதுக்கு டிரைவிங் ஸ்கூல் கார் ஓட்ட கத்துக்கிட்டு அவங்க மூலமா வாங்கினதால லஞ்சம் எதுவும் கொடுக்கல-ன்னு ஒரு திருப்தி...
("நம்ம சார்பா டிரைவிங் ஸ்கூல் மாஸ்டர் கொடுத்திருப்பாரோ??"
"ச்சீ ச்சீ இருக்காது")
அடுத்தது அடிக்கடி நான் பெருமையாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சம்பவம்...
கல்லூரியில நான்காவது வருடம் படிக்கும் போது நாலு பசங்க ஒன்னா சேர்ந்து பாஸ்போர்ட் விண்ணப்பித்தோம்...கொஞ்ச நாட்கள் அப்புறம் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் இருந்து ஏட்டு ஒருத்தர் வந்தாரு...
"உங்க அப்ளிகேஷன்லாம் வெரிஃபிகேஷனுக்கு ஸ்டேஷன் வந்திருக்கு தம்பி" (ச்சே..ச்சே..எத்தனை 'ஷ')
"அப்படிங்களா...பாத்து அனுப்பிடுங்க..தேங்க்ஸ்ங்க"
"அதெல்லாம் நான் பாத்துக்கறேன் தம்பி..அதுக்கு முன்னாடி சில ஃபார்மாலிட்டீஸ் இருக்குப்பா"
"நாங்க எதுனா கையெழுத்து போடனுங்களா??"
"அதில்லப்பா...உங்க நாலு பேரோட டாகுமெண்ட்ஸ்தான் வந்திருக்கு. இதுக்காக தான் நான் ஸ்டேஷன்ல இருந்து இவ்ளோ தூரம் வந்திருக்கேன் (அரை கிமீ பாஸூ..) அது ம்ட்டுமில்லாம எஸ்.ஐ கையெழுத்து போட்டதும் நான் தான் பாஸ்போர்ட் ஆபீஸ் கொண்டு போய் கொடுக்கனும்...அதுனால ஃபார்மாலிட்டீஸ்லாம் பாத்து முடிச்சுடுங்க"
(அடப்பாவிகளா லஞ்சம் கொடுக்கறது ஃபார்மாலிட்டியா....)
"என்ன ஃபார்மாலிட்டி சார்"
"ஒருத்தருக்கு 400 ரூபா செலவு ஆகும்பா"
சொல்லி முடிக்கறதுக்குள்ள பக்கத்துல இருந்த 2 பேரு பணத்தை எடுத்துட்டு வர போய்ட்டானுங்க....
நானும் இன்னொருத்தனும் மட்டும் நிக்கறோம்...
"இல்ல சார்..பரவாயில்ல...ஃபார்மாலிட்டி-லாம் கொடுக்கறது இல்ல"
"என்ன புரியாம பேசறீங்க..எல்லாரும் கொடுக்கறது தானே"
"இருக்கட்டும் சார்"
"உங்களுக்காகத்தான் தம்பி இவ்ளோ தூரம் வந்திருக்கேன்"
"இல்ல சார்.. கொடுக்கறது இல்ல"
அதுக்குள்ள மத்த 2 பேரும் ஆளுக்கு 300 ரூபாயை எடுத்து நீட்டிட்டாங்க
"அப்போ உங்களுக்குத் தான் லேட்டாகப் போகுது...வர்றேன்"-னு கிளம்பிட்டாரு...
கொடுத்த 2 பேரும் "டேய் நீங்க 2 பேரும் கொடுக்க வேண்டியது தானே...இப்போ உங்க 2 பேரோட சேத்து காசு கொடுத்த எங்களோடதும் நிறுத்தி வச்சுட்டா என்ன பண்றது"-னு முறைக்கறானுங்க..
"அதெல்லாம் கரெக்டா நடந்துப்பாங்க..உங்களோடது முதல்ல வந்துடும் விடுங்கடா"-னு அவனுங்கள தேத்தி அனுப்பியாச்சு...இருந்தாலும் மனசுல ஒரு சின்ன குறுகுறுப்பு...என்ன தான் நடக்கும்னு...
2 வாரம் கழிச்சு ஸ்டேஷன்ல இருந்து கூப்பிட்டு விட்டாங்க...அங்க போனா எஸ்.ஐ ஐடி கார்டை வாங்கி பார்த்துட்டு வெரிஃபிகேஷ்னை முடிச்சுட்டு அனுப்பிட்டாரு...ஃபார்மாலிட்டிஸ்லாம் எதுவும் இல்ல!!!
பாஸ்போர்ட்டும் 1 மாசத்துல வந்துடுச்சு...காசு கொடுக்காம வேலை ஆகும்னு காலரைத் தூக்கி விட்டுக்கிட்டாச்சு
அடுத்தது நான் முழு சுயவுணர்வுடன் லஞ்சம் கொடுத்த கேவலம்....
பொதுவாகவே போக்குவரத்து காவலர்கள் தான் வசூல் ராஜாக்கள்...
என் சித்தப்பா ஒருத்தரும் ட்ராபிக் கான்ஸ்டபிள் தான்....இது மாதிரி மடக்கி காசு வாங்கறதுக்கு கேவலமான ஒரு சப்பைக்கட்டு காரணம் சொல்வாரு...
"ஒவ்வொரு தடவையும் நாங்க மடக்கி பிடிச்சு ரூல்ஸ்படி அவனை ஃபைன் கட்ட சொன்னா எவனும் மதிக்க மாட்டான்...நாங்க காசு வாங்கறதால 'இவனுங்களுக்கு கொடுக்கறதுக்கு பேசாம லைசென்ஸ், இன்சூரன்ஸ் எடுத்துடலாம்'-னு ஒழுங்கா இருப்பாங்க"
லாஜிக் சகிக்கலை....
விஷயத்துக்கு வருவோம்....வண்டி வாங்கின புதுசுல கொஞ்ச நாள் ஆர்.சி புக் வராம இருந்துச்சு... ஒரு நாள் நைட் ஷோ படம் பாத்துட்டு மவுண்ட் ரோட்ல இருந்து வடபழனி ரூம் வரைக்கும் சிக்காம வந்தாச்சு...
வீட்டுக்கு வந்த்தும் ஒருத்தன் ஊருக்கு கிளம்ப பஸ் ஸ்டாப்ல விட சொன்னான்...
வடபழனி சிக்னல்ல கண்டிப்பா நம்ம ஆட்கள் இருப்பாங்க-ன்னு ஒரு குறுக்கு சந்துக்குள்ள போனா அந்த முட்டு சந்துல லைட் எல்லாத்தையும் அணைச்சுட்டு ஜீப்ல இருக்காங்க...
வண்டிக்குள்ள எஸ்.ஐ...வெளிய 3 பி.சி..
முன்னாடி நின்ன ஏட்டு வண்டிய நிறுத்தி டாகுமெண்ட்ஸ் எடுக்க சொன்னாரு...இருந்தாதானே எடுக்கறதுக்கு....
"வண்டி போன வாரம் தான் சார் ரிஜிஸ்டர் பண்ணியிருக்கு...டாகுமெண்ட்ஸ் ஊர்ல இருக்கு சார்"
"ஏன் தம்பி, சர்க்கரை-னு கைல எழுதி நக்கினா தித்திக்குமா...வீட்டுல டாகுமெண்ட் வச்சுக்கிட்டு வண்டிய எதுக்கு எடுத்த?? உன் வண்டி தான்னு எப்படி தெரியும்?"
"வண்டி வெளிய எடுக்கறது இல்ல சார்...ஃப்ரெண்டு ஊருக்கு போகனும்கறதால லேட் ஆயிடுச்சேன்னு கொண்டு வந்தோம் சார்..பக்கத்து தெருல தான் சார் வீடு"
"அதெல்லாம் தெரியாதுப்பா..வண்டிய ஓரமா விட்டுட்டு போ...நாளைக்கு சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வந்து ஃபைன் கட்டி வண்டிய எடுத்துக்கோ"
இங்க தான் நம்ம அறியாமை தலை விரிச்சு ஆடுது.... வண்டில டாகுமெண்ட்ஸ் எதுவும் இல்லைனா கோர்ட்டுக்குத்தான் போகனுமா இல்ல ஸ்பாட் ஃபைன் எதுனா இருக்கா?? ...ரூல்ஸ் எதுவும் தெரியாம அவர்ட்ட என்ன பேசறது...
"சாரி சார்...இனிமே வண்டி எடுக்க மாட்டோம் சார்"
"அதெல்லாம் பேசிட்டு இருக்காதப்பா..வண்டிய விட்டுட்டு போ"
"சார் ஸ்பாட் ஃபைன் எதுனா இருந்தா.."
"சார்...இவங்க ஃபைன் கட்டறாங்களாம்...சாரைப் போய் பாருங்கப்பா"
மனசுக்குள்ள ஃபைன் கட்ட உண்மையாவே ஏதோ ரூல் இருக்கனுமே-னு நினைச்சுக்கிட்டே எஸ்.ஐ பக்கத்துல போய் நின்னோம்..
"200 ரூபாய் எடுங்கப்பா"
"200 ரூபாயா"
"இவங்க வேலைக்கு ஆக மாட்டாங்க ..வண்டி சாவிய கொடுத்துட்டு போங்கப்பா"
ஏட்டு எங்களிடம் பக்கத்து வண்டி காரரை காட்டி "இதோ இவரும் 200 ரூபா கொடுத்துட்டு தானே போறாரு....இல்லனா வண்டிய விட்டுட்டு போங்கப்பா"
இன்னைக்கு கொள்கைக்கு விரோதமா நடக்க வேண்டி இருக்கேன்னு ஃபீல் பண்ணிகிட்டே 100 ரூபாய் எடுத்து
"அவ்ளோதான் சார் இருக்கு"-ன்னு நீட்டினேன்...
வண்டிய விட்டுட்டு போகலாமா-னு யோசிக்க கூட இல்ல...
"இன்னும் 50 ரூபா கொடுப்பா"
"ஊருக்கு போறதுக்கு காசு இல்ல சார்"
"சரி சரி பாத்து போ"
"தாங்க்ஸ் சார்"
உச்சகட்ட கேவலம்...மனசாட்சி ரத்தக்கண்ணீர் விட்டு அழுவுது...
லஞ்சம் கொடுக்கறதை கேவலம்னு பேசிட்டு அதையே செய்துவிட்டு நிற்கும் மகா கேவலம்...
சத்தியமா ரொம்ப ஃபீல் பண்ணினேன்..நம்புங்க...
அடிப்படையா வண்டி ஓட்றவன் தெரிஞ்சுக்க வேண்டியது...வண்டில டாகுமெண்ட்ஸ் எதுவும் இல்லனா கோர்ட்டுக்குத் தான் போகனுமா..இல்ல சட்டப்படியான ஸ்பாட் ஃபைன் எதுனா உண்டா...அதுக்கூட தெரியல..
பாஸ்போர்ட் விஷயத்துல கொடுக்க முடியாது-ன்னு சொன்ன என்னால இந்த விஷயத்துல ஒன்னும் பண்ண முடியல..
இந்த சம்பவங்க்ளில் இருந்து என் அறிவுக்கெட்டிய விஷயங்கள்:
>> லஞ்சம் கேட்டு நாம முடியாது-ன்னு சொன்னாலும் வேலை நடக்கும்...என்ன கொஞ்சம் தாமதம் ஆகலாம்
>> நம் மேல் எந்த தப்பும் இல்லாத போது நம்மால் தெளிவாக இருக்க முடிகிறது
>> லஞ்சம் வாங்க, கொடுக்க எல்லாருமே ஏதாவது justification வச்சிருக்காங்க.
>> லஞசம் கொடுக்கறோம்-னு தெரியாமலேயே பல இடங்களில் நாம் அந்த இழி செயலை செய்து கொண்டிருக்கிறோம்
>> லஞ்சம் வாங்குபவர்கள் கொடுக்கத் த்யாராக இருக்கிறார்கள் and vice versa...
>> அடிப்படையான விஷயங்களில் கூட நம் விழிப்புணர்ச்சி அதள பாதாளத்தில் தான் இருக்கிறது.
>> தனிமனித ஒழுக்கம் தான் இது மாதிரி இழி செயல்கள் ஒழிய ஒரே வழி (அந்நியன் பட ஒன் லைனோ??)
இதுக்கு மேல ஒன்னும் சொல்லத் தோணல...ஒரே பீலிங்ஸூ...
பி.கு:
1. தலைப்பு மட்டும் கையூட்டுனு வச்சுட்டு மத்த இடத்துல லஞ்சம்-ன் எழுதினது ஏன்-னு தெரியல
2. சொன்ன எல்லா சம்பவங்களிலும் காவல் துறையே வந்ததுக்கு நான் பொறுப்பில்ல...இதுல எந்த உள்குத்தும் இல்ல..
கப்பி | Kappi 3 பின்னூட்டங்கள்
வகை அனுபவம், சொந்தக் கதை, பொது
"இந்தி தெரியாத நீயெல்லாம்...."
மொழிப் பிரச்சனையால் அலைக்கழிக்கப்பட்ட ஒரு அப்பாவி ஆத்மாவின் கூக்குரல்...
தமிழையே மெட்ராஸ் தமிழ்,மதுரை தமிழ், எதுலயும் சேராத தமிழ்-னு எல்லாத்தையும் கலந்து பேசறவன் நான்...
மதுரைல காலேஜ் படிக்கும்போது 'மெட்ராஸ் பாசை பேசிட்டு திரியறான்'-வாங்க...லீவ்ல காஞ்சிபுரம் வந்தா இஙக இருக்கவனுங்க 'மதுர பாஷை நல்லா கத்துக்கிட்டியே மச்சி'-னு வெறுப்பேத்துவானுங்க....இவனுங்க நடுவுல மாட்டிக்கிட்டு மதுரை தமிழுக்கும் மெட்ராஸ் தமிழுக்கும் மாறி மாறி தவ்விகிட்டு இருந்தேன்..
நம்ம கூட்டத்துல வேற 'ஒவ்வொரு தமிழுக்கும்' ஒரு பையன் இருப்பான்...இவனுங்களுக்கு ந்டுவுல பெரிய identity crisis வ்ர்ற நிலைக்கே போயிட்டேன்...அதுக்கப்புறம் எல்லாத் தமிழையும் mix பண்ணி ஆளுக்கு ஏத்த மாதிரி பேச பழகிட்டேன்...
இதுக்கு நடுவுல ஃப்ரெஞ்ச்,ஜெர்மன் -னு ஆர்வக் கோளாறுல தத்தக்கா பித்த்க்கா-னு கத்துக்கிட்ட மொழிகளும் உண்டு...
ஆனா பிரச்சனை வந்தது இந்தியால தான்...
ஸ்கூல்ல ஒன்பதாம் கிளாஸ் வரைக்கும் ஹிந்தி கத்துக்கொடுத்தாங்க.... இந்த 'தக்ஷின் பாரத்......சபா' வோட புக்கையே text book-ஆ கொடுத்து சொல்லித் தந்தாங்க...அவங்க கத்துக் கொடுத்த கணக்கு படி ப்ராத்மிக், மத்திமா(மத்த பேரு-லாம் மறந்து போச்சு!!) மாதிரி 5-வ்து லெவல் வரைக்கும் படிச்சாச்சு...
அந்த திமிர்ல இந்தி தெரியும்-னு சொல்லிக்கிட்டு திரிஞ்சுட்டு இருந்தேன்....
காலேஜ்லயும் இந்தி படத்துக்கெல்லாம் போனா நாம தான் translator.... படத்துல எதுவும் புரியலன்னாலும் நாமளே ஏதாவது டயலாக் சொல்லி சமாளிச்சுக்கலாம்..ஏன்னா கூட வர்றவங்க இன்னும் நம்மல நம்பிட்டுதான் இருப்பாய்ங்க...
காலேஜ் முடிச்சு மெட்ராஸ் வந்தப்புறமும் மெலொடி,ஈகா-னு போய் நம்ம இந்தி அறிவை வளர்த்துக்கிட்டிருந்தேன்....
இந்தி புலமைக்கு வந்துச்சு ஒரு சவால்...ஆபீஸ்ல இருந்து '2 மாசம் டெல்லிக்கு போய் குப்பை கொட்டுடா'-னு தொரத்திட்டாங்க...
கூட வந்த 3 பேருல ஒருத்தன் உண்மையாவே இந்தி நல்லா பேசுவான்...ஒருத்தன் என்ன மாதிரி..ஆனா படிக்கற காலத்துல எல்லாத்தையும் நல்லா மனப்பாடம் செஞ்சு வச்சுருந்தான்...
இன்னொருத்தர் சுத்தம்..அவருக்கு தெரிஞ்ச ஒரே மொழி மதுர தமிளு தான்...(ஒரு தடவை மனுஷன் தனியா டீக்கடைக்கு போய் 'ஆப் கோ ச்சாய்'-னு கேட்டு 10 நிமிஷம் வெயிட் பண்ணிட்டு அவன் இவரை கண்டுக்காம டீயே குடிக்காம வந்தாரு..)
கிதர்,கித்னா,கஹா,ரொட்டி, ச்சாவல் சாஹியே-னு உயிர் வாழத் தேவையான அளவு இந்தியை வச்சுக்கிட்டு maintain பண்ணிக்கிட்டு இருந்தேன்...
போகப் போக இந்தில பேசற confidence எக்குத்தப்பா அதிகமாயிடுச்சு... ஆட்டோ பேரம் பேசற வேலையே ஏத்துக்கிட்டாச்சு... எல்லா ஆட்டோலயும் மீட்டர் இருக்கும்..பெரும்பாலான ஆட்டோகாரங்க மீட்டர்லயே வருவாங்க...அதுனால ஆட்டோ புடிக்கறது ஈஸியா போயிட்டு இருந்தது...
வழக்கமா நொய்டா-ல இருந்து கன்னாட் ப்ளேஸ்-க்கு 70 ரூபா வாங்குவாங்க...ஒரு நாள் ஒரு ஆட்டோகாரன் மீட்டர்ல வர முடியாதுன்னுட்டான்...
"சாட்(60) ருப்யே சாஹியே"-னான்...அப்போ தான் மூளைக்குள்ள தூங்கிட்டிருந்த இந்தி அறிவு வெளிய வந்து சாட்-னா அறுபதா எண்பதா-னு பட்டிமன்றம் நடத்துச்சு...அவன் 80 ரூபா கேட்டு ஏமாத்த பாக்கறான்னு மண்டைக்குள்ள ஒரு பல்பு...நான் உடனே நமக்கு பழக்கப்பட்ட நம்பர் 'சத்த்ர்'(70)னேன்...
கூட வந்த இந்தி தெரிஞ்ச பய இத கேட்டு நீ பேரம் பேசினது போதும்னு அவன் பேச ஆரம்பிச்சான்..அதுக்குள்ள ஆட்டோ காரனும் முழிச்சுக்கிட்டு எழுபது ரூபாய்க்கு கம்மியா வர முடியாதுன்னுட்டான்...
'சரி..புதுசா 2 வார்த்தை கத்துக்கிட்டதுக்கு 10 ரூபாய்'னு மனசை தேத்திக்கிட்டேன்...
ஆனா அத விட பெரிய அசிங்கம் காத்துட்டிருந்தது அப்போ தெரியாது...
ஒரு வாரம் கழிச்சு கரோல் பாக் போக கிளம்பினோம்..2 பேரு முன்னாடியே அங்க போய் வெயிட் பண்ணிட்டிருந்தாங்க...
ஆட்டோல வழக்கம் போல நானே பேரம் பேசி கிளம்பியாச்சு... ஆட்டோல போகும்போதே அவனுங்க போன் பண்ணி 'Bikanirwala' -ன்ற ஸ்வீட் கடை முன்னாடி நிக்கறதா சொன்னாங்க...
ஆட்டோ சத்தத்துல அவனுங்க என்ன சொல்றாங்க-னு கேக்காம 'bikanwala' போகனும்-னு ஆட்டோகாரன்-ட சொன்னேன்...உடனே அவன் டென்ஷனா திரும்பினான்...
"அது bikanwala இல்ல...bikanirwala...நீ என்ன மெட்ராஸா?? இந்தி ஒழுங்கா தெரியாத நீயெல்லாம் இந்தியனா??"-னான் (சத்தியமா அவன் பேசினது புரிஞ்சுது)
வந்துச்சு கோபம்..."இந்தி தெரிஞ்சாதான் இந்தியனா...உனக்கு தமிழ் தெரியுமா...இங்க இருக்க இவ்வளவு இந்தி தெரிஞ்சா போதும்.."-னு எனக்கு தெரிஞ்ச இந்தில ஆட்டோல இருந்து இறங்குற வரை கத்திட்டு இருந்தேன்...(அத அவன் கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை-ன்றது வேற விஷயம்)
'இப்ப என்னடா சொல்ல வர்ற?'-னு நீங்க கேக்கலாம்...
'நீ அசிங்கப்பட்டதுக்கு என்ன பண்றது'-னு உங்களுக்கு தோனலாம்...
ஆனா அந்த ஆட்டோகாரன் அப்படி பேசக் காரணம், இந்த சம்பவத்தோட impact, மொழி தெரியாத ஊரில் மனிதர்கள் படும் பாடு-னு பல sensitive issues இருக்கு...
அதனால moral of the story-ய நீங்களே பின்னூட்டத்துல போடுங்க...
கப்பி | Kappi 47 பின்னூட்டங்கள்
வகை அனுபவம், சொந்தக் கதை, பொது
அதிமுக செய்த தவறுகள்
தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னமே திமுக தான் ஜெயிக்கும் என ஒருமித்த கருத்து நிலவுவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது...
அதற்குள் முதல்வர் கலைஞருக்கு கடிதம் எல்லாம் வந்துவிட்டது...
அதிமுக-வின் தோல்விக்கு அல்லது திமுக-வின் (கூட்டணியின்?) வெற்றிக்கு காரணங்கள் என்ன?? அதிமுக சறுக்கியது எங்கே?...
2001-2004 அரசு
2001-2004 வரை அதிமுக அரசின் சர்வாதிகாரப் போக்கை மக்கள் மறக்கவில்லை.
அதிமுக வென்றால் திரும்பவும் அதே போன்ற நிலை வராது என்பதற்கான நிச்சயமற்ற நிலையே நடுநிலையாள்ர்களும் கூட திமுக கூட்டணியை ஆதரிக்க வைத்திருக்கலாம்.
இந்த அரசின் பல நல்ல திட்டங்களை ஆதரிப்பவர்கள் கூட 2004-க்கு முந்தைய அரசை மறக்கத் த்யாராக இல்லை.
கூட்டணி
மதிமுக, விசி கூட்டணி எதிர்பார்த்த அளவு வோட்டு வாங்க உதவவில்லை. தலித் வோட்டுகள் சிதறின.
தென்மாவட்டங்களில் மதிமுக-வின் வோட்டு வங்கியும் போதவில்லை.மக்களிடையே வைகோ மேல் மக்களுக்கு ஏற்பட்ட ஒரு ஏமாற்றமும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
பிரசாரம்
வைகோ தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் முன்பே பிரசாரத்தைத் துவங்கினாலும் கடைசி நேரத்தில் reinforce செய்யத் தவறிவிட்டார்.
அதே போல் கூட்டணித் தலைவர்கள் ஒன்றாக பிரசாரம் செய்யாததும் தொண்டர்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.
மாறன் குடும்பத்தைப் சுற்றியே வியூகம் அமைத்ததும் மக்களிடையே சலசலப்பை உண்டாக்கினாலும் அவை வோட்டுகளாக மாறவில்லை.
அதே போல் என்ன தான் சன் மீது தாக்குதல் நடத்தினாலும் மக்கள் ஜெயா டிவியை விட சன் டிவியைத் தான் அதிகம் பார்க்கிறார்கள் என்ற முகத்திலறையும் உண்மை....
இலவசங்களை முதலில் நையாண்டி பேசிவிட்டு பின்னர் தானும் அறிவித்தது தோல்வி பயமாகச் சித்தரிக்கப்பட்டது.
'பிரசாரத்தின் போது அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் ஏன் ஏற்கனவே செயல்படுத்தவில்லை' என்ற கேள்விக்கும் அதிரடியான பதில் இல்லை.
நடிகர்களை வைத்து பிரசாரம் செய்ததும் பயனளித்ததாகத் தெரியவில்லை.
'கருத்துக்கணிப்புகளில் ஜெயிக்கற கட்சிக்கு வோட்டு' என்று திமுக கூட்டணி proactive-ஆக பிரசாரம் செய்ய அதிமுக அப்படிப்பட்ட தாக்கம் ஏற்படுத்தும் வழிமுறை எதுவும் பின்பற்றவில்லை.
மத்திய அரசுடனான உறவு
மத்திய அரசுடன் சூமூகமான உறவு இல்லை என்று தேர்தல் பிரசாரத்தின்போது தாங்களே சொல்லிக்கொண்டது மக்களை யோசிக்க வைத்திருக்கலாம்.
திமுக ஆட்சியில் இருந்தால் மத்திய அரசின் உதவிகள் நேரடியாகத் தமிழகத்துக்கு வரும் என்ற மாயையை உருவாக்கவே இந்த விஷயம் பயன்பட்டது.
அரசின் செயல்பாடு
சட்டமன்றம் ஆளுங்கட்சியின் செயற்குழு கூட்டம் போல் நடந்தது தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மற்றும் சிலரைத் தவிர மற்ற அமைச்சர்களின் செயல்பாடும் ஏமாற்றத்தியே அளித்தன.
மக்களுக்கு உதவக்கூடிய பல நல்ல திட்டங்கள் அரசு கொண்டுவந்தாலும் முந்தைய திமுக அரசின் திட்டங்களைக் கிடப்பில் போட்டது, அரசுப் பணியாளரிகள் வேலை நீக்கம், TASMAC, இது போல் பல விஷயங்கள் அரசின் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்தது.
அரசு மாற்றம்
மக்களிடையே ஆட்சி மாற்றத்துக்கான ஆதரவு. இதை அதிமுக-வின் தவறு என குறிப்பிட முடியாவிட்டலும் இந்த அரசு மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருந்தால் ஆட்சி மாற்றம் குறித்து மக்கள் யோசிக்க மாட்டார்கள்.
இது போக பல காரணங்கள் உள்ளன...சசிகலா குடும்பம், அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் வலுவாக இல்லாதது, பல விஷயங்களில் அரசு கொண்ட சார்புநிலை...இது போல் பல...
இந்த தேர்தலை திமுக கூட்டணியின் வெற்றியாகக் கொள்ளாமல் அதிமுக-வின் தோல்வியாகக் காண்பதே மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள உதவும்.
கப்பி | Kappi 3 பின்னூட்டங்கள்
வகை பொது
ஜூவி ஆவி...திமுக கையில் சாவி...
திமுக கூட்டணி 207..
அதிமுக கூட்டணி 26..
பாஜக 1..
ஏற்கனவே ஜூ.வி-யின் கருத்துக்கணிப்புக்கு வைகோ தேவையான அளவு பப்ளிசிட்டி கொடுத்ததால் இந்த கணிப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது...
எந்த கூட்டணிக்கும் க்ளீன் ஸ்வீப் கிடைக்காது என்று ஒருமித்த கருத்து பரவி வந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள ஜூ.வி கருத்துக் கணிப்பு திமுக கூட்டணிக்கு 207 இடங்களில் முன்னணி எனக் கூறியுள்ளது...
disclaimer-ல் இருபது தொகுதிகள் வரை ரிசல்ட் மாறலாம் என்கிறார்கள்...
திமுக கூட்டணிக்கும் அமோக வெற்றி வாய்ப்பைக் கொடுத்தாலும் திமுக(117) தனித்து ஆட்சி அமைப்பது முடியாது என்றே கணித்திருக்கிறார்கள்..
பல தொகுதிகளில் நூலிழை முன்னணி என்றே இந்த கணிப்பில் குறிப்பிட்டாலும் திமுக-விற்கு இது 'லாஸ்ட் மினிட் அட்வான்டேஜை' தரும்...
அதிமுக ஆட்சிமுறை குறித்து அதிருப்தி அலை இல்லை என்றும், திமுக முன்னணிக்கு மக்கள் ஆட்சிமாற்றத்தை விரும்புவதே திமுக முன்னணியில் இருப்பதற்குக் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது...2004 தேர்தலுக்கு முந்தைய அதிமுக அரசின் செயல்பாடுகள் மீதான கசப்பு நீங்காததும் காரணம்....
நாடாளுமன்ற தொகுதி வாரியாக வெளியாகியுள்ள இந்த கணிப்பு 2004 தேர்தல் போன்ற pattern-னே திரும்ப வரும் என்கிறது...இந்த 40-ல் அதிமுக கூட்டணி எந்த தொகுதியிலும் அது உள்ளடக்கிய அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னணியில் இல்லை...
சென்னையில் ராயபுரம், ஆர்.கே.நகர்,ஆலந்தூர் தவிர மற்ற தொகுதிகளில் திமுக முன்ன்ணி என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை...ஆனால் பல தலைகளுக்கு இந்த கணிப்பு 'ஆப்பு' என் கூறியிருக்கிறது...
முக்கியமாக, விஜயகாந்த்...கட்சியில் அவர் மட்டுமாவது ஜெயிப்பார் என பரவலாக் கருதி வந்த நிலையில் கேப்டன் விருத்தாசலத்தில் இரண்டாவது இடம்!!!திமுக வோட்டைப் பிரிப்பார் என மற்ற கணிப்புகள் சொல்ல ஜூவி அவர் பிரிக்கப்போவது விடுதலை சிறுத்தைகள்,அதிமுக வோட்டுகளை என்கிறது...பன்ருட்டியாருக்கும் இரண்டாவ்து இடமே...
அதிமுக-விற்கு முன்னணி என்று குறிப்பிட்டுள்ள தொகுதிகளில் பலவும் புதுமுகங்கள் நிற்கும் தொகுதியே...பல அமைச்சர்கள் தோல்வியைத் தழுவுவார்கள் என்றே கணிக்கிறது...
இடைத்தேர்தலில் அதிமுக வென்ற 2 தொகுதிகளில் கூட கும்மிடிப்பூண்டியை மட்டுமே தக்க வைக்க முடிந்திருக்கிறது...காஞ்சியில் பாமக ஜெயிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது...
தளியில் பாஜக வெல்லவும் அதன் வேட்பாளரே காரணம் என்கிறது கணிப்பு...
திமுக-விற்கு 132-ல் 117 தவிர , காங்கிரஸ் 48-ல் 44, பாமக 31-ல் 27, சி.பி.எம் 13-ல் 12, சி.பி.ஐ 10-ல் 7 என இந்த முன்னணியில் கூட்டணிக் கட்சிகளின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது...
அதே நேரத்தில், அதிமுக 188-ல் 22 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது...மதிமுக-வும் 35-ல் நான்கே தொகுதிகள் தான்...மதிமுக,விடுதலை சிறுத்தைகளுடனான கூட்டணி அதிமுக-விற்கு உதவியதாகத் தெரியவில்லை...
இவர்களில் 10 பேர் தனிக்கட்சி ஆட்சி என்றும் 5 பேர் கூட்டணி ஆட்சி என்றும் கணித்திள்ளனர்..
ஆனந்த விகடனில் வெளியாகியிள்ள வாசகர் கணிப்பிலும் 15 பேரில் ஒருவரைத் தவிர அனைவரும் திமுக-வே வெல்லும் என கணித்துள்ளனர்.இவர்களிலும் பெரும்பாலான வாசகர்கள் திமுக கூட்டணிக்கு 200 தொகுதிகளுக்கு மேல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது...
இந்த வாசக்ர்கள் 2004-ல் திமுக ஆதரவாக 40-0 என கணித்தவர்கள் எனக் கொண்டாலும் ஜூ.வி-யின் கணிப்பும், நக்கீரனின் கணிப்பும்(206-28) குமுதம் ரிப்போர்டர்(145-80) கணிப்பும் கூட திமுக கூட்டணிக்கு சாதகமாகவே இருக்கிறது...
திமுக கூட்டணி வென்றாலும் திமுக தனித்து ஆட்சி அமைக்க இய்லாது என்றே தோன்றுகிறது...
தமிழ்கம் கூட்டணி ஆட்சிக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது!!!
கப்பி | Kappi 1 பின்னூட்டம்
வகை பொது
பாம்ம்ம்ம்....பீம்ம்ம்....
'நான் பிறந்தேன் காஞ்சியிலே நேற்று...மதுரை வந்து சேந்துப்புட்டேன் இன்று' - என background intro song மனதுக்குள் ஓட கல்லூரியில் சேர்ந்த முதல் நாள்.... தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து விடுதியில் கழித்த முதல் இரவு.....
தியாகராசர் பொறியியற் கல்லூரி....திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்துல இருக்க Govt. Aided College.....
மிதமான ragging கலாசாரம் உள்ள கல்லூரி ( 1980s-ல rag பண்ணதுக்காக final year பையனை first year பையன் வெட்டி கொன்னது தவிர குறிப்பிடத்தக்க சம்பவம் எதுவுமில்லை!!! )...
hostel வாழ்க்கை பத்தி கேக்கவே வேண்டாம்..... என்னைப் பொறுத்தவரை day scholars-ஆக கல்லூரியில் படிக்க நேர்ந்தவர்கள் எல்லாம் சபிக்கப்பட்டவர்கள்.....
எல்லா கல்லூரிகளையும் போல் even semester வந்தா ஒரே ஆட்டம் தான்....college day, sports day, culturals day, hostel day,block day...அப்புறம் final year-னா extra-வா 3 மாடிக்கும் ஒவ்வொரு wing day....
இந்த எல்லா days-க்கும், மத்த விழாக்களுக்கும், tour-களுக்கும் பொதுவானது தான் இந்த 'பாம்ம்ம்ம்...பீம்ம்ம்ம்'...
பெரும்பாலும் எல்லா கல்லூரிகளிலும் 'சல புல' இருக்கும்...அந்த கல்லூரிக்கென்று தனியாக ஒரு பாட்டும் இருக்கும்.....அப்படி TCE-க்கு கிடைத்த அமர பாடல் தான் 'பாம்ம்ம்ம்...பீம்ம்ம்ம்'...
'பாம்ம்ம்ம்...பீம்ம்ம்ம்' போடுவதற்கு சத்தமாக கத்தினால் மட்டும் போதாது..... எல்லோரும் rhythmic-காக கத்த வேண்டும்....
அனைவரும் வட்டமாக நின்று கொள்ள நடுவில் உள்ளவன் பெருங்குரலெடுத்து ஆரம்பிக்க வேண்டும்...
ந.உ: ஏஏஏ...பாம்ம்ம்ம் பீம்ம்ம் டய்யாங் டக்கர.... கொய்யா மாரி...
குழு:பம்..பம்..பம்..
ந.உ:அப்துல் ரஹீம்...
குழு:பம்..பம்..பம்..
ந.உ.: ரங்காச்சாரி....
குழு:பம்..பம்..பம்.. (அப்துல் ரஹீம்,ரங்காச்சாரி...ஒரு 3 4 தடவை repeat பண்ணனும்...)
இதற்குப்பின் 'சல புல' போட வேண்டும்....
'சல புல' பற்றி தெரியாதவர்களுக்காக...
ந.உ: சல புல சல புல கும்த்தலக்கா....
குழு: ஊ...ஆ...ஊ..ஆ...
ந.உ: சல புல சல புல கும்த்தலக்கா....
குழு: ஊ...ஆ...ஊ..ஆ...
இதையே ராகம், தாளம் எல்லாம் மாற்றி பாட வேண்டும்....
புதுப்பேட்டை 'ஒரு நாளில்' melody, remix(composer dream!!) போல் வேகத்தை ஏற்றி இறக்கி கத்த வேண்டும்...இதற்கான முழு பொறுப்பும் நடுவில் உள்ளவனிடமே இருக்கும்...அவன் வேகத்திற்கு ஏற்றவாறு மற்ற்வர்களும் 'ஊ ஆ' வை மாற்றி பாட வேண்டும்....
இந்த அப்துல் ரஹீம்,ரங்காச்சாரி யாரென்று எவனுக்கும் தெரியாது.....பல ஆய்வுகளுக்கு பிறகு அவர்கள் hostel-இன் முதல் வார்டன்களாகத்தான் இருக்க வேண்டும் என முடிவுக்கு வந்தோம்...
இந்த 'பாம் பீம்' மொழி, இனம், டிபார்ட்மெண்ட் அனைத்தையும் கடந்தது....யார் 'பாம் பீம்' போட்டாலும் அதில் பங்கேற்பது பெருமையாக நினைக்கப்பட்டது....
'கண்ட நாள் முதல்' படத்துல லைலா சொல்வாளே அது போல "சந்தோஷம், துக்கம், சேர்வு, பிரிவு, சோர்வு, புத்துணர்ச்சி"-னு எல்லாத்துக்கும் இந்த 'பாம்..பீம்' தான்....
last working day அன்று....
எல்லா department பசங்களும் ஒன்னா சேந்து main block-ல கல்லூரியே அதிர போட்ட அந்த 'பாம்..பீம்'....
ப்ரின்சிபால் வந்து 'போதும் கிளம்புங்க'-னு கிளப்பி விடும் வரையில் போட்ட அந்த 'பாம்..பீம்'....
இதுக்குப் பின் எப்போது 'பாம்..பீம்' போட முடியுமோ என தொண்டை கிழிய அன்று போட்ட 'பாம்..பீம்'....
கடைசி 'பாம்..பீம்' முடிந்ததும் அனைவரையும் சூழ்ந்த அந்த பேரமைதி.......
'பாம் பீம்' பல நினைவுகளை முடிச்சிடும் கயிறாக இருக்கிறது......
கப்பி | Kappi 16 பின்னூட்டங்கள்
வகை சொந்தக் கதை
