ஒரு ரீமிக்ஸ் - ஒரு புகைப்படம்

புகைப்படம்





டிஸ்கி: பதிவர் வட்டம் லேபிள் சும்மா தமாசுக்கு..நுண்ணரசியல் லேது :))



**



ரீமிக்ஸ்


காட்சிகள் பாட்டோடு பக்காவா ஒத்துப்போக கலக்கலா பண்ணியிருக்காங்க..




பஞ்ச டயலாக்ஸு

அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன்!

எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது?

நாலு பேரு நல்லா இருக்கனும்னா எதுவும் தப்பில்ல

இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்பிட்டிருக்காங்க

நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு!!

இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா நாராயணா

ஆத்தா நான் பாசாயிட்டேன்

சிரிங்கடா சிரிங்க..பூமாதேவி சிரிக்க போறா..எல்லாரும் உள்ள போப்போறோம்

சார்..கடை எப்ப சார் தொறப்பீங்க?

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ்சாமி

பத்த வச்சுட்டீயே பரட்டை!!

மார்க் மை வோர்ட்ஸ்! ஹி வில் கோ ப்ளேசஸ்!!

மலை மேல பொட்டிக்கடை வச்சிருக்க அம்மா சொன்னாங்க

ஏன்னா நீ என் நண்பன்

இங்க பார்றா கிச்சா

கககபோ

கிளிக்கு ரெக்கை முளைச்சுடுச்சு..பர்ர்ர்றந்து போச்சு

கொடுத்த காசுக்கு மேலயே கூவறானே

கலக்கிட்டடா காபி!

தெய்வமே..எங்கியோ போயிட்டீங்க!!

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு ரணகளமா இருக்கு

வீரம்னா என்ன தெரியுமா? பயமில்லாத மாதிரி நடிக்கறது

ஏன்?

இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்

ஒங்க கடமையுணர்ச்சி மெய்சிலிர்க்க வெக்குதுடா!!

வொய் ப்ளட்? சேம் ப்ளட்!

அடிச்ச கைப்புள்ளைக்கே இப்படின்னா அடிவாங்கினவன் உயிரோட இருப்பான்ற?

ஏன் இந்த கொலவெறி??

என்னய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே

வெறும் பணம்

ஏன்னா நீ என் நண்பன்

யாருடா நீ?

வருவானாடா? அவன் வருவானாடா?

நான் தனி ஆள் இல்ல!

எஸ்கேஏஏஏப்ப்ப்ப்

என்ன கொடுமை சரவணன் இது

தவுசண்ட் பெரியார்ஸ் வந்தாலும் திருத்த முடியாதுடா

ஐயாம் யுவர் பெஸ்ட் ஃப்ரெண்ட்

ஆணியே புடுங்க வேணாம்

பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?

நட்புன்னா என்ன தெரியுமா?

ஹூ இஸ் த டிஸ்டபன்ஸ்

என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களேடா

கூடை வச்சிருக்கவங்களுக்கு விளக்கு கொடுக்கறதில்ல

யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்தற??

நான் வேனும்னா படிச்சு டாக்டராவோ இஞ்சினியராவோ ஆயிடவா?

தொப்பி..தொப்பி

நீங்க நல்லவரா கெட்டவரா?

யாரு சார் நீங்க?

இந்த கோட்டத்தாண்டி நானும் வர மாட்டேன் நீயும் வரப்படாது

மாப்பு..வச்சுட்டான்யா ஆப்பு

நாக்கு தெள்ளிதே

உக்காந்து யோசிப்பாய்ங்களோ

என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீயே

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

செயினு..மோதரம்...

இதற்குத் தானே ஆசைபட்டாய் பாலகுமாரா

இப்பவே கண்ணக்கட்டுதே

எப்ப இருந்து சார் இந்த திமிரு? கொஞ்சம் படிச்சவுடனேயா? இல்ல வேலைல சேர்ந்ததுமா?

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

இதெல்லாம் பெருமையா? கடமை!!

சூப்பர் சாப்பாடுடா..அக்குவாஃபீனா இருக்குதாடா

நல்லா வருவீங்க தம்பி! நல்லா வருவீங்க!!

ச்சும்மா..ச்சும்மா

ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு..ஃபினிஷிங் சரியில்லயே!

ம்ம்ம்முடியல!!!



மொ.கு 1 : பொது வாழ்க்கையில அடிக்கடி உபயோகிக்கற டயலாக்ஸு தான்..வேறொன்னுமில்ல .. இப்போதைக்கு இவ்ளோ தான்..பொறவு பார்ட் 2 போட்ருவோம்


மொ.கு 2 : தலைவர் டயலாக்ஸ் சிலதைத் தவிர மத்ததெல்லாம் வேணும்னே வேணாம்னு விட்டாச்சு. அவரை மாதிரி NTPK கேசுங்க டயலாக்கெல்லாம் வேணாம்னே விட்டாச்சு


மொ.கு 3 : ம்ம்ம்ம்முடியல :))



?! - டிசம்பர் (?!)

ஒருமாதமாக இருந்த கைகால் நடுக்கம் சென்ற சனிக்கிழமை சரியானது. நடுக்கத்திற்கான காரணம் தியேட்டர் பக்கம் போகாமலிருந்தது. 'பில்லா' பார்க்கச் சென்றிருந்தோம். பின் வரிசையில் இருந்த குழந்தை நமீதா திரையில் தோன்றிய காட்சியில் "இது யாருப்பா? அவனுக்கு அக்காவா? அண்ணியா? சித்தியா? தங்கச்சியா?" என ஆரம்பித்து படம் முழுக்க கேள்விகள் தான். செம ஜாலி.

குழந்தையில் பாட்டியும் இன்னொருவரும் "இந்தி டான்ல இப்படி இருக்கும். பழைய டான்ல தேங்காய் சீனிவாசன் வருவான்ல. படம் வேகமாவே போலியே" என லைவ் விமர்சனம் செய்துகொண்டிருந்தனர்.

இரண்டு மணி நேர படத்தில் ஒரு மணி நேரம் யாராவது ஸ்லோமோஷனில் நடந்துகொண்டேயிருக்கிறார்கள். ரிச்சாக எடுக்கிறோமென்று எல்லாருமே மாடலிங் செய்துகொண்டிருந்தது போல் தோன்றியது. அஜீத் 'வெத்தலைய போட்டேண்டி' பாடலுக்கு ஆடிய நடனம் 'கொஞ்ச நாள் பொறு தலைவா' பாடலை நினைவுபடுத்தியது. அதே ஸ்டெப்ஸ்தான். 'மை நேம் இஸ் பில்லா'.....வேணாம் அழுதுடுவேன். விஷ்னுவர்தன் எப்போதுமே இடைவேளைக்குப் பிறகு ரொம்ப இழுக்காமல் படத்தை முடித்துவிடுவார். இந்த படத்திலும் அதே. முதல் பாதி தான் கொஞ்சம் இழுவை. ஒருமுறை தாராளமாகப் பார்க்கலாம் - தலக்காகவும், படமாக்கப்பட்ட விதத்துக்காகவும்(நயனுக்காகவும்னு சேர்க்கலாம்..ஆனா அம்மணி ஏமாத்திப்புட்டாங்க..படம் ஃபுல்லா அவங்க காஸ்ட்யூம் மாதிரியே அவங்க ரியாக்ஷனும் ஒரேஏஏஏ மாதிரி தான் இருந்துச்சு). படம் எப்படியும் ஓடிடும்.


கல்லூரி - மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த படம். காட்சிகளும் கதாபாத்திரங்களும் இயல்பாய் இருந்தால் மட்டும் போதுமா என்ன? படம் ரொம்ப போரடிக்கலை. ஓவர் செண்டியும் இல்லை. ஆனா பாலாஜி சக்திவேல் ஏமாத்திட்டார். அட்லீஸ்ட் என்னை. என் நண்பனுக்கு படம் ரொம்பவே பிடித்திருந்தது.

எவனோ ஒருவன் - ப்ரிண்ட் சரியில்ல. இன்னும் பார்க்கல.

******************************

சென்ற வாரம் இங்கு ஒரு அரசு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. டாக்ஸியில் அமர்ந்ததும் வயதான டிரைவர் "இந்தியாவா" எனக் கேட்டுவிட்டு தான் ஈரான் என்றும் தன் பெயரையும் சொன்னார். உடனே எனக்கு தம்பியண்ணனின் ஞாபகம் வந்தது ஏன் எனத் தெரியவில்லை ;).

பழைய இந்தி திரைப்படங்கள் பார்த்திருப்பதாயும் ராஜ்குமாரைப் பிடிக்குமென்றும் சொன்னார். இந்தியாவைப் பற்றியும் ஈரானைப் பற்றியும் பொதுவாகப் பேசிக்கொண்டு வந்த போது அலுவலகம் வந்துவிட்டிருந்தது. எனக்காக காத்திருப்பதாகச் சொன்னார். உள்ளே எவ்வளவு நேரமாகும் என்றும் தெரியாது. வெயிட்டிங் என்று இவர் எவ்வளவு வாங்குவார் என்றும் தெரியாது. எனவே வேண்டாமெனக் கூறி வந்ததற்கான பணத்தைக் கொடுத்தேன். "நான் உனக்காக செய்யவில்லை. இந்தியாவிற்காகத் தான் காத்திருப்பதாகச் சொன்னேன்" என டயலாக் விட்டு என்னுடனே உள்ளே வந்து வரவேற்பரையில் அமர்ந்துகொண்டார். அவர் சீரியசாக சொன்னாரோ என்னமோ ஆனால் "அரைமணி நேரம் காத்திருந்து முப்பது டாலர் சம்பாதிக்க தாத்தா என்னமா டயலாக் விடுறாரு" என்று எனக்குத் தோன்றியதற்கு நான் பிறந்ததிலிருந்து இப்போது வரை என்னை ஏமாத்தியிருந்த ஆட்டோக்காரர்களும் கடைகாரர்களும் காரணமாக இருக்கலாம்.


***************************************


நேற்று திடீரென இந்த பாட்டு ஞாபகம் வந்தது. கேட்டு ரொம்ப நாளாச்சேன்னு யூடியூப்ல தேடிப் பிடிச்சேன். சூப்பர் பாட்டு. பெண் குரல் செமையா இருக்கும். ஆனா அவங்க பேரு தெரியாது.





***************************************

இந்த ஊர் தண்ணி ரொம்பவே மோசமாயிருக்கு. தலைல கை வச்சா பத்துவிரலுக்கு இருபது முடி கையோட வருது. நெத்தி பெருசாயிட்டே இருக்கு. ஊருக்குப் போகும்போது எங்கப்பாரு அளவுக்கு முடியிருந்தாலே சந்தோசப்படுவேன்.

***************************************

நேற்று நெட்டில் படம் பாரத்துக் கொண்டிருக்கும்போது அறை நண்பர் "என்னடா கப்பி படமா? பாதி படம் பார்த்துட்டிருக்கும்போதே அப்படியே தூங்கிடுவ. மீதி படத்தை கனவுலதான் பார்ப்ப.தூங்கி எழுந்ததும் லேப்டாப்பை தொறந்து விமர்சனம்னு எழுதுவ"ன்னு கலாயச்சிட்டு இருந்தார். "இல்ல தல..நான் எழுதறதெல்லாம் ரொம்ப நாள் முன்ன பாத்த படங்கதான்..இப்ப பாக்கறது எதுக்குமே எழுதலை"ன்னு சொன்னேன். "அடப்பாவி அப்போ இத்தினி மாசம் கழிச்சு அந்த படத்துக்கெல்லாமே இப்பத்தான் கனவுல கதை டெவலப் பண்றயா"ன்னு சதாய்ச்சுட்டாரு.

****************************************






















இந்த வெத்து ஏரியால எழுத நெறய விஷயம் தோன்றினாலும் எதுவுமே வேணாம்னு விட்டாச்சு. காரணம் கீழ இருக்க தத்துவம்.


***************************************

இந்த மாத ?! தத்துவம்

"சும்மா இருப்பதே சுகம்"


***************************************



பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 7

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் 1 - சிறில் அலெக்ஸ்
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் 2 - லக்கிலுக்
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் 3 - வினையூக்கி
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் 4 - ஜி.ராகவன்
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் 5 - ஜி
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் 6 - தம்பி

"This is the final boarding call for all passengers traveling to Chennai by flight Air India flight 403. Passengers are requested to board the flight immediately. We wish you a pleasant journey. Thank you"

அறிவிப்பைக் கேட்டதும் சுயநினைவுக்கு வந்த சுரேஷ் செல்போனில் தன் மனைவி சந்தியாவிற்கு அஞ்சலியிடம் தான் கிளம்பிவிட்டதாகத் தகவல் சொல்லிவிட்டு வரிசையில சென்றான். சம்பிரதாயமாக வணக்கம் சொல்லிக்கொண்டிருந்த விமானப் பணிப்பெண்ணுக்கு புன்னகையை பதிலாக்கிவிட்டு தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தான். அவன் நினைவுகள் ஆம்பலைச் சுற்றியே இருந்தன. ஆம்பலைப் பற்றிய குழப்பத்தை விடவும் அவள் ப்ரொஃபைலில் சந்தியா தோழியாக இருந்ததை நினைக்கையில் அவனுக்கு தலை கிறுகிறுத்தது.

ஆம்பலுடன் பழக ஆரம்பித்த நாளிலிருந்து அவளுடன் நடந்த உரையாடல்களை அசைபோட்டான். ஆம்பலின் தொலைபேசி எண்ணை வைத்து அவளது முகவரியைக் கண்டுபிடிக்க முடியுமா? அவளுடன் பேசி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. அண்ணன் என்று அவள் சொன்னதிலிருந்து மெயிலில் மட்டுமே தொடர்பு வைத்திருக்கிறான். தொலைபேசி எண்ணை மாற்றியிருப்பாளா? அவள் சொன்ன கதைகளில் எது உண்மை? சுரேஷ்களை மட்டும் ஏன் தேடித்தேடி வலை விரிக்கிறாள்? ஆர்குட்டில் தன் போட்டோவைப் போட்டதற்கு முதன்முறையாக வருத்தப்பட்டான். எது எப்படியிருந்தாலும் இந்தியாவிலிருந்து திரும்புவதற்குள் ஆம்பல் கதைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டுமென திட்டம் தீட்ட ஆரம்பித்தான்.

சுரேஷ் தன் பெட்டிகளை டிராலியில் தள்ளிக்கொண்டு சென்னை விமான நிலையத்திற்கு வெளியே வந்தான். தொலைவிலிருந்து சந்தியா அஞ்சலி கையசைத்தாள். அவளருகில் நின்றிருந்த ஆம்பலைக் கண்டதும் அவன் கண்கள் இருண்டன.


****************************************************************


இரவு மணி ஒன்று. "Criminal Behavior: A Psychological Approach" என்ற புத்தகம் கையிலிருக்க பிரபுவின் நினைவெல்லாம் அந்த கொலை வழக்கைச் சுற்றியே இருந்தது. பிணத்தின் கையில் அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தப்பட்ட ஆறாவது விரல் அவரை அலைகழித்துக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இது பணத்திற்காகவோ அல்லது அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றோ நடந்த கொலை தான் என்று நினைத்தார். ஆனால் பிணத்தைப் பார்த்த பிறகு அவருக்கு இது சாதாரண கொலையாகப் படவில்லை. அதற்கேற்றாற் போல் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அந்த பெண் கற்பழிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளார்கள். காரணமும் துப்பும் எதுவும் தோன்றாமல் சலிப்படைந்தவராய் 'நம்ம வேலையைப் பார்ப்போம். போலீஸ் பார்த்துக்கிடட்டும்" என்று தனக்குள் சொல்லிக்கொண்டு புத்தகத்தைப் பிரித்தார். சட்டென ராகவனின் நினைவு வந்தது.

முதன்முதலாக சந்தித்தபோதும் இன்று போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் குறித்து பேசிக்கொண்டிருந்த போதும் ராகவனிடம் ஒரு தவிப்பு தெரிந்ததை உணர்ந்திருந்தார். கொலை விசாரணையில் இன்ஸ்பெக்டருக்கு இயல்பாக இருக்கும் தவிப்பு என்றே நினைத்திருந்தார். ஆனால் இப்போது யோசிக்கையில் அவருக்கு ராகவன் தன்னிடம் எதையோ மறைப்பதாகத் தோன்றியது. வாரத்திற்கு இரண்டு மூன்று கொலைகள் நடக்கும் இந்த ஏரியாவில் இந்த வழக்கில் மட்டும் ராகவன் அதிகம் கவனம் செலுத்துவதும், ஆறாம் விரல் பற்றி அவர் குறிப்பிட்ட போது அவன் அதிர்ச்சியடைந்ததும் பிரபுவிற்கு புதிராகவே இருந்தது. ஆர்க்குட்டில் நட்பாகியதாக ஏதோ பெயர் சொன்னாரே? ஆம்பல். அதற்கும் இந்த கொலைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?

படுத்தவாறே தலையணை அடியில் வைத்திருந்த தன் செல்போனை துழாவி எடுத்தார் பிரபு.


*******************************************************

ஆம்பல். ஆம்பல். ஆம்பல்.

நான்காவது ரவுண்ட் விஸ்கி ராவாக உள்ளே சென்றது. நிமிடத்திற்கு ஒரு முறை அருகிலிருந்த லேப்டாப்பில் ஆர்க்குட் பக்கத்தை ரிஃப்ரெஷ் செய்துகொண்டிருந்தான். கொலை நடந்த தினத்திலிருந்து ஆம்பல் ஆர்க்குட் பக்கமே வரவில்லை. தொடர்ந்து அனுப்பிய மெயில்களுக்கும் பதிலில்லை. குழப்பத்தின் உச்சத்தில் இருந்தான்.

ஆம்பலினால் வேலையிலும் ஒருமனதாக ஈடுபட முடியாமல் போனது அவனுக்கு கோபத்தை வரவழைத்தது. விஸ்கி பாட்டிலை அப்படியே கவிழ்த்துக் குடித்துவிட்டு சோபாவில் சாய்ந்தான். ஆம்பலை மறந்துவிட்டு வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து அருகிலிருந்த ஃபைலைத் திறந்தான்.

கொலையான பெண்ணின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட். நெற்றிப்பொட்டில் சுடப்பட்டிருக்கிறாள். ஒரே குண்டு. அருகாமையில் இருந்து சுட்டிருக்க வேண்டும். அல்லது துப்பாக்கி சுடுவதில் தேர்ச்சி பெற்றவனாய் இருக்க வேண்டும். ஆறாவது விரல் பற்றி படித்ததும் அவனுக்கு சிரிப்பு வந்தது. அதே நேரம் அது மூடநம்பிக்கைக்காக வைத்துக்கொண்ட விரலா அல்லது இந்த கொலைக்கான காரணத்துடன் சம்பந்தப்பட்டதா எனக் குழம்பினான்.

அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு கொலையைக் குறித்து ஒவ்வொரு விஷயமாக அசைபோட்டான். ஆள்நடமாட்டம் மிகுந்த இடத்தில் நடந்த கொலை. கொலை செய்தவனும் அந்த பெண்ணும் ஒன்றாக வந்திருக்க வேண்டும். ஏனென்றால் துப்பாக்கி காட்டி மிரட்டி திருடும் ரவுடிகள் ஏரியாவில் யாருமில்லை. அருகில் காரோ பைக்கோ சென்ற வண்டித்தடம் எதுவுமில்லை. மெயின் ரோட்டில் வண்டியை நிறுத்திவிட்டு நடந்து வந்திருக்கலாம். ஏற்கனவே விசாரித்ததில் அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் வண்டி நின்றிருந்ததாக யாரும் சொல்லவில்லை. கொலையாளி வந்த காரியத்தை வேகமாக முடித்துவிட்டு தப்பியிருக்கிறான். முகம் அடையாளம் தெரியாத வகையில் கொலை செய்தபின் முகத்தைத் தாக்கியிருக்கிறான்.

இவ்வாறாக யோசித்துக்கொண்டிருந்தவன் சட்டென லேப்டாப்பை எடுத்து மடியில் வைத்து ஆர்க்குட்டைத் திறந்தான். ஆர்க்குட் தேடுகட்டத்தில் ஆம்பல் பெயரையிட்டு தேடினான்.

பக்கத்தில் டேபிள் மேல் வைக்கப்பட்ட புகைப்படத்திலிருந்து அவன் மனைவி கயல்விழி அவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.


************************************


சிறுகதை சித்தர், போர்வாள் தேவ் அவர்கள் தொடர்வார்.


சுரேஷின் மனைவி பெயர் அஞ்சலி என ஜி.ரா தெளிவாக சொல்லியும் நான் குழப்(ம்)பிட்டேன். மாப்பு கேட்டுக்கறேன். :( .