ஒரு ரீமிக்ஸ் - ஒரு புகைப்படம்

புகைப்படம்





டிஸ்கி: பதிவர் வட்டம் லேபிள் சும்மா தமாசுக்கு..நுண்ணரசியல் லேது :))



**



ரீமிக்ஸ்


காட்சிகள் பாட்டோடு பக்காவா ஒத்துப்போக கலக்கலா பண்ணியிருக்காங்க..




பஞ்ச டயலாக்ஸு

அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன்!

எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது?

நாலு பேரு நல்லா இருக்கனும்னா எதுவும் தப்பில்ல

இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்பிட்டிருக்காங்க

நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு!!

இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா நாராயணா

ஆத்தா நான் பாசாயிட்டேன்

சிரிங்கடா சிரிங்க..பூமாதேவி சிரிக்க போறா..எல்லாரும் உள்ள போப்போறோம்

சார்..கடை எப்ப சார் தொறப்பீங்க?

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ்சாமி

பத்த வச்சுட்டீயே பரட்டை!!

மார்க் மை வோர்ட்ஸ்! ஹி வில் கோ ப்ளேசஸ்!!

மலை மேல பொட்டிக்கடை வச்சிருக்க அம்மா சொன்னாங்க

ஏன்னா நீ என் நண்பன்

இங்க பார்றா கிச்சா

கககபோ

கிளிக்கு ரெக்கை முளைச்சுடுச்சு..பர்ர்ர்றந்து போச்சு

கொடுத்த காசுக்கு மேலயே கூவறானே

கலக்கிட்டடா காபி!

தெய்வமே..எங்கியோ போயிட்டீங்க!!

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு ரணகளமா இருக்கு

வீரம்னா என்ன தெரியுமா? பயமில்லாத மாதிரி நடிக்கறது

ஏன்?

இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்

ஒங்க கடமையுணர்ச்சி மெய்சிலிர்க்க வெக்குதுடா!!

வொய் ப்ளட்? சேம் ப்ளட்!

அடிச்ச கைப்புள்ளைக்கே இப்படின்னா அடிவாங்கினவன் உயிரோட இருப்பான்ற?

ஏன் இந்த கொலவெறி??

என்னய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே

வெறும் பணம்

ஏன்னா நீ என் நண்பன்

யாருடா நீ?

வருவானாடா? அவன் வருவானாடா?

நான் தனி ஆள் இல்ல!

எஸ்கேஏஏஏப்ப்ப்ப்

என்ன கொடுமை சரவணன் இது

தவுசண்ட் பெரியார்ஸ் வந்தாலும் திருத்த முடியாதுடா

ஐயாம் யுவர் பெஸ்ட் ஃப்ரெண்ட்

ஆணியே புடுங்க வேணாம்

பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?

நட்புன்னா என்ன தெரியுமா?

ஹூ இஸ் த டிஸ்டபன்ஸ்

என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களேடா

கூடை வச்சிருக்கவங்களுக்கு விளக்கு கொடுக்கறதில்ல

யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்தற??

நான் வேனும்னா படிச்சு டாக்டராவோ இஞ்சினியராவோ ஆயிடவா?

தொப்பி..தொப்பி

நீங்க நல்லவரா கெட்டவரா?

யாரு சார் நீங்க?

இந்த கோட்டத்தாண்டி நானும் வர மாட்டேன் நீயும் வரப்படாது

மாப்பு..வச்சுட்டான்யா ஆப்பு

நாக்கு தெள்ளிதே

உக்காந்து யோசிப்பாய்ங்களோ

என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீயே

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

செயினு..மோதரம்...

இதற்குத் தானே ஆசைபட்டாய் பாலகுமாரா

இப்பவே கண்ணக்கட்டுதே

எப்ப இருந்து சார் இந்த திமிரு? கொஞ்சம் படிச்சவுடனேயா? இல்ல வேலைல சேர்ந்ததுமா?

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

இதெல்லாம் பெருமையா? கடமை!!

சூப்பர் சாப்பாடுடா..அக்குவாஃபீனா இருக்குதாடா

நல்லா வருவீங்க தம்பி! நல்லா வருவீங்க!!

ச்சும்மா..ச்சும்மா

ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு..ஃபினிஷிங் சரியில்லயே!

ம்ம்ம்முடியல!!!



மொ.கு 1 : பொது வாழ்க்கையில அடிக்கடி உபயோகிக்கற டயலாக்ஸு தான்..வேறொன்னுமில்ல .. இப்போதைக்கு இவ்ளோ தான்..பொறவு பார்ட் 2 போட்ருவோம்


மொ.கு 2 : தலைவர் டயலாக்ஸ் சிலதைத் தவிர மத்ததெல்லாம் வேணும்னே வேணாம்னு விட்டாச்சு. அவரை மாதிரி NTPK கேசுங்க டயலாக்கெல்லாம் வேணாம்னே விட்டாச்சு


மொ.கு 3 : ம்ம்ம்ம்முடியல :))



?! - டிசம்பர் (?!)

ஒருமாதமாக இருந்த கைகால் நடுக்கம் சென்ற சனிக்கிழமை சரியானது. நடுக்கத்திற்கான காரணம் தியேட்டர் பக்கம் போகாமலிருந்தது. 'பில்லா' பார்க்கச் சென்றிருந்தோம். பின் வரிசையில் இருந்த குழந்தை நமீதா திரையில் தோன்றிய காட்சியில் "இது யாருப்பா? அவனுக்கு அக்காவா? அண்ணியா? சித்தியா? தங்கச்சியா?" என ஆரம்பித்து படம் முழுக்க கேள்விகள் தான். செம ஜாலி.

குழந்தையில் பாட்டியும் இன்னொருவரும் "இந்தி டான்ல இப்படி இருக்கும். பழைய டான்ல தேங்காய் சீனிவாசன் வருவான்ல. படம் வேகமாவே போலியே" என லைவ் விமர்சனம் செய்துகொண்டிருந்தனர்.

இரண்டு மணி நேர படத்தில் ஒரு மணி நேரம் யாராவது ஸ்லோமோஷனில் நடந்துகொண்டேயிருக்கிறார்கள். ரிச்சாக எடுக்கிறோமென்று எல்லாருமே மாடலிங் செய்துகொண்டிருந்தது போல் தோன்றியது. அஜீத் 'வெத்தலைய போட்டேண்டி' பாடலுக்கு ஆடிய நடனம் 'கொஞ்ச நாள் பொறு தலைவா' பாடலை நினைவுபடுத்தியது. அதே ஸ்டெப்ஸ்தான். 'மை நேம் இஸ் பில்லா'.....வேணாம் அழுதுடுவேன். விஷ்னுவர்தன் எப்போதுமே இடைவேளைக்குப் பிறகு ரொம்ப இழுக்காமல் படத்தை முடித்துவிடுவார். இந்த படத்திலும் அதே. முதல் பாதி தான் கொஞ்சம் இழுவை. ஒருமுறை தாராளமாகப் பார்க்கலாம் - தலக்காகவும், படமாக்கப்பட்ட விதத்துக்காகவும்(நயனுக்காகவும்னு சேர்க்கலாம்..ஆனா அம்மணி ஏமாத்திப்புட்டாங்க..படம் ஃபுல்லா அவங்க காஸ்ட்யூம் மாதிரியே அவங்க ரியாக்ஷனும் ஒரேஏஏஏ மாதிரி தான் இருந்துச்சு). படம் எப்படியும் ஓடிடும்.


கல்லூரி - மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த படம். காட்சிகளும் கதாபாத்திரங்களும் இயல்பாய் இருந்தால் மட்டும் போதுமா என்ன? படம் ரொம்ப போரடிக்கலை. ஓவர் செண்டியும் இல்லை. ஆனா பாலாஜி சக்திவேல் ஏமாத்திட்டார். அட்லீஸ்ட் என்னை. என் நண்பனுக்கு படம் ரொம்பவே பிடித்திருந்தது.

எவனோ ஒருவன் - ப்ரிண்ட் சரியில்ல. இன்னும் பார்க்கல.

******************************

சென்ற வாரம் இங்கு ஒரு அரசு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. டாக்ஸியில் அமர்ந்ததும் வயதான டிரைவர் "இந்தியாவா" எனக் கேட்டுவிட்டு தான் ஈரான் என்றும் தன் பெயரையும் சொன்னார். உடனே எனக்கு தம்பியண்ணனின் ஞாபகம் வந்தது ஏன் எனத் தெரியவில்லை ;).

பழைய இந்தி திரைப்படங்கள் பார்த்திருப்பதாயும் ராஜ்குமாரைப் பிடிக்குமென்றும் சொன்னார். இந்தியாவைப் பற்றியும் ஈரானைப் பற்றியும் பொதுவாகப் பேசிக்கொண்டு வந்த போது அலுவலகம் வந்துவிட்டிருந்தது. எனக்காக காத்திருப்பதாகச் சொன்னார். உள்ளே எவ்வளவு நேரமாகும் என்றும் தெரியாது. வெயிட்டிங் என்று இவர் எவ்வளவு வாங்குவார் என்றும் தெரியாது. எனவே வேண்டாமெனக் கூறி வந்ததற்கான பணத்தைக் கொடுத்தேன். "நான் உனக்காக செய்யவில்லை. இந்தியாவிற்காகத் தான் காத்திருப்பதாகச் சொன்னேன்" என டயலாக் விட்டு என்னுடனே உள்ளே வந்து வரவேற்பரையில் அமர்ந்துகொண்டார். அவர் சீரியசாக சொன்னாரோ என்னமோ ஆனால் "அரைமணி நேரம் காத்திருந்து முப்பது டாலர் சம்பாதிக்க தாத்தா என்னமா டயலாக் விடுறாரு" என்று எனக்குத் தோன்றியதற்கு நான் பிறந்ததிலிருந்து இப்போது வரை என்னை ஏமாத்தியிருந்த ஆட்டோக்காரர்களும் கடைகாரர்களும் காரணமாக இருக்கலாம்.


***************************************


நேற்று திடீரென இந்த பாட்டு ஞாபகம் வந்தது. கேட்டு ரொம்ப நாளாச்சேன்னு யூடியூப்ல தேடிப் பிடிச்சேன். சூப்பர் பாட்டு. பெண் குரல் செமையா இருக்கும். ஆனா அவங்க பேரு தெரியாது.





***************************************

இந்த ஊர் தண்ணி ரொம்பவே மோசமாயிருக்கு. தலைல கை வச்சா பத்துவிரலுக்கு இருபது முடி கையோட வருது. நெத்தி பெருசாயிட்டே இருக்கு. ஊருக்குப் போகும்போது எங்கப்பாரு அளவுக்கு முடியிருந்தாலே சந்தோசப்படுவேன்.

***************************************

நேற்று நெட்டில் படம் பாரத்துக் கொண்டிருக்கும்போது அறை நண்பர் "என்னடா கப்பி படமா? பாதி படம் பார்த்துட்டிருக்கும்போதே அப்படியே தூங்கிடுவ. மீதி படத்தை கனவுலதான் பார்ப்ப.தூங்கி எழுந்ததும் லேப்டாப்பை தொறந்து விமர்சனம்னு எழுதுவ"ன்னு கலாயச்சிட்டு இருந்தார். "இல்ல தல..நான் எழுதறதெல்லாம் ரொம்ப நாள் முன்ன பாத்த படங்கதான்..இப்ப பாக்கறது எதுக்குமே எழுதலை"ன்னு சொன்னேன். "அடப்பாவி அப்போ இத்தினி மாசம் கழிச்சு அந்த படத்துக்கெல்லாமே இப்பத்தான் கனவுல கதை டெவலப் பண்றயா"ன்னு சதாய்ச்சுட்டாரு.

****************************************






















இந்த வெத்து ஏரியால எழுத நெறய விஷயம் தோன்றினாலும் எதுவுமே வேணாம்னு விட்டாச்சு. காரணம் கீழ இருக்க தத்துவம்.


***************************************

இந்த மாத ?! தத்துவம்

"சும்மா இருப்பதே சுகம்"


***************************************



பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 7

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் 1 - சிறில் அலெக்ஸ்
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் 2 - லக்கிலுக்
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் 3 - வினையூக்கி
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் 4 - ஜி.ராகவன்
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் 5 - ஜி
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் 6 - தம்பி

"This is the final boarding call for all passengers traveling to Chennai by flight Air India flight 403. Passengers are requested to board the flight immediately. We wish you a pleasant journey. Thank you"

அறிவிப்பைக் கேட்டதும் சுயநினைவுக்கு வந்த சுரேஷ் செல்போனில் தன் மனைவி சந்தியாவிற்கு அஞ்சலியிடம் தான் கிளம்பிவிட்டதாகத் தகவல் சொல்லிவிட்டு வரிசையில சென்றான். சம்பிரதாயமாக வணக்கம் சொல்லிக்கொண்டிருந்த விமானப் பணிப்பெண்ணுக்கு புன்னகையை பதிலாக்கிவிட்டு தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தான். அவன் நினைவுகள் ஆம்பலைச் சுற்றியே இருந்தன. ஆம்பலைப் பற்றிய குழப்பத்தை விடவும் அவள் ப்ரொஃபைலில் சந்தியா தோழியாக இருந்ததை நினைக்கையில் அவனுக்கு தலை கிறுகிறுத்தது.

ஆம்பலுடன் பழக ஆரம்பித்த நாளிலிருந்து அவளுடன் நடந்த உரையாடல்களை அசைபோட்டான். ஆம்பலின் தொலைபேசி எண்ணை வைத்து அவளது முகவரியைக் கண்டுபிடிக்க முடியுமா? அவளுடன் பேசி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. அண்ணன் என்று அவள் சொன்னதிலிருந்து மெயிலில் மட்டுமே தொடர்பு வைத்திருக்கிறான். தொலைபேசி எண்ணை மாற்றியிருப்பாளா? அவள் சொன்ன கதைகளில் எது உண்மை? சுரேஷ்களை மட்டும் ஏன் தேடித்தேடி வலை விரிக்கிறாள்? ஆர்குட்டில் தன் போட்டோவைப் போட்டதற்கு முதன்முறையாக வருத்தப்பட்டான். எது எப்படியிருந்தாலும் இந்தியாவிலிருந்து திரும்புவதற்குள் ஆம்பல் கதைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டுமென திட்டம் தீட்ட ஆரம்பித்தான்.

சுரேஷ் தன் பெட்டிகளை டிராலியில் தள்ளிக்கொண்டு சென்னை விமான நிலையத்திற்கு வெளியே வந்தான். தொலைவிலிருந்து சந்தியா அஞ்சலி கையசைத்தாள். அவளருகில் நின்றிருந்த ஆம்பலைக் கண்டதும் அவன் கண்கள் இருண்டன.


****************************************************************


இரவு மணி ஒன்று. "Criminal Behavior: A Psychological Approach" என்ற புத்தகம் கையிலிருக்க பிரபுவின் நினைவெல்லாம் அந்த கொலை வழக்கைச் சுற்றியே இருந்தது. பிணத்தின் கையில் அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தப்பட்ட ஆறாவது விரல் அவரை அலைகழித்துக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இது பணத்திற்காகவோ அல்லது அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றோ நடந்த கொலை தான் என்று நினைத்தார். ஆனால் பிணத்தைப் பார்த்த பிறகு அவருக்கு இது சாதாரண கொலையாகப் படவில்லை. அதற்கேற்றாற் போல் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அந்த பெண் கற்பழிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளார்கள். காரணமும் துப்பும் எதுவும் தோன்றாமல் சலிப்படைந்தவராய் 'நம்ம வேலையைப் பார்ப்போம். போலீஸ் பார்த்துக்கிடட்டும்" என்று தனக்குள் சொல்லிக்கொண்டு புத்தகத்தைப் பிரித்தார். சட்டென ராகவனின் நினைவு வந்தது.

முதன்முதலாக சந்தித்தபோதும் இன்று போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் குறித்து பேசிக்கொண்டிருந்த போதும் ராகவனிடம் ஒரு தவிப்பு தெரிந்ததை உணர்ந்திருந்தார். கொலை விசாரணையில் இன்ஸ்பெக்டருக்கு இயல்பாக இருக்கும் தவிப்பு என்றே நினைத்திருந்தார். ஆனால் இப்போது யோசிக்கையில் அவருக்கு ராகவன் தன்னிடம் எதையோ மறைப்பதாகத் தோன்றியது. வாரத்திற்கு இரண்டு மூன்று கொலைகள் நடக்கும் இந்த ஏரியாவில் இந்த வழக்கில் மட்டும் ராகவன் அதிகம் கவனம் செலுத்துவதும், ஆறாம் விரல் பற்றி அவர் குறிப்பிட்ட போது அவன் அதிர்ச்சியடைந்ததும் பிரபுவிற்கு புதிராகவே இருந்தது. ஆர்க்குட்டில் நட்பாகியதாக ஏதோ பெயர் சொன்னாரே? ஆம்பல். அதற்கும் இந்த கொலைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?

படுத்தவாறே தலையணை அடியில் வைத்திருந்த தன் செல்போனை துழாவி எடுத்தார் பிரபு.


*******************************************************

ஆம்பல். ஆம்பல். ஆம்பல்.

நான்காவது ரவுண்ட் விஸ்கி ராவாக உள்ளே சென்றது. நிமிடத்திற்கு ஒரு முறை அருகிலிருந்த லேப்டாப்பில் ஆர்க்குட் பக்கத்தை ரிஃப்ரெஷ் செய்துகொண்டிருந்தான். கொலை நடந்த தினத்திலிருந்து ஆம்பல் ஆர்க்குட் பக்கமே வரவில்லை. தொடர்ந்து அனுப்பிய மெயில்களுக்கும் பதிலில்லை. குழப்பத்தின் உச்சத்தில் இருந்தான்.

ஆம்பலினால் வேலையிலும் ஒருமனதாக ஈடுபட முடியாமல் போனது அவனுக்கு கோபத்தை வரவழைத்தது. விஸ்கி பாட்டிலை அப்படியே கவிழ்த்துக் குடித்துவிட்டு சோபாவில் சாய்ந்தான். ஆம்பலை மறந்துவிட்டு வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து அருகிலிருந்த ஃபைலைத் திறந்தான்.

கொலையான பெண்ணின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட். நெற்றிப்பொட்டில் சுடப்பட்டிருக்கிறாள். ஒரே குண்டு. அருகாமையில் இருந்து சுட்டிருக்க வேண்டும். அல்லது துப்பாக்கி சுடுவதில் தேர்ச்சி பெற்றவனாய் இருக்க வேண்டும். ஆறாவது விரல் பற்றி படித்ததும் அவனுக்கு சிரிப்பு வந்தது. அதே நேரம் அது மூடநம்பிக்கைக்காக வைத்துக்கொண்ட விரலா அல்லது இந்த கொலைக்கான காரணத்துடன் சம்பந்தப்பட்டதா எனக் குழம்பினான்.

அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு கொலையைக் குறித்து ஒவ்வொரு விஷயமாக அசைபோட்டான். ஆள்நடமாட்டம் மிகுந்த இடத்தில் நடந்த கொலை. கொலை செய்தவனும் அந்த பெண்ணும் ஒன்றாக வந்திருக்க வேண்டும். ஏனென்றால் துப்பாக்கி காட்டி மிரட்டி திருடும் ரவுடிகள் ஏரியாவில் யாருமில்லை. அருகில் காரோ பைக்கோ சென்ற வண்டித்தடம் எதுவுமில்லை. மெயின் ரோட்டில் வண்டியை நிறுத்திவிட்டு நடந்து வந்திருக்கலாம். ஏற்கனவே விசாரித்ததில் அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் வண்டி நின்றிருந்ததாக யாரும் சொல்லவில்லை. கொலையாளி வந்த காரியத்தை வேகமாக முடித்துவிட்டு தப்பியிருக்கிறான். முகம் அடையாளம் தெரியாத வகையில் கொலை செய்தபின் முகத்தைத் தாக்கியிருக்கிறான்.

இவ்வாறாக யோசித்துக்கொண்டிருந்தவன் சட்டென லேப்டாப்பை எடுத்து மடியில் வைத்து ஆர்க்குட்டைத் திறந்தான். ஆர்க்குட் தேடுகட்டத்தில் ஆம்பல் பெயரையிட்டு தேடினான்.

பக்கத்தில் டேபிள் மேல் வைக்கப்பட்ட புகைப்படத்திலிருந்து அவன் மனைவி கயல்விழி அவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.


************************************


சிறுகதை சித்தர், போர்வாள் தேவ் அவர்கள் தொடர்வார்.


சுரேஷின் மனைவி பெயர் அஞ்சலி என ஜி.ரா தெளிவாக சொல்லியும் நான் குழப்(ம்)பிட்டேன். மாப்பு கேட்டுக்கறேன். :( .



?!

சில வருடங்களுக்கு முன் பெண்களுக்கு பச்சைப் புடவை எடுத்துக் கொடுத்தால் நல்லது என்று சொல்லி எல்லோர் வீட்டிலும் வாங்கிக் கொடுத்தார்கள். பச்சை நிறத்தைத் தேர்ந்தெடுக்க பச்சை புடவை ஸ்டாக் ஏராளமாக நின்றது காரணமா அல்லது வேறு ஏதாவதா எனத் தெரியவில்லை. இந்த முறை சித்தி விட்டிற்குச் சென்றபோது அம்மாவிற்கு ஒரு புடவை எடுத்துக் கொடுத்தார்கள். காரணம் கேட்டதற்கு இந்த வருடம் பெண்கள் தத்தம் அக்காவிற்கு புடவை எடுத்துக் கொடுக்க வேண்டுமாம். அப்போது தான் குடும்பத்திற்கு நல்லது நடக்குமாம். என் அம்மாவிடம் பெரியம்மாவிற்கு மறக்காமல் புடவை எடுத்துக் கொடுக்கச் சொன்னார்கள்.

"இவங்கள தவுஸண்ட் பெரியார்ஸ் வந்தாலும் திருத்தமுடியாதுடா"ன்னு விவேக் டயலாக் தான் ஞாபகம் வந்தது.

****************

தீபாவளி அன்று சிறப்பு நிகழ்ச்சிகள் எதையுமே பார்க்கவில்லை. எல்லா நடிகநடிகைகளும் எல்லா சேனல்களுக்கும் பேட்டி கொடுத்தார்கள் போல. விளம்பரங்களைப் பார்க்கும்போதே கடியாக இருந்தது. பள்ளிக்காலத்தில் தூர்தர்ஷனில் வந்த சிறப்பு நிகழ்ச்சிகளை அசைபோட்டுக் கொண்டே கிரிக்கெட் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஒரு தீபாவளிக்கு டிடியில் சிம்ரன் பேட்டி போட்டிருந்தார்கள். 'நேருக்கு நேர்' ரிலீஸான சமயம் என்று நினைக்கிறேன். அடுத்த நாள் பயாலஜி ரெகார்ட் நோட் சப்மிட் செய்ய வேண்டியிருந்தது. அன்று சிம்ரன் பேட்டியைப் பார்த்துக்கொண்டே வரைந்த கரப்பான்பூச்சிதான் இதுவரை நான் வரைந்ததிலேயே அழகாக இருந்தது.

*****************

வோல்வோ பேருந்து விட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் அதில் பயணம் செய்யவில்லையே என்ற கவலை இரண்டு வாரங்கள் முன்புதான் தீர்ந்தது. அதற்கு முன் சிலமுறை நொடிப்பொழுதுகளில் பேருந்தை தவறவிட்டிருக்கிறேன். அன்றும் ஓடிப்போய் தான் ஏறினேன்.

தொப்பி போட்ட டிரைவர் கண்டக்டரை ஏற்கனவே வெளியில் இருந்து பார்த்திருந்தாலும் அப்போது பார்க்கையில் சிரிப்பு வரத்தான் செயதது. டிவிடி ப்ளேயரில் பாட்டு போடுகிறார்கள். பயணம் செய்பவர்கள் வோல்வோ பற்றியும் புது டீலக்ஸ் பேருந்துகளைப் பற்றியும் கருத்து சொல்லியபடியே பயணிக்கிறார்கள். சாலையில் இருவரில் ஒருவராவது பேருந்தை திரும்பிப் பார்க்கிறார்கள்.

டிரைவர் அருகில் ரியர் வ்யூ LCD எப்படியிருக்கிறதென பார்க்க கிட்டவில்லை. கிண்டி-வேளச்சேரிக்கு 18 ரூபாய் கொஞ்சமில்ல ரொம்பவே அதிகம்தான். தூரமான இடங்களுக்கு செல்ல வேண்டுமானால் வசதியாக இருக்கும்.

*****************

அலுவலகத்தில் டீ குடிக்கப் பட்டாளமாகச் செல்லும்போது நண்பன் புதிதாக சேர்ந்திருந்த ஒரு பெண்ணைப் பார்த்து கண்டதும் காதலாகிவிட்டான். அவளிடம் காதலைச் சொல்ல அவனுக்கு நான் சொல்லிக் கொடுத்த டயலாக்

"நீ விரும்பற பையனைவிட, உன்னை விரும்பற பையனைவிட, நீ என்னை விரும்பினா உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்"

பசங்க அடிக்க வந்துட்டாங்க.

****************

அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகில் எராளம். உங்களை சந்தித்தது கூட அப்படி பட்ட ஆச்சரியம் தான். ஆச்சரியம் நிறைந்த இந்த உலகத்தின் மேல் நம்பிக்கை வைத்து பயணத்தை தொடர்கிறேன்.

- நல்லசிவம் (அன்பே சிவம் - கமல்ஹாசன்)




அதே நம்பிக்கையில் (இந்த டயலாக்லாம் எனக்கே ரொம்ப ஓவராத்தான் இருக்கு :D) இப்போது அமெரிக்க வாசம். சிலப்பல தீர்மானங்களோட இருக்கேன். அதில் முக்கியமானது கீத்துக்கொட்டாய், சங்கம், தேன் கிண்ணம், கப்பி நான்கிலும் வாரத்திற்கு ஒவ்வொரு பதிவாவது இடுவது. எவ்வளவோ பண்ணிட்டோம்..இதைப் பண்ண மாட்டோமா :))



அருவிஸ் ஆஃப் நெல்லை

"காதல் வந்தால் ஊட்டிக்கு போவேன்
பைத்தியம் பிடித்தால் குற்றாலம் வருவேன்"

சென்ற மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை, வார இறுதியைக் கழிக்க எந்தெந்த படங்களைப் பார்க்கலாமென விவாதித்துக் கொண்டிருந்தபோது தென்காசிக்கார நண்பன் மட்டும் ஊருக்குச் செல்வதாகச் சொன்னான். "எங்களோட அப்ப இந்த வாரம் படம் பார்க்க வர மாட்டியா? அப்ப நாங்க உன்னோட ஊருக்கு வர்றோம். இங்கயிருந்து நேரா திருநெல்வேலி போய் அங்கயிருந்து பாபநாசம் போறோம்..பாணதீர்த்தம் ஃபால்ஸ் போயிட்டு அன்னைக்கு சாயங்காலம் தென்காசி வந்துடலாம். உங்க வீட்டுல தங்கிட்டு அடுத்த நாள் குத்தாலம்லா பாத்துட்டு நைட் கிளம்பி வந்துடலாம். நாங்களும் வரோம்னு வீட்டுக்கு போன் பண்ணி சொல்லிடு" என்று திடீர் திட்டம் ஒன்றைப் போட்டு அவனுடன் கிளம்பிவிட்டோம்.

கோயம்பேடு சென்றால் தென்காசி, திருநெல்வேலி இரண்டுக்குமே அல்ட்ரா டீலக்ஸ் அரசுப் பேருந்து காலியாக இருந்தது. முதலில் தென்காசி-குத்தாலம்..அடுத்த நாள் பாபநாசம் என திட்டத்தை மாற்றி தென்காசி பேருந்தில் ஏறி அமர்ந்தோம். பேருந்து எடுக்க ஒரு மணி நேரம் ஆகுமென்றும் திருநெல்வேலி பேருந்து 10 நிமிடத்தில் எடுக்கப்போவதாக சொன்னதும் மீண்டும் திட்டத்தை மாற்றி திருநெல்வேலிக்கே செல்ல பேருந்து மாறி ஏறினோம்.


திருநெல்வேலி சென்றதும் மீண்டும் திட்டத்தை மாற்றிக் கொண்டு தென்காசி பேருந்தில் ஏறிவிட்டோம். நண்பனின் வீட்டிற்குச் சென்று நன்றாக சாப்பிட்டுவிட்டு அவன் அப்பா ஏற்பாடு செய்த காரிலேயே பழைய குற்றாலம் அருவிக்குச் சென்றோம். கூட்டம் நிறைய இல்லை. முதல் ரவுண்ட் குளியலைப் போட்டோம். குளிரில் கைகள் விறைத்துக் கொண்டாலும் அரை மணி நேரத்திற்காவது வெளியே வருவதில்லை என்ற முடிவோடு குளித்தோம். தண்ணீர் அவ்வளவு வேகமாக விழவில்லை. அளவு குறைவு தான்.

அருவியிலும் ம்பு போட்டும் சோப்பு போட்டும் குளிக்கும் நபர்களைக் கண்டால் அப்படியே அடிக்கலாம் போலிருக்கும். வீட்டில் பக்கெட் தண்ணீரிலேயே குளித்து பழக்கப்பட்டு அருவியில் எப்படி குளிப்பது என்று தெரியாமல் வீணாய்ப் போனவர்கள். அருவியில் குளிக்கும் சுகத்தைக் கெடுப்பதே இதுமாதிரி ஆட்கள் தான். அவர்களிடமிருந்து தப்பி ஓரமாக தண்ணீர் வேகமாக விழும் இடமாக ஒதுங்கி நின்று திருப்தியாக குளித்தோம்.


சூடாக பஜ்ஜி, டீ அடித்துவிட்டு அங்கிருந்து ஐந்தருவிக்கு கிளம்பினோம். ஐந்தருவியில் இரண்டு பெண்களுக்கு. மூன்று ஆண்களுக்கு. இரண்டாவதாக உள்ள அருவியில் தண்ணீர் பெரிய பாறையில் பக்கவாட்டில் விழுகிறது. அந்த பாறையில் படுத்தவாறே அருமையாகக் குளிக்கலாம். இங்கும் பாறை சந்தில் உள்ளே சென்று எவனையும் உள்ளே விடாமல் ஒரு மணி நேரம் குளித்தோம்.

ஐந்தருவி - மூனு தான் தெரியுதுல்ல? பெண்களுக்கு 40% :)

சைக்கிளில் வைத்து ஒரு சிகப்பு வண்ண பழம் விற்றுக்கொண்டிருந்தார்கள். ஏதோ பூச்சி மாதிரி இருந்தது. மேலே சிகப்பு வண்ண தோலை உரித்தால் வெள்ளை நிறத்தில் சாப்பிடக்கூடிய பகுதி. இனிப்பாக இருந்தது. பழத்தின் பெயர் வித்தியாசமாக இருந்தது. இப்போது மறந்துவிட்டது. யாருக்காவது தெரியுமா?

அங்கிருந்து குற்றாலம் மெயின் அருவிக்கு வந்தோம். தண்ணீரும் குறைச்சல். கூட்டமும் அதிகம். அதனால் அங்கு குளிக்கவில்லை. பொங்குமாக்கடலில் விழுந்து இறந்து போன கல்லூரி ஜூனியர் நினைவுக்கு வந்து சிறிது நேரம் கல்லூரி நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தோம்.

நான் அதுவரை பாபநாசம் சென்றதில்லை. பாணதீர்த்தம் ரோஜா படத்தில் மதுபாலா ஆடிய அருவி என்பது மட்டும் தான் தெரியும். அடுத்த நாள் காலை தென்காசியிலிருந்து பாபநாசம் கிளம்பினோம். அங்கிருந்து காரையார் அணை சுமார் இருபது கிலோமீட்டர். ரிசர்வ் பாரஸ்ட் ஏரியா. அங்கிருந்து படகில் பாணதீர்த்தம் செல்லவேண்டும். அங்கு கடைகள் எதுவும் இருக்காது என்று டிரைவர் கூறியதால் பாபநாசத்திலேயே வயிறு முட்ட சாப்பிட்டு காரையாருக்குச் சென்றோம். காரையார் அணையில் இருந்து படகு மூலமாக பாணதீர்த்தம் அருவிக்குக் கூட்டிச் செல்கிறார்கள். அணை மிகவும் அமைதியாக இருந்தது. நாங்கள் சென்றபோது மேக மூட்டமாக இருந்ததால் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது.

காரையார் அணையில் படகில் போகும்போது

படகில் கதை பேசியபடி சென்றுகொண்டிருந்த போது நண்பன் என்னை திரும்பிப் பார்க்கச் சொன்னான். திரும்பினால் அந்த பக்கம் பாணதீர்த்தம் அருவி. பார்த்ததுமே வாயடைத்துப் போனது. அருவி அந்தளவு கம்பீரமாக பிரம்மாண்டமாக இருந்தது. படகிலிருந்து ஒத்தையடி பாதை வழியாக அருவிக்குச் செல்ல வேண்டும். நாங்கள் சென்றபோது தான் கல்லூரி மாணவர்கள் குழு ஒன்று கிளம்பியது. அருவியில் மொத்தமே ஐந்தாறு பேர் தான் இருந்தார்கள்.

பார்க்கும்போதே அதிருதுல்ல?

அருவியின் ஒரு பக்கம் மட்டும் கம்பி கட்டி விட்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கத்திற்கு செல்ல முடியாது. தண்ணீர் அந்தளவு வேகமாக விழுகிறது. முன்னால் விழுந்து நிற்கும் தண்ணீரில் விழுந்தால் கூட பிழைப்பது அரிது. ஐந்தருவி, பழைய குற்றாலத்தை விடவும் தண்ணீர் வேகமாக விழுந்தது. அந்த வேகத்தில் தோள்பட்டையிலும் கழுத்திலும் லேசாக வலியெடுக்கவே ஆரம்பித்தது. ஆனாலும் கம்பியைப் பிடித்துக்கொண்டு வேகமாக தண்ணீர் விழும் இடத்திலேயே குளித்தோம். தண்ணீர் மிகவும் இனிப்பாக இருந்தது. அந்த தண்ணீரில் குளித்து அதை குடித்து வாழ்ந்தால் ஒரு நோயும் வராது போல. அந்தளவு சுத்தம். சுவை.

அங்க குளிக்கிற மக்கள் சைஸைப் பாருங்க

குளித்துக்கொண்டிருக்கும் போது கிழே காலடியில் வானவில். பாறையில் எங்களுக்காகவே தோன்றிய வானவில். அப்போது கவிதை தான் எதுவும் தோன்றவில்லை. நல்ல வேளை. அப்படி ஏதாவது சொல்லியிருந்தால் எவனாவது அருவியிலேயே குதித்திருப்பான்.


ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குளித்தோம். கிளம்ப மனமே இல்லை. இதற்கு முன் பல அருவிகளில் குளித்திருந்தாலும் பாணதீர்த்தத்தின் பிரம்மாண்டம் மனதில் குதூகலத்தை ஏற்படுத்தியது. நாங்கள் கிளம்பும்போது இரண்டு படகுகளில் கூட்டம் வந்தது. நாங்கள் கொஞ்சம் தாமதமாக வந்திருந்தாலும் திருப்தியாக குளித்திருக்க முடியாது. இங்கும் கூட்டத்தில் இடிபட்டு ஷஅம்பு சோப்பினால் பாணதீர்த்தமே பிடிக்காமல் கூட போயிருக்கும்.

அங்கிருந்து பாபநாசம் வரும் வழியில் சேர்வலார் அணைக்கு செல்லும் பாதை பிரிந்தது. அதையும் சென்று பார்த்துவிடுவோம் என்று சென்றோம். அங்கிருந்த காவலாளி "யாரைக் கேட்டு உள்ளே வந்தீங்க" என்று கேட்டார். "கேட்கறதுக்கு யாருமே இல்ல..அப்படியே உள்ள வந்துட்டோம்" என்றதும் "சரி பார்த்துட்டு போங்க..போட்டோ எடுக்கக் கூடாது" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். சேர்வலார் அணை மழைத் தண்ணீர் மட்டும் தேங்கி நிற்கும் அணையாம். மேக மூட்டமாக இருந்ததால் பார்ப்பதற்கே அருமையாக இருந்தது. கால் மணி நேரம் அங்கு அமர்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினோம்.

இது சேர்வலார் அணை

இனிப்பு கடை வைத்தால் "சாந்தி ஸ்வீட்ஸ்" என்று வைத்தால்தான் வியாபாரம் நடக்கும் என்று யாரோ சொல்லிவிட்டார்கள் போல. திருநெல்வேலி புது பேருந்து நிலையத்தில் மட்டும் கிட்டத்தட்ட இருபது "சாந்தி ஸ்வீட்ஸ்" கடைகள். அதிலும் 'அக்மார்க்', 'ஒரிஜினல்', 'அசல்' என பட்டங்களுடன். ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ் ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகில் இருக்கிறது. அங்கு சென்று தேவைக்கு அதிகமாகவே அல்வா வாங்கிக் கொண்டோம்.

வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்ல எளிதாக இடம் கிடைத்ததால் ரிடர்னுக்கும் எளிதாக இடம் கிடைக்கும் என்ற எங்கள் லாஜிக் பொய்த்துப் போனது. பேருந்து நிலையத்தில் எக்கச்சக்க கூட்டம். அரசுப் பேருந்தில் ஏறுவதற்கே வாய்ப்பில்லை என முடிவு செய்து மீண்டும் ஜங்ஷன் பேருந்து நிலையம் வந்து தனியார் பேருந்துகளில் டிக்கெட் வாங்க முயற்சித்தோம். அதுவும் கிடைக்காததால் மீண்டும் புது பேருந்து நிலையம் வந்து அடித்து பிடித்து திருவனந்தபுரதிலிருந்து வந்த பழைய அரசுப் பேருந்தில் ஏறி, மதுரை வரை டிரைவர் கேபினில் அமர்ந்துவந்து, மதுரையிலிருந்து கடைசி வரிசைக்கு முந்தைய வரிசையில் ஓட்டை சீட்டைப் பிடித்து ஒரு வழியாக வந்து சேர்ந்தோம். திருநெல்வேலியிலிருந்து மதுரை வரை ஓட்டுநர் வண்டி ஓட்டியதைப் பின்னால் உட்கார்ந்து பார்த்ததில் அவரின் ரசிகனாகிவிட்டேன். அந்த டப்பா வண்டியையும் என்ன அருமையா ஓட்டறாரு.

சென்று வந்து ஒரு மாதத்திற்கு் ஆகிவிட்டது. இன்று ஏதாவது எழுதலாம் என்று தோன்றியதும் பாணதீர்த்தம் நினைவுக்கு வந்தது. இன்னும் அதன் பிரம்மாண்டம் கண்ணை விட்டு அகலவில்லை. அதில் குளித்த சுகமும் மறக்கவில்லை. அருவியில் சீசன் வரும்போதெல்லாம் சென்றுவர வேண்டும். அதுவும் பக்கத்திலேயே நண்பன் வீடு இருக்கும்போது சாப்பாட்டிற்கும் தங்குவதற்கும் கூட பிரச்சனை இல்லை.



?!

ஆக்டிவா/ஸ்கூட்டி ஓட்டும் அக்கா, முன்னால் குழந்தை பின்னால் மனைவியுடன் பைக் ஓட்டும் 35 வயது குடும்பஸ்தர், மாநகர பேருந்து - சென்னை சாலைகளில் வண்டி ஓட்டும்போது இந்த மூன்றில் எதற்கு அதிகம் பயப்படுவீர்கள்?

பழைய மகாபலிபுரம் சாலையில் (இப்போது இராஜீவ் காந்தி சாலை) அலுவலகத்துக்கு பைக்கில் செல்லும் வேளைகளில் ஒவ்வொரு பேருந்தையும் ஓவர்-டேக் செய்யும்போதும் "அப்பாடா உயிரோட ஓவர்டேக் பண்ணிட்டோம்டா" என்று தோன்றுகிறது. உயிர் பயம் அதிகமாகிவிட்டது.

*******************************


அலுவலகத்தில் தொலைந்து போன பொருட்களின் பட்டியலை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்கள். அடையாள அட்டை, ஹெட்ல்போன், கைப்பை, கிரெடிட் கார்ட், பஸ் பாஸ்களுக்கிடையில் சட்டென கண்ணில் பட்டது ' Money purse without money". என்னமா பீல் பண்ணியிருக்காங்க

*******************************


சென்ற ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வரும்பொது அதிசயமாக உட்கார இடம் கிடைத்தது. முன்னால் இருந்து சுண்டல் விற்றுக்கொண்டே ஒருவர் வந்தார். நான்கைந்து பேர் வாங்கினார்கள். கடைசி இருக்கைகளில் யாரும் வாங்கவில்லை. அவர் இறங்கிக்கொண்டே சொன்ன டயலாக் "No peace of mind"

*******************************


பேருந்தில் பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியவர் காஞ்சிபுரம் தாண்டியதும் பேச ஆரம்பித்தார். அவர் கோவிலுக்கு வந்த கதையில் ஆரம்பித்து, அவரது டாக்டர் மகன், மகன் திருமணத்திற்கு வரதட்சனை வாங்காதது, வடிவேலு காமெடி, திருவண்ணாமலை கோயில், ரஜினி, சரத்குமார், காமராஜர், கக்கன், தன் சொந்த கடை, மென்பொருள் துறையில் சம்பளம், அவரது தம்பி மகன், அவருக்கு பார்த்த பெண் ஜாதகம் பொருந்தியும் கலர் கம்மியாக இருந்ததால் கல்யாணம் முடிக்காமல் விட்டது, 1970-ல் நடந்த கொலை கேஸ் என கிண்டி வரும் வரையில் பேசிக்கொண்டே வந்தார். 'உம்' கொட்ட ஆளிருந்தால் வயதானவர்களுக்கு கொண்டாட்டம் தான். வீட்டுக்கு வந்ததும் இதை நண்பனிடம் சொன்னதும் 'நாயகன்' டெல்லி கணேஷ் ஸ்டையில் 'ப்ளாக்கரே' என்று அழைத்து "பிள்ளாக்கு எழுத மேட்டர் கிடைச்சுடுச்சா" என்றான். நான் இளித்தேன்.

*******************************


Johnny Ghaddar படம் குறித்து எழுத வேண்டுமென நினைத்திருந்தேன். நான் பார்த்த அடுத்த நாளே தியேட்டரில் இருந்து தூக்கிவிட்டார்கள். மெலோடியில் மாலை காட்சிக்கே ஒரு இருபது பேர் தான் இருந்திருப்போம். படம் அட்டகாசமாக இருந்தது. நம்மூரில் மொக்கை இந்தி படமெல்லாம் ஓடும். இது போன்ற வெகு சில நல்ல படங்கள் ஊத்திக் கொள்கின்றன. நடிப்பு, திரைக்கதை, காட்சிகள் படமாக்கிய விதம், பின்னணி இசை(ஷங்கர்-எஹ்சன்-லாய்) என அத்தனையும் சிறப்பு. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.

*******************************


வோடபோன் புது விளம்பரம் பார்த்தீங்களா? கலக்கலா இருக்கு.



*******************************

?!

தமிழ் செய்தித்தாள் தலைப்புச் செய்தி போல் ஆச்சரியக்குறியும் கேள்விக்குறியும் சேர்ந்து இருக்கிறதா? இதில் "வாழ்க்கைங்கறது.." என விக்ரமன் பட ஸ்டைலில் ஆரம்பித்து பெரிய தத்துவமே (மொக்கை தத்துவம் தான்) அடங்கியிருக்கிறது. தத்துவம் புரிந்தவர்கள் "எழரைஏழரைஏழரை" என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும். இல்லையெனில் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். தத்துவத்தை சரியாக சொல்பவர்களுக்கு ப்ரைம் ஸ்லாட்டில் எமோஷனல் பேட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்படும். பிடிக்காத தத்துவங்களுக்கு அழுவாச்சி பதிலாக அளிக்கப்படும். ஜிடாக்கில் ஏற்கனவே இந்த தத்துவத்தை அறியப் பெற்றவர்கள் பெட்டி கொடுத்துவிட்டு போட்டியில் கலந்துகொள்ளலாம். வைல்ட் கார்ட் ரவுண்டும் உண்டு.

*******************************

சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் யார்?

A. ரஜினி. B. கஜினி.

இந்த கேள்விக்கான பதிலை உங்கள் மொபைலில் 'KAPPI' என்று அடித்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் ஆப்ஷன் A அல்லது B டைப் செய்து உங்கள் நம்பருக்கே அனுப்பி விடையைத் தெரிந்துகொள்ளுங்கள். :))



A Note in the Margin - Che Guevera



சே குவேரா
ஜூன் 14,1928 - அக்டோபர் 9,1967


The stars drew light across the night sky in that little mountain village, and the silence and the cold made the darkness vanish away. It was - I don't know how to explain it - as if everything solid melted away into the ether, eliminating all individuality and absorbing us, rigid, into the immense darkness. Not a single cloud to lend perspective to the space blocked any portion of the starry sky. Less than a few meters away the dim light of a lamp lost its power to fade the darkness.

The man's face was indistinct in the shadows; I could only see what seemed like the spark of his eyes and the gleam of his front teeth.

I still can't say whether it was the atmosphere or the personality of that individual that prepared me for the revelation, but I know that many times and from many different people I had heard those same arguments and that they had never made an impression on me. Our interlocutor was, in fact, a very interesting character. From a country in Europe, he escaped the knife of dogmatism as a young man, he knew the taste of fear ( one of the few experiences making you value life), and afterwards he had wandered from country to country, gathering thousands of adventures, until he and his bones finally ended up in this isolated region, patiently waiting for the moment of great reckoning to arrive.

After exchanging a few meaningless words and platitudes, each of us marking territory, the discussion began to falter and we were about to go our separate ways, when he let out his idiosyncratic, childlike laugh, highlighting the asymmetry of four front incisors:"The future belongs to the people, and gradually, or in one strike, they will take power. here and in every country".



"The terrible thing is, the people need to be educated, and this they cannot do before taking power, only after. They can only learn at the cost of their own mistakes, which will be very serious and will cost many innocent lives. Or perhaps not, maybe those lives will not have been innocent because they will have committed the huge sin against nature;meaning, a lack of ability to adapt. All of them, those unable to adapt - you and I, for example - will die cursing the power they helped, through great sacrifice, to create. Revolution is impersonal; it will take their lives, even utilizing their memory as an example or as an instrument for domesticating the youth who follow them. My sin is greater because I, more astute and with greater experience, call it what you like, will die knowing that my sacrifice stems only from an inflexibility symbolizing our rotten civilization, which is crumbling. I also know - and this won't alter the course of history or your personal view of me - that you will die with a clenched fist and a tense jaw, the epitome of hatred and struggle, because you are not a symbol (some inanimate example) but a genuine member of the society to be destroyed; the spirit of the beehive speaks through your mouth and motivates your actions. You are as useful as I am, but you are not aware of how useful your contribution is to the society that sacrifices you."



I saw his teeth and the cheeky grin with which he foretold history, I felt his handshake and, like a distant murmur, his formal goodbye. The night, folding in at contact with his words, overtook me again, enveloping me within it. But despite his words, I now knew...I knew that when the great guiding spirit cleaves humanity into two antagonistic halves, I would be with the people. I know this, I see it printed in the night sky that I, eclectic dissembler of doctrine and psychoanalyst of dogma, howling like one possessed, will assault the barricades or the trenches, will take my bloodstained weapon and, consumed with fury, slaughter any enemy who falls into my hands. And I see, as if a great exhaustion smothers this fresh exaltation, I see myself, immolated in the genuine revolution, the great equalizer of individual will, proclaiming the ultimate mea culpa. I feel my nostrils dilate, savoring the acrid smell of gunpowder and blood, of the enemy's death; I steel my body, ready to do battle, and prepare myself to be a sacred space within which the bestial howl of the triumphant proletariat can resound with new energy and new hope.

- சே குவேராவின் The Motorcycle Diaries-ல் இருந்து.



பழவேற்காடு aka Pulicat


"மாப்பிள்ள வாள மீனு பழவேற்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணு வெளாங்கு மீனு மீஞ்சூரு தானுங்கோ"


பல மாதங்களாகவே பழவேற்காட்டிற்கு செல்லலாமென கிளம்பும் போதெல்லாம் ஏற்கனவே இது போன்ற சில இடங்களுக்குச் சென்று 'பல்ப்' வாங்கியது நினைவுக்கு வந்து தள்ளிப்போட்டுவிடுவோம். ஏரியில் தண்ணீர் இருக்குமா என்ற சந்தேகமும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பழவேற்காட்டிற்கு பிரிந்து செல்லும் சாலை மோசமாக இருந்தால் அதில் பைக் ஓட்டவேண்டுமே என்ற தயக்கமுமே காரணம். இந்த இரண்டு பயத்திற்குமே மூல காரணம் தடா அருவிதான். நாங்கள் சென்னையிலிருந்து பைக்கில் சென்றபோது தடாவில் தண்ணீரும் இல்லை. சாலையும் படுமோசம். அன்று பைக் வாய்விட்டு அழுதது எங்களுக்கே கேட்டது. :))

புது திரைப்படம் எதுவும் வெளியாகாத, அறையில் புதிதாக சிடி எதுவும் சிக்காத, டிவியில் கிரிக்கெட் மேட்ச் போடாத இரண்டு வாரங்களுக்கு முந்தைய ஒரு வார இறுதிநாளில் 'பல்ப்' வாங்கினாலும் பரவாயில்லையென நானும் என் நண்பனும் பழவேற்காட்டிற்குக் கிளம்பினோம்.

பழவேற்காடு ஏரி சென்னைக்கு வடக்கே சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து இரண்டு வழிகளில் செல்லலாம். தேசிய நெடுஞ்சாலை - 5 எண்ணூர் சாலையிலிருந்து பிரியுமிடத்தில் நேராக எண்ணூர் சாலையில் சென்று மீஞ்சூர் வழியாக பழவேற்காடு சென்றடையலாம். அல்லது தேசிய நெடுஞ்சாலையிலேயே பொன்னேரி வரை சென்று அங்கிருந்து 20 கி.மீ தூரத்தில் பழவேற்காட்டை அடையலாம். மீஞ்சூர் வழியாக சாலை மிகவும் மோசமாக இருக்குமென கேள்விப்பட்டதால் தங்க நாற்கரச் சாலையிலேயே வண்டியை விரட்டினோம்.




நெடுஞ்சாலைகளில் பைக் ஓட்டுவது எப்போதுமே சுகம் தான். அதிலும் நகரின் போக்குவரத்து நெரிசலில் ஓட்டிவிட்டு நெடுஞ்சாலைகளில் முகத்திலறையும் பேய்க்காற்றுடன் ஓட்டும்போது ஏற்படும் சுகம் அலாதியானது. எப்போதாவது நம்மை தாண்டிச் செல்லும் கார்களைத் தவிர மற்ற வாகனங்கள் அனைத்தும் வேகத்தில் நமக்குப் பிறகுதான். சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி பிடித்த பாடலைகளை கேட்டுக்கொண்டு சென்றால் வண்டி ஓட்டும் களைப்பே தெரியாது. அங்கங்கே விபத்தில் அடிபட்டு நசுங்கிக் கிடக்கும் வண்டிகளைப் பார்க்கும்போது மட்டும் உயிர் பயம் எட்டிப்பார்க்கும் :)

பொன்னேரி வரை சாலை நன்றாகவே இருந்தது. என் அப்பா முதன்முதலில் வேலைக்கு சேர்ந்தது பொன்னேரியில்தான். திருமணமான்பின் தான் காஞ்சிபுரத்திற்கு மாற்றல் வாங்கி வந்தார். அவர் வேலை செயதபோது ஊர் எப்படி இருந்திருக்குமென எண்ணியபடியே பொன்னேரியைக் கடந்தோம். பொன்னேரியிலிருந்து பழவேற்காடு 20 கி.மீ. இப்போது சாலையை அகலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ஒரு நான்கைந்து கிலோமீட்டர்களுக்கு சாலை மோசமாக இருந்தது. போக்குவரத்து அதிகமில்லை. பழவேற்காட்டை நெருங்கும்போதே ஒரு சிறிய ஏரி வறண்டு கிடந்தது வயிற்றில் புளியைக் கரைத்தது. தேடி வந்த ஏரி இதுவாகயிருந்தால் அப்படியே ஒரு யூ-டர்ன் போட்டு திரும்பிவிடலாம் என்று எண்ணிக்கொண்டே ஊருக்குள் சென்றோம்.




பழவேற்காடு சிறிய கிராமம் தான். ஊருக்குள் நுழைந்ததுமே டாஸ்மாக் அன்புடன் வரவேற்றது. ரேஷன் கடை இல்லாத ஊரிலெல்லாம் கூட டாஸ்மாக் இருக்கிறது. அதைக் கடந்ததும் கடைத்தெரு. பக்கத்திலேயே மீன் மார்க்கெட். ஒரு டீ சாப்பிட்டுவிட்டு கடைக்காரரிடமே ஏரிக்கு வழி கேட்டோம். அந்த தெருவின் கடைசியில் ஏரி ஆரம்பிப்பதாக சொன்னார்.

பைக்கை பார்க் செய்துவிட்டு ஏரியை நோட்டம் விடும்போதே ஒரு படகுக்காரர் எங்களிடம் வந்து நானூறு ரூபாய்க்கு ஏரி கடலுடன் சேரும் இடத்திற்கு(6 கி.மீ) அழைத்துச் செல்வதாகச் சொன்னார். இரண்டு பேருக்கு நானூறு ரூபாய் அதிகமென நானும் என் நண்பனும் பேரத்தை ஆரம்பித்தோம். எத்தனை பேராக இருந்தாலும் நானூறுதான் என அவர் சொல்ல, பேரம் பேசுதலின் அடிப்படை விதியை உபயோகித்தோம். [வேறென்ன பாதி விலைக்கு கேட்பது தான்:)]. 'உஙகளை ஏமாத்தி சம்பாதிக்க மாட்டோம் சார்..இங்க யாரை வேணும்னாலும் கேளுங்க..வாடகை போட்டு(boat), டீசல் செலவுக்கெல்லாம் இருநூறுக்கு கட்டாது சார்' என்றார். 'உங்களை ஏமாத்தி' டயலாக்கை வைத்து இதுவரை எத்தனை பேர் ஏமாற்றியிருக்கிறார்கள் என்ற கணக்கு சட்டென மனதில் தோன்றியது. இறுதியில் முந்நூறு ரூபாய்க்கு பேரம் பேசி போட்டில் ஏறினோம்.


அண்ணன் படகு ஓட்டின ஒரு மணி நேரமும் இதே போஸ் தான் :)



ஏரி எவ்வளவு ஆழமென அவரிடம் கேட்டுக்கொண்டே அந்த பக்கம் திரும்பினால் நட்டநடு ஏரியில் நின்றபடி ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அந்த பகுதியில் அதிகபட்சம் ஐந்தடி ஆழம் தான் இருக்குமாம். ஏரி உள்ளே செல்லச் செல்ல ஆழம் அதிகமாகுமாம். மிதமான காற்று முகத்தைவருட கடலை நோக்கிப் போனோம். ஏறத்தாழ அரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு ஒரு மணல் திட்டில் இறக்கிவிட்டார். மணல் திட்டிற்கு அந்தப் பக்கம் கடல். கடற்கரையில் காலார நடந்தோம். இடப்பக்கம் கடல், வலப்பக்கம் ஏரி என நன்றாக இருந்தது. கடல் அலைகள் குறைவாக அமைதியாகவே இருந்தது. காற்று பக்கவாட்டிலிருந்து வீசியதால் அலைகள் உருவாக்கம் பார்க்க அழகாகயிருந்தது. குடும்பத்துடன் வருபவர்கள் அங்கு இளைப்பாறி உணவருந்த ஏற்றவாறு அந்த மணல் திட்டில் சிறு குடிசைகள் கட்டி வைத்திருக்கிறார்கள். நாங்கள் அரைமணி நேரம் கடற்கரையில் உலாவிவிட்டு திரும்பிவிட்டோம்.



60 கி.மீ நீளமுள்ள பழவேற்காடு ஏரியை ஒட்டி பல கிராமங்கள் இருப்பதாகவும் சிறுசிறு தீவுகளிலும் மக்கள் வசிப்பதாகவும் படகோட்டி சொன்னார். அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பறவைகள் நிறைய வருமாம். திரும்ப வரும்போதே எதிரில் வந்த படகுக்காரர் பேருந்தில் சுற்றுலா பயணிகள் வந்து இறங்கியிருப்பதாகச் சொல்ல இவருக்கு சந்தோஷம்."வர்றவங்க எப்பவும் ரெண்டு மூணு அவர் பீச்சுல இருப்பாங்க..குளிச்சுட்டு சாப்பிட்டுத்தான் கிளம்புவாங்க..நீங்க ரொம்ப சீக்கிரம் வந்துட்டீங்க..டூரிஸ்ட் வந்துருக்காங்களாம்..போனவுடனே அடுத்த டிரிப் வந்துடுவேன்" என்றார்.

மணி ஒன்றரை தான் ஆகியிருந்தது. ஒரு மணி நேரத்தில் சென்னைக்கே வந்து சாப்பிடலாம் என வண்டியை விரட்டி வடபழனி 'நம்ம வீட்டில்' அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்பிட்டுவிட்டு ரூமுக்கு வந்து கட்டையைச் சாய்த்தோம். செய்வதற்கு எந்த வேலையுமில்லாமல் செல்வதற்கு வேறெந்த இடமும் இல்லாமலிருக்கும் இன்னொரு நாள் மீண்டும் சென்று வரலாம்.



வீடியோ அலைபேசி கேம்ரால எடுத்தது. எடுக்கும்போது பார்க்க நல்லாத்தான் இருந்தது..இப்ப பார்க்க காமெடி ஆயிடுச்சுல்ல? :)))



Gandhi - My Father

"நான் மோகன்தாஸ் காந்தியின் மகன் இல்லை. மோகன்தாஸ் காந்திதான் என் அப்பா" - குடிபோதையில் தகராறு செய்வதால் தன்னைக் கைது செய்ய வரும் போலீஸிடம் ஹரிலால் காந்தி சொல்லும் இந்த வசனம் தான் காந்தி-மை ஃபாதர் திரைப்படம். மோகன்தாஸ் காந்திக்கும் அவரின் மூத்த மகனான ஹரிலாலுக்குமான உறவைச் சொல்லும் திரைப்படம்.

தந்தையைப் போலவே பாரிஸ்டர் ஆகவேண்டுமென்ற கனவோடிருக்கும் ஹரிலாலை தன் கொள்கைகளைப் பரீட்சித்துப் பார்க்க தன் முதல் தொண்டனாக அடையாளம் காண்கிறார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் காந்தியின் அகிம்சை போராட்டத்தில் ஈடுபடுகிறார் ஹரிலால். தந்தையின் பேச்சை மறுத்துப் பேசாத தனயனாக ஆங்கில அரசுக்கு எதிராக சட்ட மறுப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை செல்கிறார். ஆனாலும் பாரிஸ்டர் ஆக வேண்டுமென்ற தன் கனவை தன் தாய் கஸ்தூரிபா மூலமாகவும் தானாகவும் காந்தியிடம் தெரிவிக்கிறார். ஆனாலும் ஹரிலால் பாரிஸ்டர் ஆவதற்கான கல்வித்தகுதி இல்லாதவர் எனக் கருதும் காந்தி அவரைத் தன்னுடனேயே அகிம்சை போராட்டத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்துகிறார். தன் நண்பர் மூலம் பாரிஸ்டர் படிக்கக் கிடைக்கும் ஸ்காலர்ஷிப்பையும் மற்றொரு இளைஞருக்கு கொடுத்துவிடுகிறார். இதனால் ஹரிலாலுக்கும் காந்திக்குமிடையே கருத்து வேறுபாடு எழுகிறது.




தன் மனைவியுடன் இந்தியா திரும்பும் ஹரிலால் துணி வியாபாரம் செய்கிறான். இங்கு வந்து படித்தும் அவனால் பரிட்சையில் தேற முடியவில்லை. ஏழ்மையும் தோல்வியும் அவனை மதுவிற்கு அடிமையாக்குகிறது. காந்தி அந்நிய துணிகளை எதிர்த்து போராட்டம் நடத்தும்போது இங்கிலாந்திலிருந்து துணிகளை வரவழைத்து அவற்றை விற்கவும் முடியாமல் நஷ்டப்படுகிறான் ஹரிலால்.

ஹரிலாலின் மனைவி அவனைப் பிரிந்து காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு செல்கிறாள். அங்கு இறந்துவிடுகிறாள். கஸ்தூரிபா ஹரிலாலை சமாதானப்படுத்துகிறார். அவன் மீண்டும் காந்தியுடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுகிறான். சிறிது நாட்களில் மீண்டும் பெற்றோரை விட்டு விலகுகிறான். இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறான். கஸ்தூரிபாவும் காந்தியும் அவனை சந்தித்துப் பேசுகிறார்கள். மீண்டும் இந்து மதத்திற்கு மாறுகிறான். வியாபாரத்தையெல்லாம் விட்டுவிட்டு நாடோடியாகிறான். குடித்துவிட்டு சுயநினைவில்லாமல் சுற்றித் திரிகிறான். இறுதியில் காந்தி இறந்து ஐந்து மாதங்கள் கழித்து பம்பாயில் அநாதையாக இறக்கிறான் ஹரிலால்.

மோகன்தாஸ் காந்திக்கும் அவருடைய மகனுக்குமான உறவைச் சொல்லும் இந்த் படத்தில் காந்தி என்னும் ஆளுமையைத் தாண்டி அவரை ஒரு சாதாரண தந்தையாகக் காட்டியிருக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்தே தன் கொள்கைகளிலும் முடிவுகளிலும் உறுதியாக இருக்கும் காந்தி ஹரிலாலின் உணர்வுகளைப் புரிந்துகொண்டதாய்த் தெரியவில்லை. தன் மகனை தன் முதல் தொண்டனாகக் கண்டு பெருமிதம் கொள்ளும் காந்தி அவனுடைய தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றி வைப்பதில் கவனம் கொள்ளவில்லை.





அதே நேரத்தில் ஹரிதாஸ் ஒரு குழப்பவாதியாகவே இருக்கிறார். தன் எதிர்ப்பை காட்டுவதற்காகவே பெற்றோரிடமிருந்து பிரிந்துவந்து துணி வியாபாரம் செய்து நஷ்டப்படுகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார். மனைவியுடன் சண்டையிடுகிறார். பொது இடங்களில் காந்தியை அவதூறாகப் பேசுகிறார். மீண்டும் பெற்றோருடன் சேர்கிறார். சுதந்திர போராட்டத்தில் கலந்துகொள்கிறார். பணத்திற்கு ஆசைப்பட்டு மீண்டும் அவர்களிடமிருந்து விலகுகிறார். இவ்வாறாக ஹரிலால் ஒரு குழப்பவாதியாகவே தெரிகிறார்.

இருவருக்குமிடையே கஸ்தூரிபா. தன் மகனுக்காக ஆரம்பத்திலிருந்தே காந்தியுடன் சண்டைபோடும் கஸ்தூரிபா இறுதியில் அவன் மதுவிற்கு அடிமையாகிவிட்டதை எண்ணிக் கலங்குகிறார். தன் மகன்கள் அவர்களின் விருப்பப்படியான வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென காந்தியுடன் விவாதிக்கிறார் கஸ்தூரிபா. ஆனாலும் கணவனின் சொல்லையும் மீற முடியாமல் மகனின் நிலையைக் கண்டு தவிக்கிறார். இறுதியில் தந்தைக்கும் மகனுக்குமான பிணக்கைத் தீர்க்கமுடியாமல் வருந்துகிறார்.

ஹரிலாலின் மனைவி குலாப் கணவனின் பேச்சைத் தட்டாத சராசரி மனைவியாக இருக்கிறார். ஏழ்மையிலும் குடும்பத்தை சரியாக நிர்வகிக்கிறார். ஹரிலால் குடித்துவிட்டு சண்டைபோடும் வேளைகளில் அடங்கிச் செல்கிறார். ஒரு கட்டத்தில் ஹரிலாலைப் பிரிந்து சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று அங்கு இறந்துவிடுகிறார்.



தேர்ந்த நடிப்பு படத்தின் பெரும்பலம். குலாப்'பாக பூமிகா நிறைவாக நடித்திருக்கிறார். பாந்தமான முகமும் சோகம் இழையோடும் கண்களும் அந்த கதாபாத்திரத்துடன் ஒத்துப்போகிறது.மோகன்தாஸ் காந்தியாக தர்ஷன் ஜரிவாலா திறம்பட நடித்திருக்கிறார். இளமைக் கால காந்தியாக சிறிது உடல்வாகாக இருப்பதுபோல் தோன்றினாலும் வயதான காந்தியாக அருமையாக நடித்திருக்கிறார். வயதுக்கேற்ற பாடி லேங்குவேஜ் பெரும்பலம். ஆனால் ஒப்பனையில் காது பெரிதாக ஓட்டப்பட்டது பல காட்சிகளில் கண்ணை உறுத்துகிறது

கஸ்தூரிபாயாக ஷெவாலி சா. அவரின் கண்களே உணர்ச்சியை வெளிக்காட்டுகிறது. பாசத்தில் தவிக்கும்போதும், கணவர் மேல் கோபம் கொள்ளும்போதும் ஹரிலால் குடித்துவிட்டு வரும்போது அவனை வெறுக்கும்போதும் சிறப்பாக செய்திருக்கிறார். அக்ஷ்ய் கண்ணா ஹரிலாலாக அசத்தியிருக்கிறார். கதாபாத்திரத்தை உள்வாங்கி ஹரிலாலைக் கண்முன் நிறுத்துகிறார். குறிப்பாக, தந்தையிடம் பாரிஸ்டர் ஆகும் ஆசையை சொல்லும் காட்சி, விரக்தியின் உட்சத்தில் திருவிழா கூட்டத்தின் நடுவில் வெறி கொண்டு தன் இயலாமையை உரக்க அறிவிக்கும் காட்சி, மனைவி இறந்ததும் அழும் காட்சி, ரயிலில் தன் பெற்றோரை சந்தித்து 'காந்தி மகாத்மா ஆவதற்கு கஸ்தூரிபா தான் காரணம். கஸ்தூரிபா வாழ்க!" என கோஷமிடும் காட்சி என படம் முழுக்க தேர்ந்த நடிப்பால் கவர்கிறார்.

படத்தின் இரண்டாம் பாதியின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். கிட்டத்தட்ட ஐம்பது வருடக்கதையை மூன்று மணி நேரத் திரைப்படமாக்க் கொண்டுவந்த இயக்குனர் பெரோஸ்கானைப் பாராட்ட வேண்டும். தேர்ந்த காட்சியமைப்பும் ஒளிப்பதிவும் குறிப்பிடத்தக்கவை. ஆனால் வசனங்கள் குறிப்பிடும்படியில்லை. ஒரு சாதாரண படத்திற்க்கான வசனங்கள் போலவே இருந்தது ஏமாற்றம். அனில் கபூர் இப்படத்தை தயாரித்திருக்கிறார். தலைவர்களைப் புனிதபிம்பமாக்கி கேள்விகளுக்கு அப்பாற்பட்டவராக்கும் சமுதாயத்தில் தந்தையாக வெற்றியடையாதவராக, குடும்பத்தை திருபதிப்படுத்தாதவராக மோகன்தாஸ் காந்தியை திரையில் காண்பித்திருப்பது பாராட்டுக்குரியது.

படம் நிறைய யோசிக்க வைக்கும். தேசத்தைப் பற்றியும் ஹரிலால் பற்றியும் காந்தியைப் பற்றியும் உஙகள் தந்தையைப் பற்றியும்.



கட்டிப்புடி வைத்தியம்



ராஜேந்திரன் கதை

ராஜேந்திரன் கூட்டுறவு வங்கியில் வேலைக்குச் சேர்ந்தபோது அவனுக்கு வயது 31. பணம் கையாடல் செய்ததாக அவனை வேலையில் இருந்து நீக்கியபோது அவனுக்கு வயது 37. வீட்டிற்கு மூத்தமகனான ராஜேந்திரன் விவசாயம் பார்த்தபடியே தான் படித்தான். பத்தாம் வகுப்பில் ஃபெயிலான போதும் அவன் பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால் அவன் தாய் மாமன் நடேசனின் அறிவுரையால் செய்யாறில் டுடோரியல் கல்லூரியில் சேர்ந்து பத்தாம் வகுப்பு தேறினான். பின்னர் பேருக்கு ப்ளஸ் டூ முடித்துவிட்டு நடேசனின் மகளை திருமணம் செய்துகொண்டு ஊரில் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தவனை கூட்டுறவு வங்கித் தேர்வு எழுத வைத்ததும் அவன் மாமா தான்.

சொந்தமாக நிலமிருந்ததால் அரசாங்க உத்தியோகத்திற்குப் போக வேண்டுமென்ற எண்ணமெல்லாம் ராஜேந்திரனுக்கு இல்லை. இரண்டு அக்காக்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இரண்டு தம்பிகள் சென்னையில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு சொத்தைப் பிரித்துக்கொடுத்தாலும் ஆறேழு ஏக்கர் வரும். அதை வைத்து விவசாயம் பார்த்தபடி இருந்துவிடலாம் என்றுதான் இருந்தான். நடேசன் அவனை வலுக்கட்டாயமாக பரிட்சை எழுதவைத்து கட்சியில் ஆளைப் பிடித்து செய்யாறிலேயே கூட்டுறவு வங்கியில் வேலைக்கு சேர்த்துவிட்டார்.

அவனுடன் கிளார்க்காக வேலை பார்க்கும் செல்வமும் மேற்பார்வையாளர் குமரேசனும் ராஜேந்திரனுக்கு நண்பர்களாயினர். அக்கம்பக்கம் கிராமத்து மக்கள் விவசாயக்கடன் வாங்குவதற்காக வரும்போது அவர்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்தான். அதனால் வங்கிக்கு வரும் விவசாயிகளிடையே நல்ல பெயர். ஆரம்பத்தில் லஞ்சம் வாங்காமல் வேலை செய்தவன் சிறுசிறு பணத்தட்டுப்பாடு வரும்போது கை நீட்ட ஆரம்பித்தான். விதிகளை மீறி கடன் கொடுப்பது, பணம் வாங்கிக்கொண்டு கடனைத் தள்ளுபடி செய்வது என இவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தனர். மூவரும் சரிசமமாகப் பிரித்துக்கொண்டனர். எப்போதாவது வரும் ஆடிட்டருக்கும் கணிசமான தொகை செல்லும். இதைப்போலவே எல்லா வங்கிகளுமே நடப்பதைப் பார்த்த ராஜேந்திரனுக்கு கொஞ்சநஞ்சமிருந்த குற்றவுணர்வும் அவனை விட்டுப்போனது.

ஊரிலிருப்பவர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தான். தன் பெயரிலும் மனைவி பெயரிலும் நிலம் வாங்கிப்போட்டான். தன் தம்பிக்கு தடபுடலாகத் திருமணம் செய்துவைத்தான். சொந்தத்தில் எந்த நல்ல காரியம் நடந்தாலும் கணக்குப் பார்க்காமல் செலவு செய்தான். கோயிலுக்கு திருவிழாவின் போதெல்லாம் கல்வெட்டில் பெயர் வருமளவு பணம் கொடுத்தான். இப்படி ஊருக்குள் நல்ல பெயர் எடுத்து அந்த வட்டாரத்தில் மதிப்பிற்குரிய பெருந்தலை ஆனான்.

ஓரிரு வருடங்களுக்கு முன் கடன் தொகை கட்டமுடியாமல் போன ஒருவனது வீட்டை ஜப்தி செய்தார்கள். அவன் கோர்ட்டில் கேஸ் போட்டான். அதனால் பழைய கணக்குகளை நோண்டத் தொடங்கினார்கள். இதை முன்னமே அறிந்துகொண்ட செல்வம் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து தன் வேலையைக் காப்பாற்றிக் கொண்டான். குமரேசனும் ராஜேந்திரனும் சிக்கிக் கொண்டார்கள். தன்னை நேர்மையாகக் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியத்தால் வங்கியின் மேலாளர் இவர்கள் மட்டுமே தவறு செய்ததாக தலைமை அலுவலகத்துக்கு எழுதிக் கொடுத்தார். இருவரின் வேலையும் பறிக்கப்பட்டது. சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்.

இருவரின் மேலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குமரேசன் தன் நண்பர்கள் மூலம் பணம் செலவு செய்து வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு வேலையில் சேர்ந்துவிட்டான். இப்படியொரு வழியிருப்பது தெரியாமல் ராஜேந்திரன் தனியாக சிக்கினான். தனியாக வழக்கறிஞரைப் பிடித்து வழக்கை நடத்திக்கொண்டிருக்கிறான்.

துறையில் சிலருக்கு லஞ்சம் கொடுத்து வழக்கிலிருந்து வெளியேறுவதற்காக தன் கையிலிருந்த பணத்தையெல்ல்லாம் கொடுத்தான். ஆனால் யாருக்கு கொடுத்தால் வேலை ஆகுமென்ற நெளிவு சுளிவு தெரியாததால் பணம் செலவானதுதான் மிச்சம். அவன் மேலான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு வேலையிலிருந்து நீக்கப்பட்டான்.

ராஜேந்திரனின் மனைவி சுந்தரி அவனுக்கு வேலை போனதிலிருந்து இளைத்துப் போய்விட்டாள். அவளது நகைகளை வங்கியில் அடமானம் வைத்துத்தான் வேலைக்காக செலவு செய்தான். அவளுக்கு பணம் செலவாவதை விட எப்படியாவது மீண்டும் வேலையில் சேர்ந்துவிட்டால் போதும் என்றே எண்ணினாள். வீட்டின் பின்கட்டில் ஒட்டடை படிந்துகிடந்த தையல் மிஷினை தூசு தட்டினாள்.

ராஜேந்திரனுக்கு ஒரு மகன். ஒரு மகள். மகன் ஆறாம் வகுப்பும் மகள் இரண்டாம் வகுப்பும் படிக்கிறார்கள். பத்து ரேங்குக்குள் வரும் மகன் இப்போது சில பாடங்களில் பெயிலாவது சுந்தரிக்குக் கவலையைக் கூட்டியது.

நடேசன் ராஜேந்திரனிடம் வீணாக இப்படி செலவு செய்யாமல் ஊரில் விவசாயத்தை ஒழுங்காக கவனிக்கும்படி அறிவுரை கூறினார். "வேலையில்லாம ஊருக்கு வந்தா ஒருத்தனும் மதிக்க மாட்டான்" என்று சொல்லிவிட்டான் ராஜேந்திரன். அவர் தான் அடிக்கடி சுந்தரிக்கு பணம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

தங்கள் வீட்டின் பின்புறம் மந்தரிக்கப்பட்ட எலுமிச்சை பழம், மிளகாய் இருந்ததாயும் அதனால் தான் தன் குடுமபத்திற்குக் கேடு வருவதாயும் ராஜேந்திரன் பணம் கையாடல் செய்திருக்கமாட்டான் என்றும் அவனது தாய் சொல்லிவருகிறாள். மாலை வேளைகளில் திண்ணையில் அமர்ந்து "யார் தான் செய்யல? அவனுக்கு மட்டும் ஏனிப்படி" என்று புலம்புவது அவளுக்கு வாடிக்கையாகிவிட்டது.

ராஜேந்திரனின் அக்கா கணவர்களுக்கு உள்ளூர சந்தோஷம் தான். வேலையிலிருந்தபோது அவன் தங்களை மதிக்காததாயும் இப்போதும் அவனுக்கு நல்ல பாடம் கற்பிக்கப்பட்டதாகவும் தண்ணியடிக்கும்போது அவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.

ராஜேந்திரனிடம் கடன் வாங்கிய சிலர் தானாக வந்து திருப்பிக்கொடுத்தார்கள். சிலர் அவன் சென்று கேட்டும் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார்கள். ராஜேந்திரனும் இப்போது கடன் வாங்கப் பழகிவிட்டான். ஆரம்பத்தில் தன் மதிப்பு போய்விடும் என்று எதையாவது விற்று செலவு செய்துகொண்டிருந்தவன் இப்போது கடன் வாங்கத் தயங்குவதில்லை. நிலத்தை மட்டும் விற்கக்கூடாது என்ற முடிவில் இருக்கிறான். காலையிலும் மாலையிலும் சைக்கிளில் ஊருக்கு சென்று விவசாயம் செய்துகொண்டிருக்கிறான்.

சென்ற வாரம் வட்டச் செயலாளர் மூலமாக சட்டமன்ற உறுப்பினரைப் பார்த்துப் பேசினான். எழுபத்தைந்தாயிரம் இருந்தால் வேலை வாங்கிடலாம் என்று அவர் சொன்னதும் கையோடு கொண்டுபோயிருந்த முப்பதாயிரத்தைக் கொடுத்துவிட்டு இந்த மாதக் கடைசிக்குள் மொத்த பணத்தையும் தருவதாக சொல்லிவிட்டு வந்திருக்கிறான். அவன் கணக்குப்படி, வேலையை திரும்பப் பெறுவதற்காக நேற்று வரை இரண்டு லட்சத்து பதினெட்டாயிரம் செலவு செய்திருக்கிறான்.

இன்னும் ஆறு மாதம் கழித்து இன்னொருவருக்கு லஞ்சம் கொடுக்க செய்யாறில் தான் கட்டிய வீட்டை விற்க ஏற்பாடு செய்வான். அப்போது சுந்தரியின் பிடிவாதத்தால் அந்த வீட்டை விற்காமல் அடமானம் வைத்து லஞ்சம் கொடுப்பான். இன்னும் இரண்டு வருடங்களுக்கு இவ்வாறு செலவு செய்துவிட்டு வேலை திரும்பக் கிடைக்காது என்ற உண்மை தெரிந்ததும் ஊரில் நிலத்தை விற்று கடனையெல்லாம் அடைத்துவிட்டு செய்யாறில் உயர்நிலை பள்ளிக்கு அருகில் பெட்டிக்கடை வைப்பான். அவன் கூட்டுறவு வங்கியில் வேலை செய்ததையோ அவர்களுக்கு சொந்தமாக நிலமிருந்ததையோ அவன் மகனும் மகளும் மறந்துவிடுவார்கள்.



'தல'க்குப் பக்காவாகப் பொருந்தும் கிரீடம்

கிரீடம் படம் பார்த்து பத்து நாட்களுக்கு மேல் ஆயிற்று. ஆனால் இப்போது இந்த படம் குறித்து எழுதக் காரணம் காயத்ரியின் இந்த பதிவு மற்றும் அலுவலகத்தில் எனக்கும் நண்பருக்கும் தொடர்ந்து நடக்கும் வாக்குவாதங்கள். காயத்ரியின் பதிவுக்கு பின்னூட்டம் எழுதலாம் என ஆரம்பித்து கொஞ்சம் நீண்டுவிட்டதால் இன்னும் கொஞ்சம் சேர்த்து பதிவாக்கிவிட்டேன்.

நான் இந்த படத்திற்கு விமர்சனம் எழுதாததற்குக் காரணம் படம் எனக்கு ரொம்பவே படம் பிடித்திருந்தது. விமர்சனம் ஒரு'தல'பட்சமாகிவிடும் என்பதால் தான்.(இங்க ஒன்னு சொல்லிக்கறேன்..நான் அஜீத் ரசிகன் இல்ல..ஒன்றே சூரியன்..ஒருவரே சூப்பர் ஸ்டார் :)) சில காட்சிகள் சொதப்பலாக இருந்தது உண்மைதான். இடைவேளைக்குப் பிறகு இரண்டாம் பாதியும் இழுவை தான். ஆனால் படம் அவ்வளவு மொக்கையா என்ன?? ஒரு வேளை நிறைய தமிழ் படங்கள் பார்த்து எனக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாகிவிட்டதா அல்லது இந்த படம் மொக்கை என்பவர்கள் சிலப்பல வருடங்களாக தமிழ் படங்களே பார்ப்பதில்லையா என சந்தேகம் வருகிறது.

சிட்டிசனுக்கு பிறகு அஜீத் படம் என்றாலே மொக்கையாக இருக்குமென ஒரு பொதுக்கருத்து உண்டாகிவிட்டது. அவரும் அதை ஓரளவு காப்பாற்றி வருகிறார் :). ஆனால் கிரீடம் படத்தை ஒரு முறை கூட முழுதாக பார்க்கவே முடியாது என்பதுபோல் சொல்வதுதான் வருத்தமாக இருக்கிறது. கிரீடம் படம் தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு எடுத்துப் போகும் படமெல்லாம் கிடையாது. அது ஒரு சாதாரண தமிழ் படம் தான். அதில் என்ன தான் எதிர்பார்க்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. இந்த படம்னு மட்டுமில்ல உலகத்துல எந்த படமாயிருந்தாலும் 'கேவலமாயிருக்கும், நமக்கு பிடிக்கவே பிடிக்காது' ன்னு முன்முடிவோட பார்த்தா எந்த படமுமே பிடிக்காது. சிவாஜி படம் கூட போர் அடிச்சிடும் ;)

ஒருவேளை அஜீத் என்பதால் மட்டும் இந்த எதிர்பார்ப்பு இருக்கிறதா? நேற்று பேசிக்கொண்டிருக்கும்போது "வரலாறுக்கு அப்புறம் ஆழ்வார் இல்லாம இந்த படம் வந்திருந்தா இன்னும் நல்லா ஓடியிருக்கும்" என்று என் நண்பன் சொன்னான். அது ஒருவகையில் உண்மைதான். ஆழ்வார், பரமசிவன், திருப்பதி போன்ற படங்கள் அஜீத்தை காமெடியனாக்கிவிட்டன.

காயத்ரி படத்தின் ஆரம்பத்தில் ராஜ்கிரணின் கனவே காமெடியாக இருப்பதாக சொல்லியிருக்கிறார். ஏன் இது போல் கனவு காணும் பெற்றோர்கள் இல்லையா? உன் கையால ஊசி போட்டுக்கனும்டான்னு சொல்லி டாக்டருக்கு படிக்க வைக்கிற பெற்றோர்கள் இல்லையா? அதற்காக ராஜ்கிரணின் கதாபாத்திரம் யதார்த்தமானது, முழுமையா வடிவமைக்கப்பட்டிருக்கிறதுன்னு நான் சொல்ல வரல. ஏன்னா இப்ப எந்த ஹெட் கான்ஸ்டபிளும் இந்த மாதிரி இனாவானா(ஆமா இப்ப இப்படி இருந்தா இதான் சொல்வாங்க) கிடையாது. ஆனால் அந்த காட்சி காமெடியானது வருத்தம் தருகிறது.

ஹீரோவுக்கு அறிமுகப்பாடல் என்பது இப்ப எல்லா படத்துலயும் தான் வருது. பி.வாசு பையன் கூட டிரெயிலர்லயே பாட்டு பாடிட்டுதான் அறிமுகமாவறான். நடிக்கத் தெரிந்த, திறமையுள்ள அஜீத்தாவது இதை மாத்தக்கூடாதான்னு கேட்டீங்கன்னா அதுக்கு பதிலை கடைசில சொல்றேன்.

என் நண்பர் அஜீத் படத்துல "எப்பவும் சொங்கி மாதிரியே இருக்கான். சோகமாவே இருக்கான்.."ன்னு சொன்னார். ஊருக்குள்ள வேலை தேடிட்டிருக்க மூத்த பசங்க எல்லாமே எப்பவுமே அப்படித்தான் இருப்பாங்க. இதை அஜீத் தெரிஞ்சுதான் நடிச்சாருன்னு வக்காலத்து வாங்க வரல. ஆனா படத்தோட கேரக்டருக்கு ஒன்றி போகலையா என்ன?? தெரிஞ்சோ தெரியாமலோ அஜீத் நடிப்பு அந்த கதாபாத்திரத்துக்கு ஏத்த மாதிரி தானே இருந்தது?

த்ரிஷா புள்ளையார் இல்லனா பெயிலாகறது எந்தளவு லாஜிக் இல்லையோ அதே மாதிரி தான் அஜீத் திருநள்ளாறு போனா நல்ல படம் வரும்னு நம்பறதும் :)).

வேலையில்லாம நாலு நண்பர்களோட சுத்திட்டிருந்தாலும் சரி, ரவுடியாயிருந்தாலும் சரி, ஏழை பணக்காரனாயிருந்தாலும் சரி ஹீரோ-ஹீரோயினி கடைசில சேருவாங்க. இதுதானே எல்லா தமிழ் படத்துலயும் நடக்குது. இந்த படத்துல கடைசில ஊர்ல ரவுடின்னு பேரு வாங்கனவனுக்கு பொண்ணு தரமாட்டோம்னு சொன்னது யதார்த்தமா தெரியலையா?

படத்துல நூறு இருநூறு ரவுடிகளை ஒத்தை ஆளா ஒரே அருவாளால வெட்டி சாய்க்காமல் ஒரே ஒரு ரவுடி கூட மட்டும் மோதறதே பாதி பேருக்கு பிடிக்கல போலிருக்கு :)).

படத்துல காமெடிக்கு தனி டிராக் இல்லாம திரைக்கதையோட ஒன்றி நல்லாத்தானே இருக்கு? இல்ல இப்பல்லாம் நான் தான் மொக்கை ஜோக்குக்கெல்லாம் சிரிக்க ஆரம்பிச்சுட்டேனா?? சந்தானம், விவேக் இரண்டு பேருமே தனியாக டிராக் இல்லாமல், டிரேட் மார்க் பஞ்ச் டயலாக்குகளுடன் நல்லாத்தானே செஞ்சிருந்தாங்க?

சரண்யாவைத் தவிர யாருமே நன்றாகவே நடித்திருந்தார்கள். சரண்யா தான் கொஞ்சம் ஓவர் ஆக்டிங். 'கனவெல்லாம்' பாட்டிலும் அஜீத்தை பரீட்சைக்கு பஸ் ஏற்றிவிடும்போதும், அஜீத்தை ஜெயிலில் அடிக்க வரும்போதும் ராஜ்கிரண் சிறப்பாக நடித்திருபபாரே. அந்த பாட்டே காமெடியானபிறகு வேறென்ன சொல்வது.

அஜீத் ரெட்டாகவோ பரமசிவனாகவோ வராததுதான் ஆறுதல் அளிக்கிறதா? அவர் நடிப்பு? பல இடங்களில் அசத்தியிருந்தாரே? ஜெயிலில் த்ரிஷா அப்பா கல்யாணத்தை நிறுத்தியது பற்றி ராஜ்கிரண் அஜீத்திடம் சொல்லும்போது அஜீத்தின் கண்ணசைவு இன்னும் எனக்கு மறக்கவில்லை. :)

கடைசியில் குற்றவாளிகள் லிஸ்டில் அஜீத் போட்டோவை ஒட்டுவதுதான் படத்தின் சிறந்த காமெடி காட்சியாக என் நண்பர் சொன்னார். இறுதியில் ஹீரோ ஜெயிக்காவிட்டால் மக்களுக்கு அது காமெடியாகிவிடுகிறது. "இதே மாதிரி தானே வரதன் ரவுடியாயிருப்பான்"ன்னு நம்மாளு யாரோ தான் விமர்சனப் பதிவுல எழுதி இருந்தாரு. இது ஏன் சிலருக்கு மட்டும் காமெடியாகிறது?

இப்போது படத்தில் கிளைமாக்ஸ் மாற்றியிருக்கிறார்களாம். கடைசியில் மீண்டும் கனவெல்லாம் பாடலை போட்டு அஜீத் எஸ்.ஐ ஆக, ராஜ்கிரன் சல்யூட் அடிப்பாராம். இப்போது யார் மேல் தவறு? முதலில் அஜீத் தோற்றதுபோல் காண்பித்த இயக்குனர் மீதா? தல தோற்க்ககூடாது என்று சவுண்ட் விட்ட ரசிகர்கள் மீதா? அல்லது "என்னய்யா ஹீரோ ஜெயிக்கல..என்ன படம் இது" என்று குறைபட்டுக்கொள்ளும் பொதுஜனம் மீதா??

என்னைப் பொறுத்தவரை, கிளைமாக்ஸ் மாற்றப்படுவதற்கு முன் இந்த படம் 'தல'க்கு பக்காவாக பொருந்தும் கிரீடம் தான்.

இது இயல்பான படமா, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு வட்டத்துக்கு கொண்டுபோகுதா என்பதையெல்லாம் விட்டுவிடலாம்....ஆனால் இது மொக்கை படமே கிடையாது. கண்டிப்பாக தியேட்டருக்குப் போய் ஒருமுறையாவது பார்க்கலாம். இந்த படம் பிடிக்காதவர்கள் என்னிடம் சொல்லுங்கள். ஒரு லிஸ்ட் தருகிறேன். எல்லாமே தமிழ் படங்கள்தான். அந்த படங்களையெல்லாம் பார்த்துவிட்டு மீண்டும் இந்த படம் பாருங்கள். ஒருவேளை பிடிக்கலாம்.



போகாத ஊருக்கு! - பெங்களூரு சந்திப்பு

"அதான் நீ வரவேயில்லையே அப்புறம் என்னடா?"ன்னு கேள்வியெல்லாம் கேக்கப்படாது. எந்த சந்திப்பா இருந்தாலும் போகனும்னு திட்டம் போட்டு கடைசி நேரத்துல அது காலாவதியாச்சுன்னா அதுக்கு ஒரு மொக்கை போடறது எங்க பயக்க வயக்கம்..சாரி..பழக்க வழக்கம்.

போன வாரம் ஒரு நாள் ஆப்பீஸ்ல படுபயங்கரமா ஆணிபுடுங்கிட்டிருக்கும்போது சின்ன தல போன் போட்டு சந்திப்பைப் பத்தி சொன்னதும் "அவர் சென்னைக்கு வந்து ரெண்டு நாள் போட்ட மொக்கைக்கெல்லாம் பழிவாங்க நேரம் கிடைச்சுடுச்சுடா கப்பி"ன்னு மனசுல நினைச்சுக்கிட்டே "கண்டிப்பா வரேண்ணே..எனக்கு பெங்களூரு 'ஃபுல்'லா சுத்தி காட்டனும்"னு வாக்குறுதி கொடுத்தேன். வாங்கினேன்.

ஆனா கடைசி நேரத்துல "மகனே ஒரு கோடி ரூபா கொடுத்தாக்கூட ஆறு மணி அஞ்சு நிமிஷத்துக்கு மேல வேலை செய்யக்கூடாது... ஆறேகாலுக்கெல்லாம் வூட்டுக்குள்ள போய் பூந்துக்கோ"ன்னு கவுண்டர் டோன்ல எங்கப்பாரு ஆர்டர் போட்டுட்டதால பெங்களூரு ப்ளான் அடுத்த வாரத்துக்கு தள்ளிப்போட்டாச்சு.

ஊருக்கு போய் ரெண்டு நாளா பாத்தி கட்டி சாப்பிட்டதுல டயர்டாகி இன்னைக்கு ஆபிசுக்கும் அப்பீட் விட்டாச்சு. மதியம் ரூமுக்கு வந்து பதிவுகளையெல்லாம் பார்த்தாதான் தெரியுது பல நல்ல விஷயங்களைத் தவறவிட்டிருக்கிறேன். சமோசா, வெள்ளரியிலிருந்து புகைப்படக்கலை குறித்த பகிர்வுகள், குழந்தைகளுடன் சந்திப்பு, கல்வெட்டின் பலூன் விளையாட்டு என அசத்தியிருக்காங்க.

"ச்சே நாமளும் பெரிய போட்டோகிராபர் ஆகியிருக்கலாமே"ன்னு மோட்டுவாயைத் தடவிக்கிட்டே விட்டத்தை வெறிச்சுட்டிருந்தேன். கைல மொபைலு. சோனி எரிக்ஸன் கம்பெனியே சங்கத்து சார்பா எனக்கும் தேவுக்கும் ஸ்பான்சர் பண்ணது. கை தானா கவரை ஓப்பன் பண்ண "கச்சக்..கச்சக்..கச்சக்" (எத்தன நாளுக்குத்தான் 'க்ளிக்'க்குன்னே படமெடுக்கறது...பிறவிக்கலைஞன்லாம் இப்படி வித்தியாசமாத்தான் படமெடுக்கனும் :D) அந்த போட்டோ தான் கீழே இருக்கறது.










இந்த போட்டோவையெல்லாம் பார்த்து என் நண்பனுக்கு ரத்தக்கண்ணீரே வந்துடுச்சு. "எங்ககூடவே தானேடா இருந்த...ஏன்டா நீ மட்டும் இப்படி ஆயிட்டே?"ன்னு ஒரே பாராட்டு மழை தான். நீங்களும் பாராட்டலாம்..ஹி ஹி..

அடுத்த வாரம் கண்டிப்பா பெங்களூரு வருவேன். ரிட்டர்ன் டிக்கெட் வாங்கிக்கொடுக்க ஆவலாய் இருப்பவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம் ;)



Apocalypto

திரைப்படத்தில் ஒரு வன்முறைக் காட்சியை மூன்று வகைகளில் எடுக்கலாம். மேலோட்டமாக காட்டிவிட்டு அடுத்த காட்சிக்கு நகர்ந்துவிடலாம். கொஞ்சம் ரத்தத்துடன் கொடூரமாகக் காட்டலாம். அல்லது மூன்றாவதாக மெல் கிப்சனைப் போல காட்டலாம். உதாரணத்திற்கு ஒரு சிறுத்தை மனிதனைத் தாக்கும் காட்சியில் சிறுத்தை பாய்வதைப் போல் காட்டுவது முதல் வகை. சிறுத்தையுடன் மனிதன் சண்டை போடுவது போல் காட்டி கையிலோ காலிலோ அடிபட்டு சிறிது ரத்தத்தையும் காட்டுவது இரண்டாவது வகை. 'மெல் கிப்சன்' வகையில் சிறுத்தை நேராக அந்த மனிதனின் முகத்தைக் கவ்வி தாக்க ஆரம்பிக்கும். அவன் முகத்தை சிறுத்தை கடித்துச் சின்னாபின்னமாவது முழுதாகக் காட்டப்படும். :))

மெக்சிகோ பகுதிகளில் வாழ்ந்த மாயன் இனப் பழங்குடியினரைப் பற்றிய திரைப்படம் அபோகலிப்டோ (Apocalypto). மாயன் இனம் அழிந்த காலகட்டத்திற்கு சற்றுமுன்னர் புனையப்பட்ட கற்பனைக் கதை. காட்டில் மிருகங்களை வேட்டையாடி வாழும் கதாநாயகனின்(ஜாகுவார் பா) கிராமத்தை நகரிலிருந்து வரும் மாயன் இன வீரர்கள் தாக்குகிறார்கள். அங்கிருக்கும் அனைவரையும் அடிமைபடுத்துகிறார்கள். கதாநாயகன் தன் கர்ப்பினி மனைவியையும் குழந்தையையும் ஒரு குழியில் இறக்கி காப்பாற்றுகிறான். மற்றவர்களைக் காப்பாற்ற முயலும்போது அவனும் சிக்கிக்கொள்கிறான்.



மாய இனக் கடவுளான குகுல்கனுக்கு நரபலி கொடுக்கப்பதற்காகக் கொண்டுசெல்லப்படுகிறார்கள். மக்கள் மத்தியில் அரச குடும்பத்தினரின் முன்னிலையில் நூற்றுக்கணக்கான ஆண்கள் பலியிடப்படுகிறார்கள். பெண்கள் அடிமைகளாக விற்கப்படுகிறாகள். கதாநாயகனை பலிபீடத்தில் படுக்க வைக்கும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. சூரிய கடவுள் குகுல்கன் திருப்தியடைந்துவிட்டதாகவும் கதாநாயகனையும் மற்றவர்களையும் விடுதலை செய்துவிடுமாறும் பூசாரிகள் கூறிவிடுகிறார்கள்.

ஆனால் இவர்களைக் கொணர்ந்த வீரர்கள் ஒரு மைதானத்தில் இவர்களை ஓடவிட்டு ஈட்டியெறிந்தும் வில் அம்புகளாலும் கொல்கிறார்கள். அவர்களிடமிருந்து கதாநாயகன் காட்டினுள் தப்பிச்செல்கிறான். தப்பிக்கும்போது தலைவனின் மகனைக் கொன்றுவிடுகிறான். இதனால் ஆத்திரம் கொண்டு அவனைத் துரத்துகிறார்கள்.


பின் தொடர்ந்து வரும் வீரர்களை ஒவ்வொருவராகத் திட்டமிட்டுக் கொன்று இறுதியில் தன் கிராமத்திற்கு வந்து சேர்ந்து தன் மனைவியையும் குழந்தையையும் காப்பாற்றுகிறான். படத்தின் முடிவில் ஐரோப்பியர்கள் கப்பலில் வருகிறார்கள். அவர்களைத் தொலைவிலிருந்து பார்க்கும் கதாநாயகனின் மனைவி அவர்களிடம் செல்லலாமா எனக் கேட்கிறாள். கதாநாயகன் அதை மறுத்து தன் குடியை மீண்டும் எழுச்சிபெறச் செய்வதாகச் சொல்லி காட்டிற்குள் அழைத்துச் செல்வதாய் படம் முடிகின்றது.

மாயன் மொழியில் ஆங்கில சப்-டைட்டில்களுடன் எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் மாயன் இன மக்களின் வாழ்வுமுறையையும் அவர்கள் சடங்குகளையும் (வரலாற்றுச் சான்றுகள் குறித்த சந்தேகங்கள் இருந்தாலும்) சிறப்பாகப் பதிவு செய்கிறது. சிறப்பான பின்னணி இசையும் அடர்ந்த காடுகளில் அநாயசமாக சுழன்றுவரும் படப்பதிவும் படத்திற்குப் பெரும்பலம். அதிலும் கதாநாயகன் அருவியிலிருந்து குதித்துத் தப்பிக்கும் ஒரு காட்சி அருமையாகப் படமாக்கப்பட்டுள்ளது.



படத்தில் ரத்தவாடை சிறிது அதிகம்தான் என்றாலும் கதை நடந்த காலகட்டத்தையும் கதையின் கருவையும் வைத்துப் பார்க்கும்போது குற்றம் சொல்ல முடியவில்லை. உதாரணத்திற்கு முதல் காட்சியிலேயே காட்டுப்பன்றியின் வயிற்றைக் கிழித்து உறுப்புகளை எடுப்பதும், அடிமைகளைப் பலியிடும்போது நெஞ்சைக் கீறி இதயத்தை எடுப்பதும் தலையைக் கொய்வதும், ஆரம்பத்தில் சொன்ன சிறுத்தை தாக்குதலும் கொஞ்சம் அதிகம் தான்.

அடிமைகளை அழைத்துச் செல்லும் வழியில் கிராமங்களில் மக்கள் நோய்வாய்பட்டு இறந்துகிடக்கிறார்கள். பயிர்கள் விளையாமல் பட்டினிச் சாவுகள் நடக்கின்றன. காட்டை அழித்து சுண்ணாம்பு சுரங்கங்கள் உருவாகின்றன. கட்டிடங்கள் எழுப்புவதற்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. அடிமைகள் வியாபாரம் நடக்கின்றது. பொதுமக்கள் நோய்வாய்பட்டிருக்கின்றனர். ஏழ்மையில் இருக்கின்றனர். அதே நேரம் அரச குடும்பத்தினர் சகல வசதிகளுடன் ஆரோக்கியமாய் இருக்கின்றனர். பலியிடும் பூசாரி மக்களைத் தன் பேச்சால் உணர்ச்சிவசப்பட வைக்கிறான். அரசனுக்கு நெருக்கமாய் இருக்கிறான். சூரிய கிரகணத்தைத் தனக்கு சாதகமாக்கி கடவுள் திருப்தியடைந்துவிட்டதாகப் பொய்யுரைக்கிறான். விடுதலை செய்யப்பட்ட அடிமைகளை வீரர்கள் தங்கள் விளையாட்டுப் பொருட்களாக கொன்று குவிக்கிறார்கள். இவ்வாறு மாயன் சமூகத்தில் நிகழ்ந்த அத்தனை அவலங்களையும் காட்டியிருக்கிறார் இயக்குனர் மெல் கிப்சன். இது மாயன் சமூகத்திற்கு மட்டுமல்லாது எல்லா நாகரீகங்களும் அழிவதற்கும் காரணிகளாய் இருந்தவை. இன்றும் சமூகத்தின் சீர்கேடுகளுக்குக் காரணமாய் இருப்பவை.

நமக்குப் புரியாத மொழியில் பேசினாலும் காட்சியமைப்பினாலும் நடிகர்களின் தேர்ந்த நடிப்பாலும் ஒன்றி பார்க்கமுடிகிறது. காட்சிகளின் நேர்த்தியும் படமாக்கப்பட்ட விதமும் பிரமிக்க வைக்கின்றன. வன்முறையை சிறிது குறைத்திருந்தால் சிறந்த ஆக்ஷன் திரைப்படமாக இருந்திருக்கும். ஆனால் அது மெல் கிப்சன் படமாய் இருந்திருக்காது.



துள்ளல் - இன்று முதல்!!

வெளியாவதற்கு பல மாதங்கள் முன்னரே பரபரப்பைக் கிளப்பிய ப்ரவீன் காந்தின் துள்ளல் திரைப்படம் இன்று உலகெங்கும் வெளியாகிறது. முக்கியமாக தி.நகர் கிருஷ்ணவேணி, சைதை ராஜ், விருகம்பாக்கம் தேவி கருமாரி, கே.கே.நகர் விஜயா போன்ற உலகப் புகழ் பெற்ற திரையரங்குகளில் இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுகின்றது.

ரட்சகன், ஜோடி, ஸ்டார் என பல வெற்றிப்படங்களை இயக்கிய ப்ரவீன்காந்த் முதன்முறையாக கதாநாயகனாக களத்தில் குதித்திருக்கிறார். ஏற்கனவே அவர் இயக்கிய படங்களில் கொலைவெறி கதாபாத்திரங்களை ஏற்று பலரின் தூக்கத்தைக் கெடுத்தவர்.



இவர் இயக்கிய ரட்சகன் திரைப்படத்தால்தான் ஜென்டில்மேன் கே.டி.குஞ்சுமோன் லட்சாதிபதி ஆனார் என்பது குறிப்படத்தக்கது. ஜோடி ஒரு டப்பா படம் என்று அனைவராலும் பாராட்டப்பட்ட திரைப்படம். ஸ்டார் திரைபடம் அவரது திரைவாழ்வில் மற்றுமொரு மைல்கல்லாக இருந்தது என்றால் மிகையாகாது. பாலகிருஷ்னா- சிம்ரன் நடித்து 'ஓ போடு' என்று தமிழில் டப் செய்து வெளியிடப்பட்ட தெலுகு படத்தின் தழுவல் தான் ஸ்டார் என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் புரளி கிளம்பியது. இந்த படத்தில் ப்ரவீன்காந்தின் உணர்ச்சிமிக்க நடிப்பை பிரசாந்த் பாராட்டியுள்ளார்.

வழக்கமாக ஏ.ஆர்.ரகுமான் இந்தி படத்திற்கு போட்ட மெட்டுக்கள் தமிழுக்கு கொண்டுவர பிரவீன் காந்தின் முந்தைய படங்களே காரணம். ஆனால் இந்த முறை 'இன்னிசை இடி' தினா துள்ளல் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்கள் எந்த எஃப்.எம் சேனலிலும் வராதது பலருக்கு நிம்மதியைத் தந்துள்ளது.

சின்ன கலைவாணர் விவேக் ஒத்தை ஆளாக படத்தைக் காப்பாற்ற முடியுமா என்பது சந்தேகமே.





படத்தில் டூயட் காட்சிகளில் ப்ரவீன் காந்தின் ரொமான்டிக் லுக் 'மேட்டுக்குடி' கவுண்டமணிக்கு இணையாக இருக்குமென படத்தின் ஸ்டில்களைப் பார்க்கும்போதே தெரிகிறது.

இந்த திரைப்படம் பலதரப்பட்ட மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'Youngஅ Aரியா உள்ளே வாங்க' என்ற படு மொக்கையான டேக்லைனுடன் வெளியடப்படும் இந்த திரைப்படம் தன் திரைவாழ்வில் திருப்புமுனையாக இருக்குமென ப்ரவீன் காந்த் பேட்டியளித்துள்ளார்.

'சென்னையில் கடந்த இரண்டு வாரமாக மழை பெய்யுது. இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் சொல்லியிருக்காங்க. மழைக்கு தியேட்டர் பக்கம் ஒதுங்கறவங்களை நம்பித்தான் இந்த படத்தை ரிலீஸ் பண்றோம்" என சென்னை வட்டார விநியோகஸ்தர் தெரிவித்தார்.

'அகில உலக ப்ரவீன்காந்த் ரசிகர் மன்றம்' சார்பாக தமிழகமெங்கும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது ரித்தீஷ் (எ) முகவை குமார் நடித்த 'கானல் நீர்' திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் என பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.

இந்த திரைப்படத்தின் எக்ஸ்க்ளூசிவ் விமர்சனம் விரைவில் வெளியாகும்.



இதெல்லாம் பெருமையா?

பாஸ்டன் பாலா நம்மைப் பற்றி நாமே பெருமையாக நினைக்கும் எட்டு விஷயங்களை பட்டியலிட அழைத்திருக்கிறார். சிறு வயதில் கின்னஸ் சாதனைகளை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு தொடர்ந்து தலைகீழாக நிற்க முயன்றதையும் வீட்டு வாசலில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்ததையும் அப்பா தடுத்திருக்காவிட்டால் அதை இங்கே பட்டியலிட்டிருக்கலாம். 12 வயதில் தெரு டீமிற்காக கிரிக்கெட் பால் மேட்சில் முதன்முதலாக களமிறங்கியபோது டெண்டுல்கரை விட சிறு வயதில் இந்திய அணியில் இடம்பெறும் கனவு மெய்ப்பட்டிருந்தாலும் பரவாயில்லை. அப்படி அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தெரு கிரிக்கெட்டோடு நின்றுவிட்டது.

"இத்தனை நாளாக எழுதிக்கொண்டிருப்பதே பெருமை தான்", "பாபா கூப்பிட்டதே பெருமைதான்"[இரண்டுமே உண்மைதானே :D] என்று வழக்கமான ஜல்லி அடித்தால் எழுதும்போதே பேக்ஸ்பேஸ் பட்டனை விரல்கள் தேடுகின்றன.

சின்ன சின்ன விஷயங்களுக்கும் பெருமைபட்டுக் கொள்ளும் அல்ப மனம்தான். ஆனால் "இதெல்லாம் பெருமையா? கடமைடா" என மனசாட்சி குரல் கொடுத்து கால்களை தரைக்கு கொண்டுவந்துவிடுகிறது. மனசாட்சி அமைதியாய் இருக்கும் சமயங்களில் கண்கள் அக்கம்பக்கம் பார்த்து மனசாட்சியின் வேலையை செய்துவிடுகின்றன. நம்மை பற்றி அடுத்தவர் சொல்லும் பெருமையான விஷயங்களை ஆட்டோகிராப் நோட்டிலும் ஆர்க்குட் டெஸ்டிமோனியல்களிலும் தேடினால் எல்லாம் உள்குத்து மேட்டராக இருக்கும். :))

எதையெல்லாம் சொல்லி தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறோம் என யோசித்ததில் பட்டென நினைவுக்கு வந்தவைகளில் சில கீழே:

1. பள்ளியில் பத்தாம் வகுப்பிலும் பன்னிரெண்டாம் வகுப்பிலும் முதலாக வந்ததை விடவும் "நல்லா படிக்கிறான். ஆனா ரொம்ப திமிர். எதிர்த்து எதிர்த்து பேசறான்" என பள்ளி முதல்வர் அப்பாவிடம் போட்டுக் கொடுத்தது தான் பெருமையாக இருக்கிறது. மனதில் பட்டதை நேராக சொல்லிவிடுவது நமக்கு சரியென பட்டாலும் பல நேரங்களில் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் "அதற்காகவெல்லாம் மாற்றிக்கொள்ள முடியாது" என எதுவாக இருந்தாலும் மழுப்பாமல் நேருக்கு நேர் சொல்லிவிடுவதை பெருமையாகவே கருதுகிறேன்.

2. கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் நாளே இரண்டாம் வருடம் படிக்கும் ஊர்க்கார நண்பனை சந்திக்க தனியாக இரண்டாம் ஆண்டிற்கான பிளாக்கில் அவன் அறைக்கு சென்றேன். அறை முழுதும் இருட்டு. கம்ப்யூட்டரில் "Dumb and Dumberer" படம் ஓடிக்கொண்டிருந்தது. திரை வெளிச்சத்தில் அவனைக் கண்டுபிடித்து அவன் அருகில் அமர்ந்தேன். படம் முடிந்து அறைக்கதவைத் திறந்தால் உள்ளே கிட்டத்தட்ட இருபது சீனியர்கள். "டேய் ஃபர்ஸ்ட் இயராடா நீ" என ஒருவன் கேட்க அதற்குள் என் ஊர்ஸ் புண்ணியத்தில் ராகிங்கிலிருந்து தப்பியது பெரிய சாதனை. ஆனால் அதற்கு அடுத்த வாரமே மொத்தமாக மாட்டினோம் :))

"நீயெல்லாம் எதுக்குய்யா இங்க வந்தே? காஞ்சிபுரத்துல மீனாட்சி காலேஜ்லயே படிக்க வேண்டியதுதானே" என முதல் வருடமே முதல்வரிடம் பாராட்டை வாங்கினேன். இரண்டாம் ஆண்டில் துறைக்கு கூடுதல் உதவி செயலாளர், மூன்றாம் ஆண்டு உதவி செயலாளர், இறுதி ஆண்டில் செயலாளர் என ரொம்பப் பொறுப்பாக பொறுப்புகளையெல்லாம் வாங்கிக்கொண்டு டிபார்ட்மெண்ட் அசோசியேஷனுக்கு வேலை பார்த்தது அப்போது மிகவும் பெருமையாக இருந்தது. இப்போது யோசித்தால் சில சமயம் காமெடியாக இருக்கிறது. ["காலேஜ்லயே பசங்கள்ல நீ தாண்டா டாப்பர்" என நண்பர்கள் ஏற்றிவிடுவார்கள். ஒரு முறைகூட முழுதாக மூன்று மணி நேரம் பரிட்சை எழுதியிருக்காத நான் பையன்களில் டாப்பர்.எனக்கு முன்னால் நிறைய மாணவிகள் இருப்பார்கள். ஆனால் அவர்களெல்லாம் சோப்பு போட்டு மார்க் எடுத்தவர்கள் :)))].

3. அரை மணி நேர அவகாசத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைத்துவிட்டு ஒன்றரை மணி நேரம் டெக்னிகலாக ஒரு வார்த்தை கூட பேசாமல் சொந்த கதையையும் பொன்னியின் செல்வனையும் சுஜாதா சிறுகதைகளளயும் தமிழ் இலக்கிய சூழல் பற்றியும்[அப்படின்னா என்னன்னு இப்ப வரைக்கும் தெரியாது :D] பேசிவிட்டு வேலை வாங்கியது சாதனை. "சும்மா கூப்பிட்டு கதையடிச்சு கலாய்க்கறானுங்கடா. அடுத்த கம்பெனி எப்போ வரும்" என புலம்பியபடி ஹாஸ்டலில் இங்கிலிபீசு படம் பார்த்துக்கொண்டிருந்தபோது செலக்ட் ஆகிவிட்டதாக சொன்னார்கள். "பார்த்தவுடனே அவிங்களுக்கு அண்ணனோட அருமை தெரிஞ்சிருக்கும்டா மாப்ள" என பெருமைபட்டுக் கொண்டேன்.அந்த ஆணியை இன்னும் பிடுங்கிக்கொண்டிருப்பது சோதனை :))

4. எப்போதும் ஊர்சுற்ற தயாராகவே இருக்கும் மனநிலை. செல்லும் இடம் குறித்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போரடித்தால் எங்காவது கிளம்பும் ஒத்த அலைவரிசையுடைய நண்பர்கள். டிபன் சாப்பிட ஐம்பது கிலோமீட்டர் பைக்கில் சென்ற அனுபவங்கள் உண்டு. எங்கு போகிறோம் என்பது முக்கியமல்ல. எங்காவது பயணம் செய்வதே எல்லாருக்கும் குறிக்கோளாக இருக்கும். உடலும் எந்த சொகுசையும் எதிர்பார்க்காது. நினைத்த நேரத்தில் நினைத்ததை செய்வது தற்பெருமை கொள்ள இன்னுமொரு காரணம்.

5. "நட்புக்கு கூட கற்புகள் உண்டு" என மொக்கையான வரிகள் வந்தாலும் "ஜல்சா பண்ணுங்கடா" பாட்டை திரும்பத் திரும்ப கேட்பதற்கு காரணம் நட்புக்கு மரியாதை :). சுற்றமும் நட்பும் நாடுவது பெருமை. "ஊருக்கு வந்தா வீட்டுலயே இருக்க மாட்டான். பிரெண்ட் வீட்டுக்கு எங்கயாவது போயிடுவான்" என அப்பா பக்கத்து வீட்டுக்காரருடன் கதைப்பதைக் கேட்டுக்கொண்டே வண்டியெடுத்துக்கொண்டு நண்பன் வீட்டிற்கு கிளம்பிச்செல்வது சுகம். சிறுசிறு சண்டைகள்[like III 'C' vs III'A' ;)] தவிர யாருடனும் இதுவரை பெரிதாகப் பகைத்துக்கொண்டதில்லை. என்னை நம்பி பலர் அவர்களின் சொந்த விஷயங்களில் அறிவுரை கேட்பதும் புலம்புவதும் அவர்களைத் தேற்றுவதிலும் ஒரு சிறிய மன நிறைவு. நல்ல நண்பர்களைக் கொண்டிருப்பது பெருமைதானே :)

6. சகிப்புத்தன்மை என் அம்மாவிடம் கற்றுக்கொண்டது. அலைவரிசை ஒத்துவராதவராய் இருந்தாலும் அவரிடம் முகம் சுளிக்காமல் பழக முடியும். அதை மற்றவரிடம் சொல்லியும் பெருமைபட்டுக்கொள்வேன். "எப்படிடா இவனுங்க கூடல்லாம் வேலை பாக்கற?" என என் அலுவலக நண்பர்களைத் தற்செயலாக சந்தித்த நண்பன் கேட்டபோது என் அம்மா நினைவுக்கு வந்தாள். எல்லோருக்கும் நல்லவராய் இருக்க யாராலும் முடியாது என்று சொல்வது பொய்யென அவளைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்.

7. "அவனா ரொம்ப நல்ல பையனாச்சே. அமைதியான பையன்" என சுற்றுவட்டாரத்தில் நல்ல பெயர் வாங்கிவைத்திருப்பது பெருமை. எதுவாக இருந்தாலும் ஏரியாவுக்கு வெளியே எல்லா பிரச்சனைகளையும் முடித்துவிட்டு நல்ல பையனாக ஏரியாவுக்குள் வருவேன். கல்லூரியில் படிக்கும்போது அப்பா சொன்ன டயலாக் " நீ மதுரைல ராத்திரி ஃபுல்லா கூட சுத்திட்டிருப்ப. அதையெல்லாம் நான் வந்து பார்க்க போறதில்ல. ஆனா ஊருக்கு வந்தா ஒழுங்கா பத்து மணிக்கு வீடு வந்து சேரு". அதை இன்றும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். எங்க ஏரியாவுக்கு போனா நான் ரொம்ம்ம்ம்ப நல்ல்ல்ல பையன் :)

8. மூன்று வயதில் இரண்டு சவரன் செயினுக்கு பதில் பிளாஸ்டிக் குப்பியை பண்டமாற்று முறையில் மாற்றி 'சொப்பு அண்ணனுக்கு' பெருத்த லாபம் சம்பாதித்துக் கொடுத்தேன். இப்போதும் யார் எதை சொன்னாலும் நம்பிவிடுவேன். "வெளுத்ததெல்லாம் பால், பொங்குவதெல்லாம் பீர்" என்று சொல்லும் கோஷ்டி. பலமுறை பிளாஷ்பேக்கில் நண்பர்கள் கதை சொல்லும்போதுதான் உண்மையில் நடந்ததே தெரியும். நல்ல முகங்களை மட்டும் பார்த்து ஆறாவது முகத்தை பார்க்காததால் பலமுறை நொந்துபோயிருக்கிறேன். இது போல் பலமுறை பல்பு வாங்கியிருந்தாலும் "பேசிக்காவே நான் நல்லவன்டா" என பெருமைபட்டுக்கொள்ளலாம்.

பெருமை பேச ஆரம்பித்து எங்கேங்கோ போய் எப்படியோ எட்டு தேர்த்தியாகிவிட்டது. மூச்சு முட்டுது. கதவைத் தொறங்கப்பா :)). இதெல்லாம் பெருமையா என யாரும் காமெடி கீமெடி பண்ணிடக் கூடாது. ஏன்னா பேசிக்கலி நான் நல்லவன் :))

அடுத்து எழுத நான் அழைக்கும் எட்டு பேர்
1. சின்ன தல இராயல்ஜி
2. விவ்ஸ் இளா
3. அனுபவ சித்தர் தம்பி
4. கதாசிரியர் வினையூக்கி
5. புல்லட் டிரெயின் மகேந்திரன். பெ
6. பெருசு
7. சந்தோஷ்
8. தெகா

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

இத்துடன் இப்பகுதி இனிதே நிறைவடைகிறது!! :)



The Last King of Scotland

இரண்டு காரணங்களுக்காக இன்னும் சில நாட்களுக்கு இந்த திரைப்படத்தை மறக்க முடியாது. ஒன்று ஃபாரஸ்ட் வைட்டேகரின்(Forrest Whitaker) நடிப்பு. இரண்டாவது திரையரங்குக்கு சென்றபோது நேரவிருந்த விபத்து. எதிரில் வந்த மாநகரப் பேருந்தை கவனிக்காமல் ஒரு காரை ஓவர்டேக் செய்ய முயன்று நூலிழையில் காருக்கும் பேருந்துக்கும் இடையில் வண்டியை சொருகி உயிர் தப்பினோம். இல்லையெனில் அந்த புத்தம்புதிய பேருந்துக்கு முதல் போணி நாங்களாகத்தான் இருந்திருப்போம் :)

எழுபதுகளில் உகாண்டாவில் கொடுங்கோல் ஆட்சி நடத்திய இடி அமீன் குறித்த திரைப்படம் தி லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லான்ட்(The Last King of Scotland). உண்மை சம்பவங்களுடன் கற்பனை கதாபாத்திரங்களை இணைத்து இடி அமீனைப் குறித்தும் அன்றைய உகாண்டா குறித்தும் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தில் கதைசொல்லியாக லாரன்ஸ் காரிகன் என்ற கற்பனை கதாபாத்திரம்.ஸ்காட்லாண்டில் மருத்துவப் படிப்பு முடித்ததும் புது அனுபங்களுக்காக உகாண்டாவிற்கு செல்வதில் படம் ஆரம்பிக்கிறது. அங்கு ஒரு கிராமத்தில் பணிபுரியும் ஆங்கிலேய மருத்துவருக்கு உதவியாளராக வேலையில் சேர்கிறார். அந்த காலகட்டத்தில் தான் இடி அமீன் முந்தைய அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியமைக்கிறார். தெருவெங்கும் மக்கள் கூடி நின்று பெரும் ஆரவாரத்துடனும் உற்சாகத்துடனும் இடி அமீனுக்கு பெரும் வரவேற்பளிக்கின்றனர். இடி அமீன் உரையாற்றும் ஒரு கூட்டத்திற்கு செல்லும் காரிகன் காரிகன் இடி அமீனீன் மேடைப் பேச்சால் ஈர்க்கப்படுகிறார்.

பின் ஒரு சிறிய விபத்தில் அமீனுக்கு சிகிச்சை அளிக்கும் காரிகன் அமீனுடன் நெருக்கமாகிறார். காரிகனின் மருத்துவத் திறமையாலும் நேர்மையான பேச்சாலும் ஈர்க்கப்படும் அமீன் அவனுக்கு உகாண்டா தலைநகர் கம்பாலாவில் தன் மருத்துவ ஆலோசகராகவும் உகாண்டா அரசின் மருத்துவ துறை ஆலோசகராகவும் நியமிக்கிறார். இருவருக்கிடையேயான நட்பு பலப்படுகிறது. பல நெருக்கடியான நிலையில் காரிகனின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடக்கிறார் இடி அமீன்.




நம் அன்புக்குரியவர்கள் தவறு செய்யும்போது அது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. இடி அமீன் செய்துவரும் கொடுமைகள் குறித்து ஆங்கிலேய அதிகாரிகள் கூறும்போதெல்லாம் காரிகன் அதை நம்ப மறுக்கிறார். இடி அமீன் உகாண்டாவின் வளர்ச்சிக்கும் ஒன்றினைந்த ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்காகவுமே பாடுபடுவதாக அவர்களிடம் சண்டையிடுகிறார்.
இடையில் காரிகன் செய்யும் சிறு தவறினால் அமைச்சர் ஒருவர் இடி அமீனால் கொல்லப்பட அவரின் சுயரூபம் வெளிப்படுகிறது. இடி அமீன் உகாண்டாவிலிருந்து வெளிநாட்டினர் அனைவரையும் வெளியேற்றுகிறார். கார்கன் தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன. இறுதியில் கார்கன் எவ்வாறு தப்பிக்கிறார் என்பதை உண்மை சம்பவங்களைக் கோர்த்து சொல்லியிருக்கிறார்கள்.
வைட்டேகர் இடி அமீனை நம் கண் முன் நிறுத்துகிறார். அவருடைய பாடி லேங்குவேஜும் பேசும் விதமும் அட்டகாசம். அவருடைய முந்தைய படங்களில் பெரும்பாலும் அடக்கி வாசித்திருப்பார் அல்லது அடக்கி வாசிக்க வேண்டிய கதாபாத்திரங்களாகவே இருக்கும்(உதா:Panic Room). இந்த படத்தில் மிரட்டியிருக்கிறார். முக்கால்வாசி படம் வரை இடி அமீனை நல்லவரைப் போல் தோன்ற வைத்து இறுதிக் காட்சிகளில் உறையவைக்கும் திரைக்கதை வைட்டேகரின் நடிப்பால் பலம்பெறுகிறது.
காரிகனாக நடித்துள்ள ஜேம்ஸ்(James McAvoy) படத்தின் முதல்பாதியில் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ருசிக்கத்துடிக்கும்போதும் பின்னர் அமீனைப் பற்றி தெரிந்ததும் உயிர் பயத்தில் உகாண்டாவில் இருந்து தப்பிக்க தவிப்பதுமாக வைட்டேகருக்கு இணையாக நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
காரிகன் உகாண்டாவிற்கு வரும் ஆரம்ப காட்சிகளில் பின்னணியில் வரும் ஆப்பிரிக்க பழங்குடி இசை தாளம் போட வைக்கிறது. உகாண்டாவின் கிராமப்புறத்தை இயற்கை ஒளியில் காட்டும் ஒளிப்பதிவு இறுதிக்காட்சிகளில் இரத்தத்தின் குரூரத்தை குறைத்தே காட்டுகிறது. உடலைப் புண்ணாக்கும் ஆப்பிரிக்க சம்பிரதாயங்களைக் மாண்டேஜ் காட்சிகளாக காட்டும் படத்தொகுப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது.
3 லட்சம் மக்களைக் கொன்று குவித்த இடி அமீனின் குரூரத்தை படம் முழுக்க காட்டாமல் குறைவான காட்சிகளிலேயே முகத்திலறைவது போல் சொல்லியிருக்கிறார்கள். இது ஒரு விதத்தில் படத்தை சிறப்படையச் செய்தாலும் இடி அமீனின் கொடுமைகளை முழுதாக எடுத்துச் சொல்லவில்லையோ எனத் தோன்றியது.
ஆள் அரவமற்ற இரவு நேர அண்ணா சாலையில் திரும்பி வரும்போது மனதில் அர்த்தமற்ற ஒருவித அச்சமும், அதே நேரம் 'நாம் எவ்வளவு பாதுகாப்பாய் இருக்கிறோம்' என்ற எண்ணமும் ஒருங்கே தோன்றியது.



வெயில் கொஞ்சம் அதிகம் தான்

"போன வருசத்தை விட இந்த வருசம் வெயில் அதிகம்பா" இந்த அரதப்பழசான மொக்கையான டயலாக்கை இன்னும் எத்தனை வருசம் தான் சொல்லிட்டு இருப்பாங்களோ தெரியல. இவங்க இந்த டயலாக் சொல்ல ஆரம்பிச்ச காலத்துல இருந்து வருசத்துக்கு அரை டிகிரி வெயில் கூடியிருந்தாலும் இந்நேரத்துக்கு 100-200 டிகிரியை தொட்டிருக்கனும்.

வெயில் காலத்துல மக்கள் பண்ற அழிச்சாட்டியத்துக்கு அளவேயில்லாம போயிட்டிருக்கு. படத்துல பாருங்க.



தலைவர் சிக்னலுக்கு முப்பதடி முன்னாடியே வண்டியை நிழல்ல நிப்பாட்டிட்டாரு. பின்னாடி வேன்காரன் சங்கு ஊதற மாதிரி ஹாரன் அடிச்சாலும் அண்ணாத்தை வெயில்ல நிக்க மாட்டாராம். பச்சை விளக்கு போடற வரைக்கும் நிழல்லயே தான் இருப்பாராம். சிக்னல் இருக்கறதே 30 செகண்ட். இவங்க பண்ற ரவுசுல நாலு வண்டி கூட சிக்னலை தாண்ட முடியாது. அண்ணே இப்படி கஷ்டப்பட்டு எதுக்குண்ணே வண்டி ஓட்டறீங்க? வெயில் அதிகமா இருந்தத உடம்போட சேர்த்து ஒரு குடை கட்டிக்கவேண்டியதுதானே இல்லைனா குடை பிடிக்கறதுக்கு ஒரு ஆளை சம்பளம் கொடுத்து வச்சுக்க வேண்டியது தானே பாஸு?

இதுல ஹெல்மெட் போட இவங்க கொடுக்கற பில்டப் இருக்கே..ஒரு மங்கி கேப்பை போட்டு இல்ல இரு கலர் கர்ச்சீப்பை கட்டி அதுக்கு மேல இதைக் கவுத்துட்டு...யப்ப்ப்பப்பா.முந்தாநாள் டிவில ஒரு அக்கா "எங்களுக்கு வெயில்ல ஹெல்மெட் போட்டா முடியெல்லாம் சிக்கலாயிடும்ங்க. மெயிண்டெயின் பண்ண கஷ்டம்"ன்னு 'கோதாவரி' கமலினி முகர்ஜி டயலாக்கெல்லாம் பேசிட்டிருக்காங்க. இன்னொருத்தரு "முடியெல்லாம் கொட்டி போயிரும்ங்க"ன்னு ஃபீல் பண்றாரு. அண்ணனுக்கு ஏற்கனவே பாதி தலைமுடி கொட்டி லோ பீம்ல ஹெட்லைட் எரிஞ்சுட்டிருக்கு. இதுக்கு மேல முடி கொட்டி என்ன ஆகப்போகுது? தலைமுடி கொட்டறதைப் பத்தி நினைக்கறவங்க தலையைப் பத்தி நினைக்க மாட்டறாங்க.

இவங்க தொல்லையெல்லாம் தாண்டி தவிச்ச வாய்க்கு இளநீர் குடிப்போம்னு வண்டியை நிறுத்தினா அங்கேயும் அவிப்பு. கண்ணுக்கு முன்னாடியே ஒருத்தருக்கு 12 ரூபாய்க்கு கொடுக்கற இளநீரை நாம போய் கேட்டதும் 15 ரூபாய் சொல்லுது இளநீர் விக்கற அக்கா. அவங்களுக்கு மட்டும் பண்ணிரெண்டு ரூபாயான்னு கேட்டா சூம்பிப் போன இளநீரை எடுத்து இதுதான் 12 ரூபாய்க்கு வரும்னு கலாய்க்குது. எங்க ஏரியால 13 ரூபாய்க்கு விக்கறாங்களேன்னு சொன்னா ஐநூறு ரூபாய் நோட்டை நீட்டி "கூடவே வர்றேன். எனக்கும் மொத்தமா வாங்கி கொடுத்துட்டு போ கண்ணு"ன்னு லந்து வேற. பைக் தானாவே பொட்டிக்கடைல் தண்ணி பாக்கெட் தேடியும் ஜூஸ் கடையில சூஸ் என்ற பேருல ஜில் தண்ணி குடிக்கவுமே போய் நிக்குது.

"இப்படி தாகத்தை தணிச்சே சம்பாதிச்ச சொத்தெல்லாம் இழந்துடுவோம் போலிருக்கேடா"ன்னு நண்பன்கிட்ட கேட்டா விழுந்து விழுந்து சிரிக்கிறான். "மாப்ள, நானெல்லாம் நயா பைசா செலவு பண்ணமாட்டேன். காலைல பதினொரு மணிக்கு முன்ன தாகம் எடுத்தாலோ நாலு மணிக்கு மேல தாகம் எடுத்தாலோ ஏதாவது ஓட்டலுக்கு போய் உட்கார்ந்து நாலு கிளாஸ் ஐஸ் வாட்டர் குடிச்சுட்டு மீல்ஸ் இருக்கான்னு கேட்பேன். அவன் இல்லைம்பான். நான் எழுந்து வந்துடுவேன். இடைப்பட்ட அந்த மூணு மணி நேரம் தான் எப்படியாவது மேனேஜ் பண்ணனும்"ன்னு ஐடியா தர்றான்.

பீச்செல்லாம் போனா வண்டி நிறுத்த இடம் தேடியே தாவு தீர்ந்துடுது. வெயில்ல இருந்து தப்பிக்க ஒரே சரணாலயம் தியேட்டர் தான். அதனால தான் 'நினைத்து நினைத்து பார்த்தேன்', 'நினைத்தாலே', 'திரு ரங்கா'ன்னு பல மொக்கைகள் பல வாரமா ஓடுது. ஒரு ரெண்டு மணி நேரம் நிம்மதியா இருக்கலாம்னு தியேட்டருக்கு வந்தா ஒரு கூல்டிரிங்க்ஸ் பாட்டில் அம்பது ரூபாய் சொல்வானுங்க. அதுல அதிகபட்ச விலை 35 போட்டிருக்கும். கேட்டா "எல்லா தியேட்டர்லயும் இப்படித்தான் சார்"ன்னு அடுத்தவன் முதுகை காட்டுவாங்க. அவனுங்க கிட்ட அரை மணி நேரம் சண்டை போட்டு தொண்டை எரிய தியேட்டருக்குள்ள போன அந்த படத்தைப் பார்த்து வயிறெரிய ஆரம்பிச்சுடுது.

ஆபிஸ்ல கூட இருக்கவனுங்க ஏதோ சில்வர் ஃபேனோடவே பொறந்தவன் மாதிரி பில்டப் கொடுப்பானுங்க. நாக்குக்கு ருசியா காரமா ஆந்திரா மெஸ் போலாம்டான்னு கூப்பிட்டா "நோ யார்..ரொம்ப ஹாட் யார்"ன்னு பீட்டர் விட்டுட்டு இத்துப்போன கேண்டின்ல உப்பில்லாத சாப்பாட்டை திம்பாங்க. ஆண்டிக்குட்டைல அரை டவுசர் போட்டு திரிஞ்சதை 'கூலா' மறந்துடுவானுங்க.

லீவ்ல ரூம்ல ரெண்டு நாள் நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா அங்கேயும் கொலவெறி கும்பல் காத்துட்டிருக்கும். வீடு முழுக்க ஜன்னல் வச்சிருப்பாங்க. ஆனா தென்மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு, மேல்கிழக்கு, கீழ்மேற்குன்னு எந்த பக்கம் காத்தடிச்சாலும் வீட்டுக்குள்ள காத்தே வராத மாதிரி வாஸ்து பார்த்து கட்டியிருப்பாங்க.

ஹூம்..என்னவோ போங்க..ஒரே புலம்பல்ஸா இருக்கு...இந்த வருசம் வெயில் கொஞ்சம் அதிகம் தான் :)))



இறப்பும் இறப்பு சார்ந்தும்

மடியிலேயே இறந்த நண்பனின் இறுதி நேர துடிதுடிப்பை என் கைகளின் நடுக்கம் நினைவுபடுத்தியபடியே இருக்கிறது. "மச்சான் ரொம்ப வலிக்குதுடா! செத்துடுவேன் போலிருக்குடா" அவன் உதிர்த்த கடைசி வார்த்தைகள் வலியை அதிகமாக்குகின்றன. காயத்தைச் சுற்றி கட்டியிருக்கும் துணியையும் மீறி முன்நெற்றியிலிருந்து வழியும் இரத்தம் பிசுபிசுத்தபடி இருக்கிறது. சட்டையில் படிந்துள்ள அவனது இரத்தம் நினைவுகளைக் கிளறிவிடுகிறது. மரணம் குறித்த பயம் மனதைக் கவ்வுகிறது. அவன் மனைவியிடம் மரணத்தை சொல்லப்போகும் தருணத்தை நினைக்கையில் பயம் அதிகரிக்கிறது. மரண செய்தியை சொந்தங்களுக்கு அறிவிப்பதை விட கொடியது வேறெதும் இருக்குமா என்று தெரியவில்லை.

சரவணன் பத்து வருடமாக பழகிய நண்பன். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் பேருந்து நிறுத்தத்தில் அறிமுகமானான். இருவரும் ஒரே வகுப்பு. அன்றிலிருந்து இன்று இரண்டு மணி நேரம் முன்பு வரை ஒன்றாகவே இருந்தோம். அவன் என் மடியிலேயே இறந்தபோதும் அவன் இறந்ததை மனம் நம்ப மறுக்கிறது.

ஒரே வகுப்பில் ஒன்றாக தூங்கியது, அரியர்ஸ் வைத்து க்ளியர் செய்தது, ஒன்றாக சென்ற திரையரங்குகள், வேலை தேடிய காலங்களில் கையில் பணமில்லாமல் ஒரே டீயையும சிகரெட்டையும் துண்டு பீடியையும் ஆளுக்குப் பாதியாகப் பகிர்ந்தது என ஒவ்வொன்றாக நினைவுக்கு வருகின்றன.

படிப்பு முடிந்து ஆறு மாதங்கள் இருவரும் வேலை தேடி அலைந்தோம். எனக்கு தி.நகரில் ஒரு கடையில் இரண்டாயிரம் ரூபாய்க்கு வேலை கிடைத்தது. அவன் தொடர்ந்து வேலை தேடிக்கொண்டிருந்தான். அப்போது தான் அவனுக்கு சாந்தி பழக்கமானாள். அவள் எங்கள் மேன்ஷன் அருகில் இருந்த கூல்டிரிங்க்ஸ் கடையில் வேலை செய்து வந்தாள். இதைப் பற்றி என்னிடம் சரவணன் சொல்லும்போதே வேலைக்குச் சென்று சிறிது சம்பாதித்த பின் தான் திருமணம் என்பதில் உறுதியாக இருந்தான். சாந்தியின் வீட்டிலும் இப்போதைக்கு அவளுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என்றும் பிரச்சினை எதுவும் வராது என்றும் நம்பிக்கையுடன் கூறினான்.

நான் வேலைக்கு சேர்ந்த இரண்டாவது மாதத்தில் அவனுக்கும் வேலை கிடைத்தது. நுங்கம்பாக்கத்தில் ஒரு ஆடிட்டருக்கு உதவியாளனாக சேர்ந்தான். என்னை விட ஆயிரம் ரூபாய் அதிகம் சம்பளம் வாங்குவதாகப் பெருமையாக சொல்லி குவாட்டர் வாங்கித்தந்தது இன்னும் நினைவிருக்கிறது.

சரவணனுக்கு நான் தான் ரிஜிஸ்டர் ஆபிஸில் திருமணம் செய்து வைத்தேன். இருவரின் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு. இருவரின் வீட்டிலும் உடன்பிறந்தவர்கள் யாருமில்லையென்றாலும் பெற்றோர்கள் எதிர்த்தனர். இருவர் வீட்டிலும் நானே சென்று நேரில் பேசினேன். அவனுடைய தந்தை என்னை அடிக்க கை ஓங்கியபோது குறுக்கே தடுத்து அவரிடம் சண்டை போட்டுவிட்டு வெளியே வந்தவன் அதற்குப் பிறகு வீட்டிற்கு செல்லவில்லை. பல்லாவரத்தில் ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்கள். சாந்தி வீட்டருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்தாள்.

கடந்த ஆறு மாதங்களாக நாங்கள் இருவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளாக வேலை செய்துவந்தோம். சென்னையை சுற்றியிருக்கும் ஊர்களுக்கு சென்று விற்கத் தயாராக இருக்கும் நிலங்களைப் பார்த்து நிலத்தின் உரிமையாளர்களிடம் விலை பேசுவோம். பிறகு இங்கு நிலம் வாங்குவதற்காக எங்களை அனுகுபவர்களுக்கு முடித்துக் கொடுப்போம். வரும் கமிஷனில் ஆளுக்குப் பாதியாக பகிர்ந்துகொள்வோம்.

இன்றும் கேளம்பாக்கம் அருகில் ஒரு நிலத்தை பார்க்கச் சென்றிருந்தோம். அங்கிருந்து திரும்ப மாலை ஆறு ஆகிவிட்டது. அங்கிருந்து தாம்பரம் செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறினோம். காலியாக இருந்த பேருந்தில் இரண்டு பேர் சீட்டில் அமர்ந்தோம். அடுத்த நாள் செங்கல்பட்டு செல்வதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே பேருந்து குலுங்கியது. எதிரில் வந்துகொண்டிருந்த லாரியிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்த இரும்பு கம்பி பேருந்தின் ஒரு பக்கத்தை கிழித்தவாறே வந்துகொண்டிருந்தது. விபத்தின் அதிர்வில் நான் முன்னிருக்கையில் இடித்துக்கொண்டேன். நிமிர்ந்து பார்க்கையில் பேருந்திலிருந்து பிய்ந்திருந்த தகடு ஜன்னலிருக்கையில் அமர்ந்திருந்த சரவணனின் இடுப்பைக் கிழித்திருந்தது. முன்னிருக்கையில் அமர்ந்திருந்த இருவரும் இறந்திருந்தனர். பேருந்து எங்கும் மரண ஓலம். என் நெற்றியிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

இதற்குள் விபத்தில் அடிபடாமல் தப்பித்த மற்ற பயணிகளும் மக்களும் அடிபட்டவர்களை தூக்கி கீழே இறக்கினர். நான் சரவணனை அவன் இருக்கையில் இருந்து தூக்கினேன். இன்னொருவர் அவன் காலைப் பிடிக்க அவனை பேருந்திலிருந்து கீழே இறக்கினோம். அங்கிருந்த பலர் செல்போன்களில் ஆம்புலன்ஸுக்கும் அவசர போலீசுக்கும் தகவல் சொல்லிக் கொண்டிருந்தனர்.

பின்னால் வந்த இன்னொரு அரசு பேருந்திலிருந்து பயணிகள் அனைவரையும் இறக்கிவிடப்பட்டு எங்களை ஏற்றினார்கள். சரவணனை மடியில் கிடத்தியபடி ஒரு இருக்கையில் அமர்ந்தேன். சரவணனின் சட்டை முழுக்க இரத்தம் ஊறி சிவப்பாகிவிட்டிருந்தது. என் சட்டையைக் கழற்றி இடுப்பில் வெட்டிப் பட்டிருந்த காயத்தை அழுத்திப் பிடித்தேன். பேருந்து தாம்பரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு விரட்டினார்கள். என் காலடியில் அடிபட்ட ஒருவர் துடித்துக் கொண்டிருந்தார்.

பேண்ட் பாக்கெட்டில் கர்ச்சீப் எடுக்கும்போதுதான் சரவணனின் வலதுகை உடைந்து சதை பிய்ந்திருப்பதைக் கவனித்தேன். அவன் கையைத் தூக்கி மேலே வைக்கும்போது வலியில் துடிதுடித்தான். பேருந்து வண்டலூரை நெருங்கியது. மயக்கத்திலிருந்த சரவணன் வலியில் முனகிகொண்டிருந்தான். அருகிலிருந்தவர் அவனிடம் சத்தமாக பேசிக்கொண்டிருக்கும்படியும் மயங்கிவிடாமல் பார்த்துக்கொள்ளும்படியும் சொல்லிக்கொண்டிருந்தார். அவனிடம் "சரவணா ஒன்னும் ஆகாதுடா. தைரியமா இரு. இன்னும் அஞ்சே நிமிஷம்டா. பொருத்துக்கோ" என்று மீண்டும் மீண்டும் சொல்லியபடியே வந்தேன்.

"மச்சான் ரொம்ப வலிக்குதுடா! செத்துடுவேன் போலிருக்குடா" என்று வலியில் அவன் முனகியது என் உயிரை உலுக்கியது. "ஒன்னும் ஆவாதுடா, தைரியமா இரு" என்று உதட்டளவில் சொன்னேனே தவிர மரண பயம் நெஞ்சைக் கவ்வியது.

பேருந்து நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இரண்டு மூன்று பேர் பேருந்திலிருந்து இறங்கி முன்னால் உள்ள வண்டிகளை நகர்த்த சொல்லி வழி ஏற்படுத்திக்கொண்டிருந்தனர்.

வண்டி மீண்டும் வேகமெடுக்கையில் சரவணன் துடிக்க ஆரம்பித்தான். உடல் குலுங்க ஆரம்பித்தது. அவன் கைகாலகளை அழுத்திப் பிடித்தும் நடுக்கம் குறையவில்லை. பத்து நொடிகள் துடித்து சட்டென அடங்கிப் போனான். என் நண்பன் என் மடியிலேயே உயிரை விட்டான்.

அவன் இறந்த அதிர்ச்சியில் அழுகையும் வரவில்லை. நாவும் கண்களும் வறண்டுபோயிருந்தன. மருத்துவமனையில் அவனை பிணவறைக்கு கொண்டுசென்றனர். ஒரு இயந்திரத்தைப் போல் படிவங்களை நிரப்பிக் கொடுத்துவிட்டு அங்கேயே அரை மணி நேரம் அமர்ந்திருந்தேன். சாந்திக்கு போன் செய்யவும் தோன்றவில்லை. சாந்திக்கு போன் செய்வதைக் காட்டிலும் நேரில் சொல்வதுதான் சரி என அவன் வீட்டுக்குக் கிளம்பினேன். போகும் வழியெங்கும் சரவணனின் நினைவுகளே அலைகழித்துக்கொண்டிருக்கிறது.

நேராக சாந்தி வேலை செய்யும் பள்ளிக்குச் சென்றால் அவள் வீட்டிற்கு கிளம்பிவிட்டதாக சொன்னார்கள். என்ன ஆகியதோ என்ற பயத்துடன் வேகமாக வீடு நோக்கி நடந்தேன். சாந்தி "வாங்கண்ணா. அவர் வேற சைட் ஏதாவது பார்க்க போயிருக்காரா?" என்றபடி கதவைத் திறந்தாள். பின் அவளாகவே "மயக்கமா இருந்துச்சுன்னு டாக்டர்ட்ட போய் காட்டினேண்ணா. இரண்டு மாசமாம். நீங்க மாமா ஆகப் போறீங்க" என்றாள். நான் உடைந்து அழத்தொடங்கினேன்.



நேஷனல் ஜியோகப்பி சேனல்

தமிழ் சேனல்ல எதிலயுமே நல்ல நிகழ்ச்சி போட மாட்டறாங்க. புதுசா வர்ற படமெல்லாமும் மொக்கையாவே இருக்கு. இதுக்கெல்லாம் ஒரே வழி இனி NGC,அனிமல் ப்ளானெட் டிஸ்கவரி சேனல் எல்லாம் பார்த்து அறிவை வளர்த்துக்கறதுதான்னு முடிவெடுத்தேங்க. இதை என் நண்பன்கிட்ட சொன்னா "தமிழ்படங்கள்ல ஹீரோயின் இருக்க ரூமுக்குள்ள நுழையுமே கரப்பான்பூச்சி...அதுக்கு எத்தனை காலு அதை முதல்ல சொல்லு பார்க்கலாம்"ன்னு கலாய்க்கிறான். படத்துல கரப்பான்பூச்சியை நாம பார்த்தா தானே?

என்னடா இது நமக்கு வந்த சோதனைன்னு மனசுல நினைச்சுட்டே அனிமல் ப்ளானெட் வச்சா அஞ்சு நிமிஷத்துக்கு மேல பார்க்க முடியல. தூக்கம் கண்ணைக் கட்ட ஆரம்பிச்சுடுது. அந்த நேரத்துல புதுமுக நடிகை பூர்ணிகா அவங்க வீட்டு நாய்க்குட்டி பத்தி எஸ்.எஸ். ம்யூசிக்ல பேசிட்டிருந்தாங்க. இதுலயும் விலங்குபத்தி தானே சொல்றாங்கன்னு அவங்களைப் பார்த்து கொளுகையை மறந்துட்டேன்.

சாதாரணமாவே பாம்பு பல்லியெல்லாம் பார்த்தா பயத்துல பசியெடுக்க ஆரம்பிச்சிடும். இதுல காட்டுவிலங்குகளைப் பத்தி எப்படி கத்துக்கறதுன்னு ஒரே குழப்பமாயிடுச்சு. இங்கிலீஷ் சேனல் பார்த்தாதான் ஒன்னும் புரியலயே தமிழ்படமா பார்த்து கத்துக்கலாம்னு டி.ஆர் படம், இராம.நாராயணன் படம் சிடியெல்லாம் வாங்க கடைக்கு போனா கடைக்காரன் ஏதோ விநோத ஜந்துவை பார்க்கற மாதிரி பார்க்கறான்.

படம் பார்த்து கத்துக்க முடியாதுன்னு தெரிஞ்சதும் மகேந்திரனின் வனவாசம் படிச்சோ இயற்கைநேசியின் பதிவுகளை படிச்சோ அறிவை வளர்த்துக்கலாம் முடிவெடுத்தேங்க. ஆனா அவங்க பதிவை பாதி படிச்சுட்டிருக்கும்போதே ஒரு கும்மி பதிவோ மொக்கை பதிவோ வந்து அந்த ஜோதியில ஐக்கியமாயிடறேன் :))

ஓணான் ஒன்னுக்கிருக்கறதை படம் பிடிக்கறது, மைனாவை சைட் அடிக்கறது, சும்மா இருந்த நாய்கிட்ட கையைக் கொடுத்து கடிவாங்கிட்டு அதே நாயை போட்டோ புடிக்கறதுன்னு நம்ம தல ஒலகமகா ஒளி ஓவியரா இருக்காரு. அவர் வழியில 'தலயின் வாரிசு' இராயலும் "ஆகீத்தா ஐவத்து ஆகலைனா கும்மாங்குத்து"ன்னு படம் புடிச்சு வச்சிருக்காரு. நாமளும் அதே வழியை ஃபாலோ பண்ணவேண்டியதுதான்ன்னு முடிவெடுத்து எடுத்த வீடியோ தான் கீழே இருக்கறது. பார்த்து துப்பிட்டு போங்க மக்களே.



யப்பா...ஒரு முப்பது செகண்ட் படம் காட்டறதுக்கு எவ்வளவு மொக்கை போட வேண்டியிருக்கு!!!

படம் எடுத்து பார்த்ததும்தான் எனக்கு இதிலயும் நிறைய சந்தேகம் வந்துச்சு. இதுல மொத்தம் எத்தனை எறும்புகள் இருக்கு? ஒவ்வொரு முறையும் எறும்புகள் ஒரே ஒரு மண் துகளைத்தான் எடுத்துட்டு வருமா அதுக்கு மேலயும் எடுத்துட்டு வருமா? ஒரு பக்கம் மட்டும் தூர் வாறின மண்ணைப் போடாம காலியா இருக்கே..அதான் வெளியே வர்ற வழியா?

இப்படி மனசுக்குள்ள ஆயிரம் கேள்விகள். எல்லா கேள்விகளுக்கும் 'தல'யை அடமானம் வைத்தாவது பதில் கண்டுபிடிச்சு நானும் ஒரு நாள் விலங்குகளுக்காக ஒரு தனி சேனல் ஆரம்பிக்கனும் என்பதுதான் இப்போதைய லட்சியம்.