?! - திண்ணை, குசேலன் & இன்ன பிற

நேற்றிரவு கனவில் குசேலன் Free View ஷோ. தலைவர்,நயன்தாரா, பி.வாசு,வடிவேலு நடித்துக்கொண்டிருந்த ஒரு காட்சி. காட்சியோ வசனங்களோ நினைவில் இல்லை. அந்த காட்சியில் பசுபதி இல்லை. பசுபதி எங்கே என்ற எண்ணம் தோன்றியதும் தூக்கம் கலைந்து எழுந்துவிட்டேன்.

குசேலன் பாட்டு கேட்டாச்சா? ஜீ.வி. பிரகாஷிடம் எதிர்பார்த்ததை விடவே பாடல்கள் நன்றாக இருக்கின்றன. சில பாடல்கள் ஏற்கனவே கேட்டதுபோல் இருந்தாலும் எல்லா பாடல்களுமே எனக்குப் பிடித்திருக்கின்றன. 4/5.

பாடல்கள் ராகா-வில் இங்க இருக்கு

***

ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும்போதும் எங்கப்பா திண்ணைல உட்கார்ந்துகிட்டு தாத்தா பாட்டியோட சண்டை போடாம வந்தது கிடையாது.'என்னை மறந்துட்டல்ல'ன்னு கையைப் புடிச்சபடி தாத்தா கேட்டது, எங்க வீட்டு திண்ணைல நாப்பது வருஷமா இருந்த போஸ்ட் ஆபிஸு, அதுல கொஞ்சம் கையாடல் பண்ண சித்தப்பு, கடைசி அஞ்சு வருஷம் திண்ணைலயே கழிச்ச கொள்ளுப் பாட்டி, திண்ணைல தூங்கும்போது என் கால் மேல ஏறிப்போன கட்டுவிரியன், கடிச்ச தேளு, ஊருல அரசமரத்துல இறங்கி வீட்டுக்கு போறதுக்குள்ள ஊர்ல இருக்க எல்லாரையும் அவங்கவங்க வீட்டு திண்ணைலயே பார்த்து விசாரிச்சுடறது..இன்னும் எத்தனையோ..அதையெல்லாம் ஒவ்வொன்னா எப்பவாவது விரிவாக எழுதனும்...

இப்ப ஒரு மொக்கை..

அதாகப்பட்டது கதையின் ஆரம்பத்திலே கதையின் நாயகனுக்கு(வேற யாரு நான் தான்) வயது ஒன்றரை. அப்ப திண்ணைல வச்சு நான் செய்த பிசினஸ் டீல் பற்றி பின்னாளில் எனக்கு சொல்லப்பட்ட வெர்ஷன் இது. ஏதோ ஒரு கல்யாணத்துக்கு போயிருக்காங்க. குழந்தை அழுததால(அட இதுவும் நான் தான்) அம்மாவோட ஒரு செயினை மாட்டி விட்டிருக்காங்க. கல்யாணம் முடிஞ்சு வந்ததும் எங்கப்பாரு அவர் நண்பரோட எங்க தெருக்கோடியில இருந்த ஓட்டலுக்கு காபி குடிக்க கிளம்பினாராம். நான் அழுதுட்டே அவர் பின்னாடி வந்ததால திண்ணைல உக்கார விட்டுட்டு எங்கம்மாவுக்கு குரல் விட்டுட்டு போயிட்டாராம். எங்கம்மா திண்ணைய விட்டு எங்கே போகப்போறான்னு விட்டுட்டாங்களாம்.

அப்ப 'சொப்பு அண்ணா' கேரக்டர் எண்ட்ரி. அவரு என்கிட்ட நாற்காலி கால் தேயாம இருக்க போடற ப்ளாஸ்டிக் குப்பியைக் கொடுத்துட்டு செயினைக் கேட்டிருக்கார். அப்ப எங்க வீட்டுல ஒரு இரும்பு நாற்காலி இருந்தது. அதுல குப்பி இருந்ததா இல்லையா எனத் தெரியாது. இருந்தாலும் வீட்டுக்குத் தேவைப்படற பொருளா இருக்கேன்னு நானும் செயினைக் கிழட்டிக் கொடுத்துட்டு பண்டமாற்று முறையில் குப்பியை வாங்கிட்டேன். அவரும் கிளம்பி போயிட்டார்.

நான் உள்ள போய் எங்கம்மாகிட்ட "சொப்பு அண்ணா கொடுத்தாரு"ன்னு சொல்லி அந்த குப்பியைக் கொடுத்திருக்கேன். அவங்க கழுத்துல இருந்த செயினைத் தேட "அதான் இது"ன்னு கையில இருந்த குப்பியைக் கொடுத்து ஒரு பக்கா பிசினஸ் டீல் முடிச்ச சந்தோஷத்தோட இருந்திருக்கேன். என்ன செய்ய அப்ப இருந்து இப்ப வரைக்கும் வெளுத்ததெல்லாம் பாலு பொங்கறதெல்லாம் பீருன்னே வளர்ந்திருக்கேன்.


***

திண்ணை அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் தீண்டாமைச் சின்னமாகவும் இருப்பதாக உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? எங்க ஊர் பக்கம் இன்னும் அப்படித்தான் இருக்கு!!

***

ஆயில்யன் அண்ணாச்சி சிலப்பல வாரங்களுக்கு முன்ன ஜிலேபி பதிவு போட சொன்னாரு. ஆனா எழுத முடியலை. என்னால ஜிலேபி கொடுக்க முடியலைனாலும் என்னால முடிஞ்சது



***

த*****ம் படம் பற்றி எழுத மாட்டேன்னு அசின், மல்லிகா ஷெராவத் மேல சத்தியம் பண்ணிட்டேன். இப்ப வரைக்கும் சத்தியத்தைக் காப்பாத்திட்டிருக்கேன்.

***

இந்த பாட்டு பாருங்க. 'மலையாளி' என்ற இசைக்குழு. தமிழ் பாட்டு மாதிரியே இருக்கு. செம கலக்கல்.



***


இந்த மாத ?! தத்துவம்

"We don’t see things as they are, we see them as we are"



சிறுவர்களின் உலகம் - 4 (Bridge To Terabithia)

இப்படியொரு அழகான திரைப்படம் பார்த்து நீண்ட நாட்களானது. படம் முடிந்ததும் மனம் நிறைந்த மகிழ்ச்சி. எளிமையான கதை. பதின்ம வயது சிறுவன் ஜெஸ். அவன் வகுப்பில் புதிதாக சேரும் சிறுமி லெஸ்லி. அவர்களுக்கிடையேயான நட்பு. இருவரும் இணைந்து உருவாக்கும் கற்பனை உலகம். இதற்கு மேல் இப்படத்தின் கதையைச் சொல்லிவிட விருப்பமில்லை. அட்டகாசமான நடிப்பு. கலக்கலான கிராபிக்ஸ். இனிமையான பின்னணி இசை, பாடல்கள். சில காட்சிகள் கண் கலங்க வைக்கும். பல காட்சிகள் புன்னகைக்க வைக்கும். படத்தில் சொல்வது போல் உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு இத்திரைப்படத்தைப் பாருங்கள். ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும்.


கீழே அப்படத்தில் வரும் ஒரு பாடல் - Keep Your Mind Wide Open
பாடியவர் இத்திரைப்படத்தில் லெஸ்லியாக நடித்த அன்னா சோஃபியா ராப் (Anna Sophia Robb)




'?!' & நன்றி

விஜய் தொலைக்காட்சியின் சென்ற வார 'நீயா? நானா?' நிகழ்ச்சியில் "பெற்றோர்கள் பிள்ளைகளிடம் வைக்கும் பாசத்தில் பாரபட்சம் இருக்கின்றதா" என்ற சுவாரசியமான தலைப்பில் இடையில் விவாதம் நடந்தது. இரண்டோ அதற்கு மேலோ குழந்தைகள் இருந்தால் அவர்களிடையே பாரபட்சம் காட்டப்படுவது பெரும்பாலான குடும்பங்களில் நடப்பது. பதினைந்து வயது சிறுவனில் இருந்து ஐம்பத்தைந்து வயதானவர் வரை தங்கள் உணர்வுப்பூர்வமாக தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். எதிர்தரப்பில் பெற்றோர்கள் இந்த விஷயத்தில் தங்கள் குறைகளை ஒத்துக்கொள்ளாமல் 'பிள்ளையின் எதிர்காலத்திற்கு, பொருளாதார நிலை, பிள்ளையின் ஆசை, எங்களின் கனவு' என்று விதண்டாவாதம் செய்துகொண்டிருந்தார்கள். பல இனிமையான அனுபவப் பகிர்வுகளுடனும், வாதங்களுடனும் இருதரப்பும் தங்கள் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்த கோபிநாத் எப்போதும் போல நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்.

'ஜெயா டிவி' காமெடி டைம்-இல் கடித்துக்கொண்டிருந்த நடிகர் 'லொள்ளு சபா'வுக்கு வந்ததிலிருந்து இதையும் பார்ப்பதில்லை. சந்தானத்தைத் தொடர்ந்து ஜீவாவும் கிளம்பிவிட்டார் போல. நிகழ்ச்சி மரண மொக்கையாகிவிட்டது. சிரிப்பே வரல.


*****

இரண்டு வாரங்களாக தூங்குவதற்கு முன்னும் தூங்கி எழுந்த பின்னும் ஏ.ஆர்.ரகுமானின் 'Ada' மற்றும் 'Jaane Tu Ya Jaane Na' படங்களின் பாடல்களைத் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். பாடல்கள் அட்டகாசம்.

*****

நட்சத்திர வாரத்தில் தலைவரைப் பற்றி ஒரு பதிவு எழுத நினைத்திருந்தேன். சிலப்பல காரணங்களால் இயலவில்லை. இது எனக்கு மிகவும் பிடித்த ஸ்டில்.



All About Superstar என்ற பதிவில் சுந்தர் என்பவர் தினம்தினம் சுவையான பல தகவல்களையும், சுடச்சுட செய்திகளையும் தலைவரின் பழைய பத்திரிகைப் பேட்டிகளையும் தருகிறார்.


*****

ஒரு வழியாக இங்கு வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் பொது நூலகத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். புத்தகம் வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்த ஏழு மாதங்களில் இரண்டே நாவல்களை முழுதாக வாசித்திருக்கிறேன். ஓர்ஹன் பாமுக்-கின் 'My Name is Red' புத்தகத்தை இரண்டு மாதங்களாக இருநூறு பக்கங்கள் மட்டுமே வாசித்திருக்கிறேன். இந்த வேகத்தில் படித்தால் அதை முடிப்பதற்குள் 2009 வந்துவிடும் என்ற அச்சத்தால் அதை ஓரம்கட்டிவிட்டு நூலகத்தில் இருந்து கொண்டுவந்த தஸ்தாவஸ்கியின் 'The Brothers Karamazov' ஆரம்பித்திருக்கிறேன். அதை சீக்கிரம் வாசித்துமுடிக்க தஸ்தாவஸ்கி அருள்புரிவாராக

*****

இந்த பாட்டு செமையா இருக்கு.





*****

இரண்டு மாதங்களாக ?! பதிவுகளை எழுதவில்லை என்று கவலையில் இருந்தேன்.

*****

இந்த மாத ?! தத்துவம்

""No man, for any considerable period, can wear one face to himself, and another to the multitude, without finally getting bewildered as to which may be true."

- எங்கோ படித்தது.

*****

இந்த வார நட்சத்திரமாக என்னைத் தேர்வு செய்த தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும் அடாத மொக்கையிலும் விடாது பதிவுகளைப் படித்து ஆதரவு தந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! :)