ஹாலிவுட் தலைவிகள்

Women In Film



Women In Film By Philip


80 years of female portraits in cinema - Mary Pickford, Lillian Gish, Gloria Swanson, Marlene Dietrich, Norma Shearer, Ruth Chatterton, Jean Harlow, Katharine Hepburn, Carole Lombard, Bette Davis, Greta Garbo, Barbara Stanwyck, Vivien Leigh, Greer Garson, Hedy Lamarr, Rita Hayworth, Gene Tierney, Olivia de Havilland, Ingrid Bergman, Joan Crawford, Ginger Rogers, Loretta Young, Deborah Kerr, Judy Garland, Anne Baxter, Lauren Bacall, Susan Hayward, Ava Gardner, Marilyn Monroe, Grace Kelly, Lana Turner, Elizabeth Taylor, Kim Novak, Audrey Hepburn, Dorothy Dandridge, Shirley MacLaine, Natalie Wood, Rita Moreno, Janet Leigh, Brigitte Bardot, Sophia Loren, Ann Margret, Julie Andrews, Raquel Welch, Tuesday Weld, Jane Fonda, Julie Christie, Faye Dunaway, Catherine Deneuve, Jacqueline Bisset, Candice Bergen, Isabella Rossellini, Diane Keaton, Goldie Hawn, Meryl Streep, Susan Sarandon, Jessica Lange, Michelle Pfeiffer, Sigourney Weaver, Kathleen Turner, Holly Hunter, Jodie Foster, Angela Bassett, Demi Moore, Sharon Stone, Meg Ryan, Julia Roberts, Salma Hayek, Sandra Bullock, Julianne Moore, Diane Lane, Nicole Kidman, Catherine Zeta-Jones, Angelina Jolie, Charlize Theron, Reese Witherspoon, Halle Berry



நிரடும் நிரலிகள்

"ஹாய் ஐயாம் ஷெரில்"

"ஹாய் ஜெயக்குமார் கந்தசாமி. ஜெய்"

"நைஸ் டு மீட் யூ ஜெய்"

இங்கு வேலைக்கு சேர்ந்த முதல் நாள் தானாக வந்து அறிமுகப்படுத்திக் கொண்டாள் ஷெரில். எல்லா அமெரிக்க பெண்களைப் போன்றே சராசரிக்கு சற்றே அதிகமான உயரம். ஒல்லியான தேகம். கரிய தலைமுடி. புன்னகை தவழும் உதடுகள். துள்ளலான கண்கள். மொத்தத்தில் அழகி. என்னுடைய பிராஜெக்ட்டில் இருப்பாளோ என்ற ஆர்வத்தில் கேட்டதில் காண்டிராக்டராக ஏதோ ஒரு ஆதிகால அப்பிளிகேஷனைக் கட்டிமேய்த்துக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். "இத்தனை வருஷமா இதானே நடக்குது நம்ம பிராஜெக்ட்ல என்னைக்கு நல்ல ஃபிகர் இருந்திருக்கு" என்ற ஆதங்கத்துடன் வேலையைத் தொடங்கினேன்.


கிளையண்ட் அலுவலகத்தில் நிறைய இந்தியர்களே வேலைப் பார்த்தாலும் யாரும் அவ்வளவு நட்புடன் பழகவில்லை. எங்கள் கம்பெனி உள்ளே புகுந்ததில் காண்டிராக்டர்களாக வேலை செய்யும் பலருக்கு வேலை பறிக்கப்படும் அபாயம். முகம் கொடுத்தும் பேசாத நிலை. இந்த அழகில் நான் இவர்களிடம் கற்றுக்கொண்டு இந்தியாவில் இருக்கும் டீமிற்கும் சொல்லிக் கொடுத்து, அதன்பின் கொடுத்த காசுக்கு மேல் வேலை செய்ய வேண்டும்.

முதல்நாள் எது எங்கிருக்கிறது என்று தெரியாமல் அலைந்து கொண்டிருந்த எனக்கு ஷெரில் தானே முன்வந்து அலுவலகத்தைச் சுற்றிக் காட்டினாள். அன்று மதியம் கேண்டினில் இருவரும் உணவு உண்டபோது எங்கள் கம்பெனி பற்றியும் என் பிராஜெக்டைப் பற்றியும் வேலையைப் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டாள். கிளையண்டிடம் இருந்த அத்தனை அப்ளிகேஷன்களுக்கும் அறிமுகம் கொடுத்தாள். அவளுடைய அப்ளிகேஷன் பற்றியும் விவரித்தாள்.

ஆரம்ப நாட்களில் அமெரிக்காவில் எல்லா ஊரிலும் எல்லாம் எளிதாக கிடைக்கும், எல்லா வசதிகளும் கிடைக்கும் என்று சொன்னவனைத் தேடிக் கொண்டிருந்தேன்.இந்த சிறிய நகரில் எங்கள் கிளையண்ட் அலுவலகம் ஒன்றுதான் பெரியது. மற்றபடி பெரிய அலுவலகங்களோ வணிக நிறுவனங்களோ கிடையாது. நான் ஆன்லைனில் பதிவு செய்திருந்த அபார்ட்மெண்ட் அலுவலகத்திற்கு அருகிலேயே இருந்தாலும் கடைகளுக்குச் செல்ல வேண்டுமென்றால் அரை மணி நேரப் பயணம். ஓரிரு முறை டாக்ஸியில் சென்றுவந்ததைத் தெரிந்துகொண்ட ஷெரில் அவளே கடைகளுக்குக் கூட்டிச் செல்ல முன்வந்தாள். நான் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் அவளே உதவிகள் செய்தாள். ஷெரில் வேலையிலும் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தாள். இந்த ஊரில் இப்படி ஒரு நல்லவளா என்ற ஆச்சரியம் உண்டானது.


"ஜெய், உங்க ஊரைப் பத்தி சொல்லேன்"

"சொர்க்கம்"

"உங்க ஊர்க்காரங்க எல்லாரும் கிட்டத்தட்ட இப்படித்தான் சொல்றீங்க"

"அதான் உண்மை..அதனால தான்"

"இண்டியா பத்தி நான் கொஞ்சம் படிச்சிருக்கேன். நிறைய வீடியோஸ் பார்த்திருக்கேன். நல்ல அழகான பெண்கள். ஒரு முறை உங்க ஊருக்கு கூட்டிட்டு போவியா?"

"கண்டிப்பா. ஒரு முறையாவது நீ நேரில் பார்க்கனும். உனக்கு ரொம்ப பிடிச்சுப் போகும்"

"நீ பேசற மொழி பேர் என்ன சொன்ன?"

"தமிழ்"

"டாமிள்.யெஸ்.அதுவும் கத்துக்கொடு" என்று சிரித்தாள்.

வேலையினிடையிலும் அரட்டை நேரங்களிலும் இந்தியா பற்றி, மொழிகள் பற்றி கேட்டுத் தெரிந்துகொள்வாள். அமெரிக்க அரசியல், விளையாட்டு என அரட்டை தொடரும். எங்கள் நட்பும் வளர்ந்தது.

"ஷெரில், எனக்கு கார் ஒன்னு வாங்கனும். ஆன்லைன்ல பார்த்துட்டிருக்கேன். இந்த ஊரில நல்ல டீலர் சொல்லேன்"

"என் பாய் பிரெண்ட் டாம் ஒரு கார் விக்கப் போறான். நிஸ்ஸான் அல்டிமா. நீ என்ன கார் பார்க்கற? ஸ்போர்ட்ஸ் கார் வாங்கப் போறயா?"

"அதெல்லாம் வேண்டாம். செடான் தான் பார்க்கறேன். உன் பாய் பிரண்ட் காரே வாங்கிடலாம்"

அதிக அலைச்சலில்லாமல் குறைந்த விலையிலேயே கார் அமைந்தது. அதற்கு டிரீட் கொடுக்க அவளையும் அவள் பாய் ஃபிரெண்டையும் டின்னருக்கு இந்திய உணவகத்துக்கு அழைத்துச் சென்றேன். காரத்தில் கண்கள் கலங்கினாலும் ரசித்துச் சாப்பிட்டார்கள்.

"ஜெய் உன்கிட்ட சொல்லியிருக்கேன்ல நானும் டாமும் பைக்கிங் போவோம்ன்னு.வார இறுதியில் பக்கத்துல இருக்க மலைல சைக்கிள் ஓட்டுவோம். நீயும் வருவியா?"

"கண்டிப்பா ஷெரில். அடுத்த வாரமே சைக்கிள் வாங்கிடறேன். மலைல ஓட்ட நீங்க தான் கத்துத் தரணும்"

"ஷ்யூர். உனக்கும் ரொம்ப பிடிச்சுப் போகும் பாரு. அடுத்த வாரமே ஆரம்பிப்போம். இங்க இருக்க டிராக் எனக்கு ரொம்ப பிடிச்சது. சமயத்துல டாம் வரலைனாலும் தனியா நானே கிளம்பிடுவேன். நீயும் வந்தா எனக்கு கம்பெனி கிடைக்கும்" என்று சிரித்தாள்.


ப்ராஜெக்ட் வேலையும் நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்தது. எங்கள் கடின உழைப்புக்குப் பலனாக புதிதாக ப்ராஜெக்ட்களும் கிடைத்தன. கிளையண்டிடம் இருந்த அத்தனை அப்ளிகேஷன்களையும் ஆராய்ந்து அதில் புதிதாக ஏதாவது செய்ய முடியுமா என்ற ஆராய்ச்சியில் இறங்கி கிளையண்டுக்கு சில ஆலோசனைகள் கொடுத்தோம். அதிலும் சில ஆலோசனைகள் ஏற்கப்பட்டன. எங்களுடைய அணி வளர ஆரம்பித்தது. கிளையண்டிடம் இருந்து சிறிது சிறிதாக வேலைகள் வாங்கி ஆஃப்ஷோரை வளர்த்தோம்.


"ஹேய் ஷெரில். உன்னோட பவர்பில்டர் அப்ளிகேஷனை ஜாவா-வுக்கு மாத்த நான் கொடுத்த ப்ரோபசலை ஜோ அப்ரூவ் பண்ணிட்டார். ஆஃப்ஷோர் டீம்ல புதுசா 4 பேர் சேர்த்து இந்த வீக்கே மைக்ரேஷன் வேலை ஆரம்பிக்கறோம்"

"தெரியும் ஜெய். ஜோ கூட இப்ப தான் பேசிட்டு வரேன்"

"எனக்கு இது பெரிய அச்சீவ்மெண்ட். என் ஹெட் இப்பத்தான் போன்ல பாராட்டினார். சந்தோஷமா இருக்கேன். நைட் டின்னர் என் டிரீட். நீ ஃப்ரீ தானே?"

"இல்ல ஜெய். நீ என்னோட அப்ளிகேஷனை ஜாவா-வுக்கு மாத்த ஆரம்பிச்ச பிறகு எனக்கு என்ன வேலை. எனக்கு தெரிஞ்சது பவர்பில்டர் தானே. இன்னைக்கு எனக்கு இங்க கடைசி நாள். அதுக்குத்தான் ஜோ கூப்பிட்டு பேசினார். இன்னைக்கு நைட்டே ஊருக்கு கிளம்பறேன். இந்த ஊர்ல என் ப்ரொபைலுக்கு வேலை கிடைக்காது. அதனால ஊருக்கு போய் அப்பா அம்மாவோட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு நியூ ஜெர்சில ஏதாவது வேலை பிடிக்கனும். இடையில் நானும் ஒரு புது டெக்னாலஜி ஏதாவது கத்துக்கனும். ஈவ்னிங் டாம் என்னை பிக்கப் பண்ண வருவான். என்ன நாம ப்ளான் பண்ண சைக்கிள் ட்ரிப் தான் போக முடியாது. அடுத்த முறை மீட் பண்ணும்போது கண்டிப்பா போவோம். கீப் இன் டச் ஜெய். வில் மிஸ் திஸ் நைஸ் லிட்டில் டவுன் அண்ட் வில் மிஸ் யூ." என்று கூறியபடி கைகொடுத்து கிளம்பிச் சென்றாள்.

நான் கணிணித் திரையை வெறித்தபடி அமர்ந்திருந்தேன்.



PIT - ஜூலை-2008 போட்டிக்காக

இது போட்டிக்கு:






இது படம் எடுத்த பொட்டிக்கு:




சும்மா இருந்தவனை தலையில தட்டி படமெடுக்க அனுப்பிய தல-க்கு சமர்ப்பணம்..எல்லா புகழும் கைப்புவுக்கே!! :)



காத்திருந்த காதலி - 10

காத்திருந்த காதலி - 1: வடகரை வேலன்
காத்திருந்த காதலி - 2: பரிசல்காரன்
காத்திருந்த காதலி - 3: வெயிலான்
காத்திருந்த காதலி - 4: கிரி
காத்திருந்த காதலி - 5: ஜெகதீசன்
காத்திருந்த காதலி - 6: டிபிசிடி
காத்திருந்த காதலி - 7: கயல்விழி முத்துலெட்சுமி
காத்திருந்த காதலி - 8: மை ஃபிரண்ட்
காத்திருந்த காதலி - 9: கோபிநாத்

சங்கர் சொன்னதன்படி அவன் அறைக்கு வந்த ராமச்சந்திரன் அங்கு அவர் மகளைப் பார்த்ததில் ஆச்சரியமடைந்தார். நாயைக் கண்டு பயந்து நின்றுகொண்டிருந்த தன் மகளை அரவணைத்தபடி உள்ளே அழைத்துச் சென்றார்.

"கையில என்னம்மா டைரி? யாரோட டைரி?"

"கார்த்திக்கோட டைரிப்பா. உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல. கார்த்திக் என்னை லவ் பண்ணியிருக்கான்பா"

ராமச்சந்திரனின் முகத்தில் கவலை ரேகை படர்ந்தது. அவர் நினைத்தது போலவே அத்தனையும் நடந்திருக்கிறது. மருத்துவமனையிலிருந்து அவர் கிளம்பியதிலிருந்தே சங்கர் ஏன் அப்படி சொல்ல வேண்டும், கார்த்திக் இவ்வாறு செய்ய என்ன காரணம் இருக்க முடியுமென்ற குழப்பத்திலே தான் வந்தார். தொழிலில் இருவருக்கும் பொறாமை வருவதற்கான வாய்ப்பேயில்லை. சில நாட்களாக கார்த்திக் தொழிலில் கவனம் செலுத்துவதில்லை என்று சங்கர் ஓரிரு சமயங்களில் சொல்லியிருந்தாலும் அதற்கான வேறு ஏதோவொரு காரணம் இருக்க வேண்டும் என்றே எண்ணியிருந்தார். ஆனாலும் அந்த காரணம் தெரியாமல் ஷூவுக்குள் சிறிய கல் ஒன்று சிக்கியது போல அவர் மனம் உறுத்திக்கொண்டிருந்தது. இப்போது கார்த்திக் தன்னைக் காதலித்ததாக கெளரி சொன்னதும் அவருக்கு எல்லாம் புரிந்தது.

"தண்ணி கொண்டு வாம்மா. உக்காந்து பேசலாம்" என்றபடி ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தார். கெளரி அந்த டைரியை டேபிளில் வைத்துவிட்டு சமையலறைக்குச் சென்றாள். ராமச்சந்திரன் அந்த டைரியைப் புரட்ட ஆரம்பித்தார்.

***

கார்த்திக் கெளரிக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தான். மூன்று வருடக் காதலை இன்று சொல்லிவிட வேண்டும் என்ற முடிவோடு இருந்தான். சங்கரிடம் கூட கெளரியைப் பற்றிப் பேசியதில்லை. தன் காதலை கெளரியிடம் சொல்லி அவள் சம்மதித்ததும் இருவரும் சேர்ந்து சங்கரிடம் சொல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான். கல்லூரிக்குப் பிறகும் தொடர்ந்த கெளரியுடனான நட்பு காதலாக மாறிய தருணம் எப்போதென்று பழைய நினைவுகளை அசைபோட்டபடி இருந்தான். தன் காதலைச் சொன்னதும் கெளரி என்ன சொல்வாளோ நட்பை முறித்துச் சென்றுவிடுவாளோ என்ற அச்சமும் அவனை அவ்வப்போது கலங்கச் செய்தது. என்ன ஆனாலும் சரியென்று வாழ்த்து அட்டை ஒன்றை வாங்கிக்கொண்டு அவளுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். அவளிடம் தன் காதலைச் சொல்ல தான் எழுதிய கவிதையைச் சொல்லிப்பார்த்துக் கொண்டிருந்தபோது சங்கரும் கெளரியும் கைகோர்த்தபடி வந்துகொண்டிருந்தனர்.

"கார்த்திக், சங்கர் என்கிட்ட என்ன சொன்னான் தெரியுமா?"

"என்ன சொன்னான்?"

"ஐ லவ் யூ சொல்லிட்டான் டா..அதுவும் ஒரு பயம் இல்லாம மட்டு மரியாதையில்லாம" வெட்கப்புன்னகையுடன் சங்கரின் தோளில் சாய்ந்தாள் கெளரி.

"மச்சான் நான் மொதல்ல உன்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன். அப்புறம் இவ ஒத்துக்கிட்டதும் ரெண்டும் பேரும் சேர்ந்து வந்து சொன்னா உனக்கு சர்ப்ரைஸா இருக்கும்னு சொல்லலடா" என்றான் சங்கர்.

இதற்குப் பிறகு அவர்கள் பேசியது எதுவும் கார்த்திக்கின் காதில் விழவில்லை. இதயத்தில் இமயமலையையே ஏற்றிவைத்தது போல் பாரமாக இருந்தது. "இவளிடம் இத்தனை வருடங்களாக இருவரும் ஒரே மாதிரிதானே பழகினோம். சங்கரை விட எனக்கு என்ன குறைச்சல். அவனிடம் எப்படி அவளால் காதலில் விழ முடிந்தது. இத்தனைக்கும் அவனைவிட அவளுக்காக நான் தானே எத்தனையோ செய்திருக்கிறேன். கல்லூரி முடிந்த அன்று ஃபேர்வெல் பார்ட்டியில் கூட 'நீ எப்பவும் எனக்கு ஸ்பெஷல்டா" என்றாளே. பாதகி" என்று மனதுக்குள் குமைந்து கொண்டிருந்தான்.

"என்னடா ஒரு மாதிரி இருக்க? உடம்பு சரியில்லையா" சங்கர் தோளில் தட்டினான்.

"இல்லடா. அதெல்லாம் ஒன்னுமில்ல. கேட்டதும் சந்தோஷத்துல என்ன சொல்றதுன்னே தெரியல. கங்கிராட்ஸ்டா. ஹேய் கெளரி உங்க வீட்டுல சொல்லிட்டீங்களா"

"இன்னும் இல்லடா. இனிதான் அதைப்பத்தியெல்லாம் யோசிக்கனும்"

"எப்ப கல்யாணம் பண்றீங்க? ரெண்டு பேர் வீட்டுலயும் வீட்டுல பேசிப்பார்ப்போம்.ஒத்துக்கலைனா நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" உள்ளுக்குள் இடி விழுந்தாலும் அதை வெளிக்காட்டாமல் சகஜமாய் பேச முயன்றுகொண்டிருந்தான் கார்த்திக்.

"மொதல்ல நம்ம கம்பெனி நல்ல நிலைமைக்கு வரட்டும்டா.அப்புறம் கல்யாணம் பத்தி யோசிக்கலாம்" என்ற சங்கரை இடைமறித்தாள் கெளரி

"கார்த்திக், நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போறே?"

"கல்யாணம் பண்ணிக்க போறது இல்ல"

"ஏன்? காதல் மேலே வெறுப்பா?"

"இல்ல. ஒருத்தருக்கு ஒரு தடவைதான் காதல். நான் ஏற்கனவே காதலிச்சிட்டு இருக்கேன்"

"அட்ரா சக்க.. யாரந்த பொண்ணு?"

"இது ஒரு தலை காதல். நான் அவ கிட்ட சொல்றதுக்கு முன்னவே செத்து போச்சு. யாரென்று கேட்காதே ப்ளீஸ்.."


செத்துப்போன தன் காதலை மீண்டும் உயிர்விப்பது எப்படி என்று அன்றைக்கே திட்டம் தீட்ட ஆரம்பித்தான் கார்த்திக்.

***

கார்த்திக் அப்பாவையும் அம்மாவையும் ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவிட்டு ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தான். சங்கர் மயக்கம் தெளிந்தவுடன் அவனிடம் பேசவேண்டும். இத்தனை நாட்களாக மனதுக்குள் புழுங்கிக்கொண்டிருக்கும் அத்தனையையும் கொட்டிவிடவேண்டும். இத்தனை வருடங்கள் தொடர்ந்த நட்பு உடைந்தாலும் பரவாயில்லை என்று எண்ணியபடி சிகரெட் புகையை ஆழமாக உள்ளே இழுத்தான். அப்போது அவனை உரசியபடி ஒரு பைக் வந்து நின்றது.

***


இக்கதையின் அடுத்த பாகத்தை தொடர 'சிக்மா(Sigma) சித்தர்' கேஆரெஸ் அண்ணாச்சி அழைக்கிறேன்.