அருவிஸ் ஆஃப் நெல்லை

"காதல் வந்தால் ஊட்டிக்கு போவேன்
பைத்தியம் பிடித்தால் குற்றாலம் வருவேன்"

சென்ற மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை, வார இறுதியைக் கழிக்க எந்தெந்த படங்களைப் பார்க்கலாமென விவாதித்துக் கொண்டிருந்தபோது தென்காசிக்கார நண்பன் மட்டும் ஊருக்குச் செல்வதாகச் சொன்னான். "எங்களோட அப்ப இந்த வாரம் படம் பார்க்க வர மாட்டியா? அப்ப நாங்க உன்னோட ஊருக்கு வர்றோம். இங்கயிருந்து நேரா திருநெல்வேலி போய் அங்கயிருந்து பாபநாசம் போறோம்..பாணதீர்த்தம் ஃபால்ஸ் போயிட்டு அன்னைக்கு சாயங்காலம் தென்காசி வந்துடலாம். உங்க வீட்டுல தங்கிட்டு அடுத்த நாள் குத்தாலம்லா பாத்துட்டு நைட் கிளம்பி வந்துடலாம். நாங்களும் வரோம்னு வீட்டுக்கு போன் பண்ணி சொல்லிடு" என்று திடீர் திட்டம் ஒன்றைப் போட்டு அவனுடன் கிளம்பிவிட்டோம்.

கோயம்பேடு சென்றால் தென்காசி, திருநெல்வேலி இரண்டுக்குமே அல்ட்ரா டீலக்ஸ் அரசுப் பேருந்து காலியாக இருந்தது. முதலில் தென்காசி-குத்தாலம்..அடுத்த நாள் பாபநாசம் என திட்டத்தை மாற்றி தென்காசி பேருந்தில் ஏறி அமர்ந்தோம். பேருந்து எடுக்க ஒரு மணி நேரம் ஆகுமென்றும் திருநெல்வேலி பேருந்து 10 நிமிடத்தில் எடுக்கப்போவதாக சொன்னதும் மீண்டும் திட்டத்தை மாற்றி திருநெல்வேலிக்கே செல்ல பேருந்து மாறி ஏறினோம்.


திருநெல்வேலி சென்றதும் மீண்டும் திட்டத்தை மாற்றிக் கொண்டு தென்காசி பேருந்தில் ஏறிவிட்டோம். நண்பனின் வீட்டிற்குச் சென்று நன்றாக சாப்பிட்டுவிட்டு அவன் அப்பா ஏற்பாடு செய்த காரிலேயே பழைய குற்றாலம் அருவிக்குச் சென்றோம். கூட்டம் நிறைய இல்லை. முதல் ரவுண்ட் குளியலைப் போட்டோம். குளிரில் கைகள் விறைத்துக் கொண்டாலும் அரை மணி நேரத்திற்காவது வெளியே வருவதில்லை என்ற முடிவோடு குளித்தோம். தண்ணீர் அவ்வளவு வேகமாக விழவில்லை. அளவு குறைவு தான்.

அருவியிலும் ம்பு போட்டும் சோப்பு போட்டும் குளிக்கும் நபர்களைக் கண்டால் அப்படியே அடிக்கலாம் போலிருக்கும். வீட்டில் பக்கெட் தண்ணீரிலேயே குளித்து பழக்கப்பட்டு அருவியில் எப்படி குளிப்பது என்று தெரியாமல் வீணாய்ப் போனவர்கள். அருவியில் குளிக்கும் சுகத்தைக் கெடுப்பதே இதுமாதிரி ஆட்கள் தான். அவர்களிடமிருந்து தப்பி ஓரமாக தண்ணீர் வேகமாக விழும் இடமாக ஒதுங்கி நின்று திருப்தியாக குளித்தோம்.


சூடாக பஜ்ஜி, டீ அடித்துவிட்டு அங்கிருந்து ஐந்தருவிக்கு கிளம்பினோம். ஐந்தருவியில் இரண்டு பெண்களுக்கு. மூன்று ஆண்களுக்கு. இரண்டாவதாக உள்ள அருவியில் தண்ணீர் பெரிய பாறையில் பக்கவாட்டில் விழுகிறது. அந்த பாறையில் படுத்தவாறே அருமையாகக் குளிக்கலாம். இங்கும் பாறை சந்தில் உள்ளே சென்று எவனையும் உள்ளே விடாமல் ஒரு மணி நேரம் குளித்தோம்.

ஐந்தருவி - மூனு தான் தெரியுதுல்ல? பெண்களுக்கு 40% :)

சைக்கிளில் வைத்து ஒரு சிகப்பு வண்ண பழம் விற்றுக்கொண்டிருந்தார்கள். ஏதோ பூச்சி மாதிரி இருந்தது. மேலே சிகப்பு வண்ண தோலை உரித்தால் வெள்ளை நிறத்தில் சாப்பிடக்கூடிய பகுதி. இனிப்பாக இருந்தது. பழத்தின் பெயர் வித்தியாசமாக இருந்தது. இப்போது மறந்துவிட்டது. யாருக்காவது தெரியுமா?

அங்கிருந்து குற்றாலம் மெயின் அருவிக்கு வந்தோம். தண்ணீரும் குறைச்சல். கூட்டமும் அதிகம். அதனால் அங்கு குளிக்கவில்லை. பொங்குமாக்கடலில் விழுந்து இறந்து போன கல்லூரி ஜூனியர் நினைவுக்கு வந்து சிறிது நேரம் கல்லூரி நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தோம்.

நான் அதுவரை பாபநாசம் சென்றதில்லை. பாணதீர்த்தம் ரோஜா படத்தில் மதுபாலா ஆடிய அருவி என்பது மட்டும் தான் தெரியும். அடுத்த நாள் காலை தென்காசியிலிருந்து பாபநாசம் கிளம்பினோம். அங்கிருந்து காரையார் அணை சுமார் இருபது கிலோமீட்டர். ரிசர்வ் பாரஸ்ட் ஏரியா. அங்கிருந்து படகில் பாணதீர்த்தம் செல்லவேண்டும். அங்கு கடைகள் எதுவும் இருக்காது என்று டிரைவர் கூறியதால் பாபநாசத்திலேயே வயிறு முட்ட சாப்பிட்டு காரையாருக்குச் சென்றோம். காரையார் அணையில் இருந்து படகு மூலமாக பாணதீர்த்தம் அருவிக்குக் கூட்டிச் செல்கிறார்கள். அணை மிகவும் அமைதியாக இருந்தது. நாங்கள் சென்றபோது மேக மூட்டமாக இருந்ததால் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது.

காரையார் அணையில் படகில் போகும்போது

படகில் கதை பேசியபடி சென்றுகொண்டிருந்த போது நண்பன் என்னை திரும்பிப் பார்க்கச் சொன்னான். திரும்பினால் அந்த பக்கம் பாணதீர்த்தம் அருவி. பார்த்ததுமே வாயடைத்துப் போனது. அருவி அந்தளவு கம்பீரமாக பிரம்மாண்டமாக இருந்தது. படகிலிருந்து ஒத்தையடி பாதை வழியாக அருவிக்குச் செல்ல வேண்டும். நாங்கள் சென்றபோது தான் கல்லூரி மாணவர்கள் குழு ஒன்று கிளம்பியது. அருவியில் மொத்தமே ஐந்தாறு பேர் தான் இருந்தார்கள்.

பார்க்கும்போதே அதிருதுல்ல?

அருவியின் ஒரு பக்கம் மட்டும் கம்பி கட்டி விட்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கத்திற்கு செல்ல முடியாது. தண்ணீர் அந்தளவு வேகமாக விழுகிறது. முன்னால் விழுந்து நிற்கும் தண்ணீரில் விழுந்தால் கூட பிழைப்பது அரிது. ஐந்தருவி, பழைய குற்றாலத்தை விடவும் தண்ணீர் வேகமாக விழுந்தது. அந்த வேகத்தில் தோள்பட்டையிலும் கழுத்திலும் லேசாக வலியெடுக்கவே ஆரம்பித்தது. ஆனாலும் கம்பியைப் பிடித்துக்கொண்டு வேகமாக தண்ணீர் விழும் இடத்திலேயே குளித்தோம். தண்ணீர் மிகவும் இனிப்பாக இருந்தது. அந்த தண்ணீரில் குளித்து அதை குடித்து வாழ்ந்தால் ஒரு நோயும் வராது போல. அந்தளவு சுத்தம். சுவை.

அங்க குளிக்கிற மக்கள் சைஸைப் பாருங்க

குளித்துக்கொண்டிருக்கும் போது கிழே காலடியில் வானவில். பாறையில் எங்களுக்காகவே தோன்றிய வானவில். அப்போது கவிதை தான் எதுவும் தோன்றவில்லை. நல்ல வேளை. அப்படி ஏதாவது சொல்லியிருந்தால் எவனாவது அருவியிலேயே குதித்திருப்பான்.


ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குளித்தோம். கிளம்ப மனமே இல்லை. இதற்கு முன் பல அருவிகளில் குளித்திருந்தாலும் பாணதீர்த்தத்தின் பிரம்மாண்டம் மனதில் குதூகலத்தை ஏற்படுத்தியது. நாங்கள் கிளம்பும்போது இரண்டு படகுகளில் கூட்டம் வந்தது. நாங்கள் கொஞ்சம் தாமதமாக வந்திருந்தாலும் திருப்தியாக குளித்திருக்க முடியாது. இங்கும் கூட்டத்தில் இடிபட்டு ஷஅம்பு சோப்பினால் பாணதீர்த்தமே பிடிக்காமல் கூட போயிருக்கும்.

அங்கிருந்து பாபநாசம் வரும் வழியில் சேர்வலார் அணைக்கு செல்லும் பாதை பிரிந்தது. அதையும் சென்று பார்த்துவிடுவோம் என்று சென்றோம். அங்கிருந்த காவலாளி "யாரைக் கேட்டு உள்ளே வந்தீங்க" என்று கேட்டார். "கேட்கறதுக்கு யாருமே இல்ல..அப்படியே உள்ள வந்துட்டோம்" என்றதும் "சரி பார்த்துட்டு போங்க..போட்டோ எடுக்கக் கூடாது" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். சேர்வலார் அணை மழைத் தண்ணீர் மட்டும் தேங்கி நிற்கும் அணையாம். மேக மூட்டமாக இருந்ததால் பார்ப்பதற்கே அருமையாக இருந்தது. கால் மணி நேரம் அங்கு அமர்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினோம்.

இது சேர்வலார் அணை

இனிப்பு கடை வைத்தால் "சாந்தி ஸ்வீட்ஸ்" என்று வைத்தால்தான் வியாபாரம் நடக்கும் என்று யாரோ சொல்லிவிட்டார்கள் போல. திருநெல்வேலி புது பேருந்து நிலையத்தில் மட்டும் கிட்டத்தட்ட இருபது "சாந்தி ஸ்வீட்ஸ்" கடைகள். அதிலும் 'அக்மார்க்', 'ஒரிஜினல்', 'அசல்' என பட்டங்களுடன். ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ் ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகில் இருக்கிறது. அங்கு சென்று தேவைக்கு அதிகமாகவே அல்வா வாங்கிக் கொண்டோம்.

வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்ல எளிதாக இடம் கிடைத்ததால் ரிடர்னுக்கும் எளிதாக இடம் கிடைக்கும் என்ற எங்கள் லாஜிக் பொய்த்துப் போனது. பேருந்து நிலையத்தில் எக்கச்சக்க கூட்டம். அரசுப் பேருந்தில் ஏறுவதற்கே வாய்ப்பில்லை என முடிவு செய்து மீண்டும் ஜங்ஷன் பேருந்து நிலையம் வந்து தனியார் பேருந்துகளில் டிக்கெட் வாங்க முயற்சித்தோம். அதுவும் கிடைக்காததால் மீண்டும் புது பேருந்து நிலையம் வந்து அடித்து பிடித்து திருவனந்தபுரதிலிருந்து வந்த பழைய அரசுப் பேருந்தில் ஏறி, மதுரை வரை டிரைவர் கேபினில் அமர்ந்துவந்து, மதுரையிலிருந்து கடைசி வரிசைக்கு முந்தைய வரிசையில் ஓட்டை சீட்டைப் பிடித்து ஒரு வழியாக வந்து சேர்ந்தோம். திருநெல்வேலியிலிருந்து மதுரை வரை ஓட்டுநர் வண்டி ஓட்டியதைப் பின்னால் உட்கார்ந்து பார்த்ததில் அவரின் ரசிகனாகிவிட்டேன். அந்த டப்பா வண்டியையும் என்ன அருமையா ஓட்டறாரு.

சென்று வந்து ஒரு மாதத்திற்கு் ஆகிவிட்டது. இன்று ஏதாவது எழுதலாம் என்று தோன்றியதும் பாணதீர்த்தம் நினைவுக்கு வந்தது. இன்னும் அதன் பிரம்மாண்டம் கண்ணை விட்டு அகலவில்லை. அதில் குளித்த சுகமும் மறக்கவில்லை. அருவியில் சீசன் வரும்போதெல்லாம் சென்றுவர வேண்டும். அதுவும் பக்கத்திலேயே நண்பன் வீடு இருக்கும்போது சாப்பாட்டிற்கும் தங்குவதற்கும் கூட பிரச்சனை இல்லை.



?!

ஆக்டிவா/ஸ்கூட்டி ஓட்டும் அக்கா, முன்னால் குழந்தை பின்னால் மனைவியுடன் பைக் ஓட்டும் 35 வயது குடும்பஸ்தர், மாநகர பேருந்து - சென்னை சாலைகளில் வண்டி ஓட்டும்போது இந்த மூன்றில் எதற்கு அதிகம் பயப்படுவீர்கள்?

பழைய மகாபலிபுரம் சாலையில் (இப்போது இராஜீவ் காந்தி சாலை) அலுவலகத்துக்கு பைக்கில் செல்லும் வேளைகளில் ஒவ்வொரு பேருந்தையும் ஓவர்-டேக் செய்யும்போதும் "அப்பாடா உயிரோட ஓவர்டேக் பண்ணிட்டோம்டா" என்று தோன்றுகிறது. உயிர் பயம் அதிகமாகிவிட்டது.

*******************************


அலுவலகத்தில் தொலைந்து போன பொருட்களின் பட்டியலை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்கள். அடையாள அட்டை, ஹெட்ல்போன், கைப்பை, கிரெடிட் கார்ட், பஸ் பாஸ்களுக்கிடையில் சட்டென கண்ணில் பட்டது ' Money purse without money". என்னமா பீல் பண்ணியிருக்காங்க

*******************************


சென்ற ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வரும்பொது அதிசயமாக உட்கார இடம் கிடைத்தது. முன்னால் இருந்து சுண்டல் விற்றுக்கொண்டே ஒருவர் வந்தார். நான்கைந்து பேர் வாங்கினார்கள். கடைசி இருக்கைகளில் யாரும் வாங்கவில்லை. அவர் இறங்கிக்கொண்டே சொன்ன டயலாக் "No peace of mind"

*******************************


பேருந்தில் பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியவர் காஞ்சிபுரம் தாண்டியதும் பேச ஆரம்பித்தார். அவர் கோவிலுக்கு வந்த கதையில் ஆரம்பித்து, அவரது டாக்டர் மகன், மகன் திருமணத்திற்கு வரதட்சனை வாங்காதது, வடிவேலு காமெடி, திருவண்ணாமலை கோயில், ரஜினி, சரத்குமார், காமராஜர், கக்கன், தன் சொந்த கடை, மென்பொருள் துறையில் சம்பளம், அவரது தம்பி மகன், அவருக்கு பார்த்த பெண் ஜாதகம் பொருந்தியும் கலர் கம்மியாக இருந்ததால் கல்யாணம் முடிக்காமல் விட்டது, 1970-ல் நடந்த கொலை கேஸ் என கிண்டி வரும் வரையில் பேசிக்கொண்டே வந்தார். 'உம்' கொட்ட ஆளிருந்தால் வயதானவர்களுக்கு கொண்டாட்டம் தான். வீட்டுக்கு வந்ததும் இதை நண்பனிடம் சொன்னதும் 'நாயகன்' டெல்லி கணேஷ் ஸ்டையில் 'ப்ளாக்கரே' என்று அழைத்து "பிள்ளாக்கு எழுத மேட்டர் கிடைச்சுடுச்சா" என்றான். நான் இளித்தேன்.

*******************************


Johnny Ghaddar படம் குறித்து எழுத வேண்டுமென நினைத்திருந்தேன். நான் பார்த்த அடுத்த நாளே தியேட்டரில் இருந்து தூக்கிவிட்டார்கள். மெலோடியில் மாலை காட்சிக்கே ஒரு இருபது பேர் தான் இருந்திருப்போம். படம் அட்டகாசமாக இருந்தது. நம்மூரில் மொக்கை இந்தி படமெல்லாம் ஓடும். இது போன்ற வெகு சில நல்ல படங்கள் ஊத்திக் கொள்கின்றன. நடிப்பு, திரைக்கதை, காட்சிகள் படமாக்கிய விதம், பின்னணி இசை(ஷங்கர்-எஹ்சன்-லாய்) என அத்தனையும் சிறப்பு. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.

*******************************


வோடபோன் புது விளம்பரம் பார்த்தீங்களா? கலக்கலா இருக்கு.



*******************************

?!

தமிழ் செய்தித்தாள் தலைப்புச் செய்தி போல் ஆச்சரியக்குறியும் கேள்விக்குறியும் சேர்ந்து இருக்கிறதா? இதில் "வாழ்க்கைங்கறது.." என விக்ரமன் பட ஸ்டைலில் ஆரம்பித்து பெரிய தத்துவமே (மொக்கை தத்துவம் தான்) அடங்கியிருக்கிறது. தத்துவம் புரிந்தவர்கள் "எழரைஏழரைஏழரை" என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும். இல்லையெனில் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். தத்துவத்தை சரியாக சொல்பவர்களுக்கு ப்ரைம் ஸ்லாட்டில் எமோஷனல் பேட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்படும். பிடிக்காத தத்துவங்களுக்கு அழுவாச்சி பதிலாக அளிக்கப்படும். ஜிடாக்கில் ஏற்கனவே இந்த தத்துவத்தை அறியப் பெற்றவர்கள் பெட்டி கொடுத்துவிட்டு போட்டியில் கலந்துகொள்ளலாம். வைல்ட் கார்ட் ரவுண்டும் உண்டு.

*******************************

சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் யார்?

A. ரஜினி. B. கஜினி.

இந்த கேள்விக்கான பதிலை உங்கள் மொபைலில் 'KAPPI' என்று அடித்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் ஆப்ஷன் A அல்லது B டைப் செய்து உங்கள் நம்பருக்கே அனுப்பி விடையைத் தெரிந்துகொள்ளுங்கள். :))



A Note in the Margin - Che Guevera



சே குவேரா
ஜூன் 14,1928 - அக்டோபர் 9,1967


The stars drew light across the night sky in that little mountain village, and the silence and the cold made the darkness vanish away. It was - I don't know how to explain it - as if everything solid melted away into the ether, eliminating all individuality and absorbing us, rigid, into the immense darkness. Not a single cloud to lend perspective to the space blocked any portion of the starry sky. Less than a few meters away the dim light of a lamp lost its power to fade the darkness.

The man's face was indistinct in the shadows; I could only see what seemed like the spark of his eyes and the gleam of his front teeth.

I still can't say whether it was the atmosphere or the personality of that individual that prepared me for the revelation, but I know that many times and from many different people I had heard those same arguments and that they had never made an impression on me. Our interlocutor was, in fact, a very interesting character. From a country in Europe, he escaped the knife of dogmatism as a young man, he knew the taste of fear ( one of the few experiences making you value life), and afterwards he had wandered from country to country, gathering thousands of adventures, until he and his bones finally ended up in this isolated region, patiently waiting for the moment of great reckoning to arrive.

After exchanging a few meaningless words and platitudes, each of us marking territory, the discussion began to falter and we were about to go our separate ways, when he let out his idiosyncratic, childlike laugh, highlighting the asymmetry of four front incisors:"The future belongs to the people, and gradually, or in one strike, they will take power. here and in every country".



"The terrible thing is, the people need to be educated, and this they cannot do before taking power, only after. They can only learn at the cost of their own mistakes, which will be very serious and will cost many innocent lives. Or perhaps not, maybe those lives will not have been innocent because they will have committed the huge sin against nature;meaning, a lack of ability to adapt. All of them, those unable to adapt - you and I, for example - will die cursing the power they helped, through great sacrifice, to create. Revolution is impersonal; it will take their lives, even utilizing their memory as an example or as an instrument for domesticating the youth who follow them. My sin is greater because I, more astute and with greater experience, call it what you like, will die knowing that my sacrifice stems only from an inflexibility symbolizing our rotten civilization, which is crumbling. I also know - and this won't alter the course of history or your personal view of me - that you will die with a clenched fist and a tense jaw, the epitome of hatred and struggle, because you are not a symbol (some inanimate example) but a genuine member of the society to be destroyed; the spirit of the beehive speaks through your mouth and motivates your actions. You are as useful as I am, but you are not aware of how useful your contribution is to the society that sacrifices you."



I saw his teeth and the cheeky grin with which he foretold history, I felt his handshake and, like a distant murmur, his formal goodbye. The night, folding in at contact with his words, overtook me again, enveloping me within it. But despite his words, I now knew...I knew that when the great guiding spirit cleaves humanity into two antagonistic halves, I would be with the people. I know this, I see it printed in the night sky that I, eclectic dissembler of doctrine and psychoanalyst of dogma, howling like one possessed, will assault the barricades or the trenches, will take my bloodstained weapon and, consumed with fury, slaughter any enemy who falls into my hands. And I see, as if a great exhaustion smothers this fresh exaltation, I see myself, immolated in the genuine revolution, the great equalizer of individual will, proclaiming the ultimate mea culpa. I feel my nostrils dilate, savoring the acrid smell of gunpowder and blood, of the enemy's death; I steel my body, ready to do battle, and prepare myself to be a sacred space within which the bestial howl of the triumphant proletariat can resound with new energy and new hope.

- சே குவேராவின் The Motorcycle Diaries-ல் இருந்து.