வுட்டுபோனது (அ) வ.பி

:)

:))

:)))))))))))))))))))))))))

:(

:((

:(((((((((((((((((((((((

கலக்கல்!

நல்ல பதிவு!

அட்ரா சக்கை! அட்ரா சக்கை!!

நல்ல கதை!

கொன்னுட்டீங்க! பின்னிட்டீங்க!!

வெளங்குமய்யா!!

போட்டுத் தாக்குங்க!

தகவலுக்கு நன்றி!

உளமார்ந்த வாழ்த்துக்கள்!!

1. அது
5. இது?

7. அவர்
8. இவர்

என்னது படம் நல்லாயிருக்கா? பார்ப்போம்..

நல்ல கட்டுரை!!

செம மொக்கை பதிவு!!

உங்க சொந்த கதை தானே?

ஒன்னுமே புரியல!

+

கயமை!

சோதனை!

கயமைக்கு சோதனை!!

பதிவு டாப்பு!
'தல'க்கு ஆப்பு!!

போய் பொழப்பை பாருங்கப்பு!!

29

பி.கு: ரெண்டு வாரமா போடாம விட்ட பின்னூட்டங்களெல்லாம் இங்க குத்துமதிப்பா போட்டு வச்சிருக்கேன்..ஒவ்வொருத்தரா வரிசைல வந்து அவங்கவங்க பதிவுக்கு ஏத்த மாதிரி வாங்கிக்குங்க மக்களே :D

பி.பி.கு: 29 பின்னூட்டங்கள் தான் இருக்கு, 30 வந்தா முன்னுக்கு வர முடியாதாமே :))

பி.பி.பி.கு: வ.பி - வழக்கமான பின்னூட்டங்கள் ;)

பி.பி.பி.பி.கு: ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்டாகியிருக்கும் அடியேன் திரும்ப வந்துட்டேன்.



எஸ்கேஏஏஏப்ப்!!

ஏற்கனவே தங்கக்கம்பி, பாசத்தும்பி, அன்புத்தும்பி வாழ்த்து சொல்லி அறிக்கை விட்டுட்டார். இருந்தாலும் நானும் ஒரு அறிக்கை விடனும்ல. மக்களே, இந்த ஞாயிற்றுக்கிழமை 11-ம் தேதி இங்கயிருந்து எஸ்கேப். நவம்பர்ல கிளம்பியிருக்க வேண்டியது. "நீ இன்னும் நிறைய ஆணி புடுங்கிட்டு தான் டா போகனும்"னு சொல்லி உட்கார வச்சுட்டாங்க. இப்பக்கூட சண்டைபோட்டு அசால்ட் கேஸ் புக் ஆகி ஏகப்பட்ட பிரச்சனைக்கு அப்புறம் தான் எஸ்கேப் ஆப் மாண்டிவிடியோ.



டிக்கெட் கன்ஃபர்ம் ஆனதும் இங்க கூட இருக்க ஒரு பாசக்காரப் பய 'என்னை விட்டுட்டு போறியாடா'ன்னு ஃபீல் பண்ணினான், "ஃபீல் பண்ணாத மாப்ள,வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்கு போற நேரம் வந்துடுச்சுடா"ன்னு ஒரு பிட்டைப் போட "டேய்,இதெல்லாம் உன் பதிவுல வச்சுக்க...என் கிட்ட இந்த கட்டம்,வட்டம், சதுரம்னு டயலாக் விடாத"ன்னு ஆஃப் பண்ணிட்டான். போற நேரத்துல எதுக்கு பொதுமாத்து வாங்கனும்னு நானும் சைலண்ட் ஆயிட்டேன்.

தென்னமெரிக்க நாடுகளில் ஒரு ரவுண்ட் வரனும்னு நினைத்தேன். அர்ஜெண்டினா மட்டும் தான் போக முடிந்தது. ரியோ டி ஜெனிரோ, இகுவாசு அருவிகளுக்கு செல்ல முடியாதது ஏமாற்றமே.

எட்டரை மாதங்கள். பல நினைவுகள். அனுபவங்கள். ஊருக்கு வந்ததும் மொத்தமா எழுதனும். விடறதில்ல :))

வர்ட்டா!! :)



தெளிவு

"மாப்ள, அவசரமா ஐயாயிரம் ரூபாய் வேணும். உடனே ஏற்பாடு பண்ண முடியுமா?நாளைக்கு காலைல ஊருக்கு வந்து வாங்கிக்கவா?"

சென்னையில் இருந்து அருண் தொலைபேசியில் அழைத்தபோது படிக்கற பையனுக்கு அப்படி என்ன அவசர செலவு என்றுதான் முதலில் தோன்றியது. அருண் என் பள்ளித் தோழன். அப்போது சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் கட்டடக்கலை படித்துக்கொண்டிருந்தான். சென்னையில் அவன் கல்லூரியில் சேர்ந்ததும் அவன் தந்தையும் மாற்றல் வாங்கிக்கொண்டு குடும்பத்துடன் ராமாபுரத்தில் செட்டில் ஆகிவிட்டனர்.

"என்னடா அப்படி திடீர் செலவு?"

"ஒரு பொண்ணை லவ் பண்றேன் மச்சி. அவங்க வீட்டுல அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கோம்"

"டேய், என்னடா சொல்ற? நீ லவ் பண்றதே இப்பதான் சொல்ற. அவசரப்படாதடா. இரு நானும் தினாவும் நாளைக்கு மெட்ராஸ் வரோம். அங்க வந்து நேர்ல பேசிக்கலாம்"

தினகரை போனில் அழைத்து விஷயத்தை சொன்னேன். ஒரு ரிஜிஸ்டர் மேரேஜுக்காவது கையெழுத்து போட்டு நடத்திவைப்பது என் வாழ்வின் லட்சியங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் அது அருணுக்காக இருக்கக் கூடாது. கல்லூரியில் படிக்கும்போது இவனுக்கு கல்யாணம் செய்துவைத்தால் அவன் எதிர்காலம் என்ன ஆவது என்ற யோசனையுடன் மறுநாள் நானும் தினகரும் சென்னைக்குக் கிளம்பினோம். அருணை தாம்பரம் ரயில் நிலையத்தில் சந்திப்பதாகத் திட்டம்.நாங்கள் சென்றபோது கல்லூரி வகுப்பை கட் அடித்துவிட்டு அங்கு எங்களுக்காகக் காத்திருந்தான்.

"பேரு காயத்ரிடா. எங்க பக்கத்து தெருல இருக்காங்க. நான் இங்க ஃபர்ஸ்ட் இயர் சேர்ந்ததுல இருந்தே பழக்கம். இப்ப அவங்க வீட்டுல அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. அவளை நேர்ல மீட் பண்ணவும் முடியல. அவ ஃப்ரெண்ட் மூலமா தான் பேசிட்டிருக்கேன். நாங்க பேசி கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்"

"டேய், பைத்தியக்கார தனமா பேசாத. என்ன விளையாட்டா?"

"இல்லடா சீரியசா தான் சொல்றேன். அவங்க வீட்ல ரொம்ப தீவிரமா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. எங்க மேட்டர் அவங்களுக்கு இன்னும் தெரியாது.

தெரிஞ்சா என்ன நடக்கும்னு சொல்ல முடியாது"

"மாப்ள, முதல்ல எல்லா டீடெயிலயும் எங்க கிட்ட சொல்லு. பொறுமையா பேசி முடிவெடுக்கலாம். அவங்க அப்பா என்ன் பண்றாரு?". தினகர் கேட்டான்.

"அவங்கப்பா ராமாபுரத்துலயே மளிகைக்கடை வச்சிருக்காருடா. அந்த ஏரியா வியாபாரிகள் நல சங்கத் தலைவர்"

"அடப்பாவி. அப்ப அந்தாளுக்கு காண்டாக்ட்ஸ் நிறைய இருக்குமே"

"ஆமா மாப்ள, அடுத்த முறை கவுன்சிலருக்கு நிக்க போறாருன்னு காயத்ரி சொன்னா"

"வெளங்கிரும். டேய், அவரைப் பத்தி விடு. மொதல்ல உன்னைப் பத்தி யோசி. அஞ்சு வருஷ கோர்ஸ். ஏற்கனவே ஒரு வருஷம் அட்டண்டென்ஸ் லேக்ல திருப்பி படிக்கற. இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கு"

"என் சீனியர் ஒருத்தர்ட்ட பேசினேன் டா. அவர் கம்பெனில பார்ட் டைம் வேலைக்கு சேரப் போறேன்"

"எவ்ளோ, ரெண்டாயிரம் சம்பளம் கொடுப்பாங்களா?"

"ஆயிரத்து என்னூறு"

"டேய், நீ ஆர்க்கிடெக்ட் படிச்சு முடிச்சாலே ஆரம்பத்துல நாலாயிரம் ஐயாயிரத்துக்கு மேல கொடுக்க மாட்டாங்க. இந்த ஆயிரத்தி என்னூறை வச்சு குடும்பம் நடத்துவியா? படிப்பு என்னடா ஆகறது?"

"அவளும் பி.எஸ்சி பிசிக்ஸ் படிச்சிருக்காடா. ஏதாவது கம்பெனில வேலை கிடைக்கும். இல்லனா ப்ரைவேட் ஸ்கூல்ல டீச்சரா சேரலாம். அப்படி முடியலைனா நான் படிப்பை நிறுத்திடுவேன்"

"மாப்ள, நடக்கற கதையா பேசு. நீயே யோசிச்சுப் பாரு. இப்ப உங்கப்பா இவ்வளவு செலவு பண்ணி நாலு வருஷம் படிக்க வச்சதை பாதில நிறுத்த போறயா?"

"எனக்கு வேற வழி தெரியலடா"

"என்ன வழி தெரியல? படிப்பை பாதில நிறுத்திட்டு மெட்ராஸ்ல எப்படிடா குடும்பம் நடத்துவ?"

"கோடம்பாக்கத்துல நேத்து போய் விசாரிச்சேன் மச்சி. 800 ரூபாய்க்கு ஒரு சின்ன ரூம் இருக்கு. அதை வாடகைக்கு எடுத்துட்டா ஆரம்பத்துல செலவுக்கு கொஞ்சம் பணம் தேவைப்படும். அதுக்கு தான் உங்க கிட்ட கேட்டேன். அப்புறம் போகப் போக மெயிண்டெயின் பண்ணிக்கலாம்"

"அதெல்லாம் கொடுக்க முடியாது. கடன் நட்பை முறிக்கும்"

"டேய், சும்மா கடிக்காத. சீரியசா பேசு"

"வெண்ண, நாங்க ஆரம்பத்துல இருந்தே சீரியசா தான் பேசறோம். இது வேளைகே ஆவாது. அந்த பொண்ணை இன்னும் ஒன்றரை வருஷம் வெயிட் பண்ண

சொல்லு.தேவைப்பட்டா அவங்கப்பா கிட்ட உங்க லவ்வைப் பத்தி சொல்ல சொல்லு"

"அவ அப்பாட்ட சொல்றதா? வாய்ப்பே இல்ல. அந்தாளு ரொம்ப ஸ்டிரிக்டுடா"

"ஏண்டா இப்படி எல்லா பக்கமும் நெகடிவ் வச்சிட்டு எப்படிடா கல்யாணம் பண்ணிக்கனும்னு யோசிச்ச? ரிஜிஸ்டர் மேரேஜுக்கே எவ்வளவு செலவாகும் தெரியுமா?"

"என் க்ளாஸ் மேட்ஸ் பாரீஸ் பக்கத்துல இருக்க ரிஜிஸ்டர் ஆபிஸ்ல ஒருத்தரை புடிச்சு வச்சிருக்கானுங்கடா. மொதல்ல 4000 கேட்டிருக்கார். இப்ப 2500 ஓகே சொல்லியிருக்காராம். அவனுங்க இந்த ஏற்பாடெல்லாம் கவனிக்கறாங்க"

"அட வீணாப் போனவங்களா, அவனுங்க வேலை தானா இது..உன்னை ஏத்திவிட்டுட்டு இருக்கானுங்களா...எங்கயிருந்துடா வந்து சேர்ந்தீங்க? உனக்கு புத்திமத்தி சொல்லாம அவனுங்களும் இறங்கியிருக்கானுங்க பாரு..அவனுங்களை உதைக்கனும்"

"இல்லடா. நீங்க என் லவ்வை புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க. நீங்க என்ன சொன்னாலும் நான் கல்யாணம் பண்ணிக்கத்தான் போறேன்"

"நல்லா பண்ணி சந்தோசமா குடும்பம் நடத்து ராசா! அதுக்கு முன்னாடி உங்க அக்கா கல்யாணம் நிச்சய்மாயிருக்கறதை யோசிச்சுக்கோ. உங்க அப்பா ரிட்டயர் ஆகப்போறாரு. அதை மனசுல வச்சுக்கோ. அப்படியே உனக்கு இருக்க ஆஸ்துமா ப்ராப்ளத்தையும் யோசிச்சுக்கோ"

"அக்காவுக்கு அடுத்த 3-ம் தேதி திருச்சில கல்யாணம் முடிஞ்ச அப்புறம் தான் 7-ம் தேதி இங்க வச்சு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணலாம்னு இருக்கேன். வீட்டுல எல்லாரும் ஊர்ல தான் இருப்பாங்க. பிரச்சனை இல்ல"

"எல்லாத்தையும் பக்காவா ப்ளான் பண்னியிருக்கியேடா பாவி. எங்கள பணம் வாங்க மட்டும் கூப்பிட்டியா?"

"டேய் என்னடா இப்படி சொல்லிட்ட?"

"மச்சி இங்க பாரு. எனக்கு இந்த லவ் பண்ணனும், என்ன தடை வந்தாலும் அதே பொண்ணை கல்யாணம் பண்ணனும் அது இது எல்லாம் ஓகே. ஆனா உனக்கு இப்ப அதுக்கான டைம் இல்ல. இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு கோர்ஸை முடிச்சதும் இதை நீ சொல்லியிருந்தா நாங்களே எங்க செலவுலயே கல்யாணம் பண்ணி வச்சிருப்போம்.

மொதல்ல படிச்சு முடி ராசா. இதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். அந்த பொன்னுகிட்ட வேணும்னா கூட நாங்க பேசறோம். அவளை மேல படிக்கனும்னு அவங்க வீட்டுல கேட்க சொல்லு. நல்லா யோசி. மூளையை கொஞ்சம் யூஸ் பண்ணு"

இப்படியாக கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் தாம்பரம் ரயில் நிலைய ப்ளாட்பாரத்தில் அவனுடன் விவாதம் நடந்தது. ஒரு வழியாக அவன் மனதை மாற்றினோம்.

அப்போதைக்கு கல்யாணத்தை தள்ளிப்போடுவதெனவும், அப்படி காயத்ரிக்கு திருமணம் நிச்சயிப்பது நிலையானால் அடுத்து செய்வது குறித்து யோசிக்கலாம் எனவும் அவனைத் தேற்றி பக்கத்திலிருந்த பாருக்கு அழைத்து சென்று தாகசாந்தி செய்து அனுப்பி வைத்தோம்.

இது நடந்து இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும். காலப்போக்கில் அருண் காயத்ரியை மறந்தான். அரியர்ஸ் பல வைத்தாலும் ஒரு வழியாகப் படிப்பை முடித்து இப்போது டெல்லியில் வேலை செய்கிறான். அவனுடன் உடன் வேலை பார்க்கும் ப்ரியங்கா என்ற பெண்ணுடன் சுற்றுவதாக தினகர் போன வாரம் தொலைபேசியில் சொன்னான்.

நான் ஆறு மாதங்களுக்கு முன் வீட்டை எதிர்த்து பதிவுத் திருமணம் செய்துகொண்டேன். என் காதல் மணைவி கவிதா இங்கு ஒரு சிறு கம்பெனியில் வேலை செய்கிறாள். நான் இன்னும் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்.